திங்கள், 30 ஜூலை, 2012

வம்பு பேசலாம் !


பொதுவாக எழுதுகிற கையும், ________________ நிற்காது என்கிற பழமை உண்டு .நானும் விதி விலக்கல்ல ! எனக்கு தெரிந்ததில் ஆரம்பித்து தேடுகின்ற பொது என்னை இடறியது பல நல்ல விசயங்கள் .

பரீட்சைக்கு படிக்கும்போது எதையாவது மனப்பாடம் செய்யலாம் என்கிறபோது கவிதை வரும் நல்ல விளம்பரம் காதில் விழும் அதை நோக்கி மனம் நகரும் ..அது போல நான் தெரிந்த பார்முலா 1 போட்டிகளை எழுத தொடங்கினேன் ( Logic ).அப்புறம் கொஞ்சம் கவிதை போல சில வரிகளை பதிவிட்டேன்( Romance ) ஆனாலும் ஏதோ நெருடல் இருந்துகொண்டே இருந்தது


அது அன்றாட நிகழ்வுகள் ...இன்னைக்கு காலையில் சன் தொ.கா வழங்கும் வாங்க பேசலாம் எனக்கு வம்பு பேசலாம் என்பதாக பட்டது .பாரதி பாஸ்கர் அஸ்ஸாமில் ஒரு பெண்ணை இருபது காட்டுமிராண்டிகள் அசிங்கபடுத்தியதை தவறு என்பதாக சொல்லும்போது ராஜா அந்த பெண்ணுக்கு, அதுவும் +1 படிக்கிற பெண்ணுக்கு குடிக்கிற இடத்தில என்ன  வேளை? என்று கேட்க்க நீங்கள் தவறை விட்டுவிட்டு அதற்க்கு தண்டனை தருவதை விட்டுவிட்டு அந்தப்பெண் அங்கு என்ன வேலை என்கிறீர்கள் இது தப்பு என்று என்று வம்பு பேசுமாறு ஆகிவிட்டது .இருவருக்குள்ளும் உள்ள அந்த பட்டிமன்ற புத்தி விசயத்தை வேறுபக்கம் இழுத்து விட்டது .

அது போல திருப்பூரில் டாஸ்மாக்கில் தண்ணி அடித்துவிட்டு வருபவர்களை நூறு அடிதள்ளி நின்று கொண்டு அதுவும்  ஏதாவது மூலை ஒன்றில் நின்று கொண்டு வாய் ஊத சொல்லும் அபத்தம் போல !

 பையனின் பள்ளிகூடத்தில் பெற்றோர்கள் மீட்டிங் கூப்பிட்டு நமக்காக பேசுவதுபோல ஆரம்பித்து அடுத்த கட்டணத்தை கூட்டும் குண்டை போடுவது 

இது  போல பல  இடறிய விசயன்களை பேசலாமா ..

1 கருத்து: