வியாழன், 18 ஏப்ரல், 2013

எதிர் காற்றே சுகம் !


 நாழுபேர் பார்க்கும் படி !!


மிக சாதரணமாக யாராக இருந்தாலும் எடுத்து கவிழ்க்கும் வார்த்தையில் ஒன்று , நாழுபேர் பார்க்கும் படி நடந்து கொள்ளக்கூடாது .ஒருவேளை இந்த வார்த்தை மிக பெரிய அர்த்தம்  இருந்தாலும் இதனால் எதிர்பதமான சிந்தனையை எற்படுத்திகொள்ளும் நபர்கள் ஆதிக்கம் இந்த வார்த்தையில் ஆட்சி செய்கிறது .ஒருத்தர் நடந்தா ,நின்றால் ,சிரித்தால் ,அழுதால் ,முன்னேறினால் ,பின்னெறினால் ,வாழ்ந்தால் ,செத்தால் ,இப்படி எதர்க்கு எடுத்தாலும் வேறு வேலை இல்லாமால் நம்மை கவனிப்பதே அடுத்தவர் அல்லது அடுத்தவள் வேலை என்ற மனோ மயக்கம் நம்மை சுற்றி இப்படி சலிக்காமல் எப்படி சகல இடத்திலும் துறத்துகிறதோ தெரியவில்லை .

         சொல்லபோனால், நம் சிந்தனையை நாம் இந்த நேரத்தில் இப்படி இருக்கும் அப்படி இருக்கலாம் என்ற தீர்மாணம் இல்லாத போது அடுத்தவன் நம்மை பற்றி இப்படித்தான் யோசிப்பான் என்ற கற்பனை இருக்கே அது மாதிரி ஒரு நினைப்பை அடுத்த கிரகத்தில் கூட பார்க்க முடியாது .ரொம்ப சின்ன பிள்ளைத்தனமான சிந்தனை.

உங்களை ஆளும் நாழ்வர்..


நாழுபேர் பார்த்தா என்ற வார்த்தை எப்படி வந்து இருக்குமோ என்ற மெல்ல நமக்கு நாமே  திட்டத்தினால், ஏன் என பார்க்கும் போது ஒரு நல்ல விசயம் எதிர்படுகிறது . அது நம் உடல் பொறுள் ஆவி சிந்தனை ,செயல் , அறிவு , எல்லாம் தந்தது யார் ?                                   

            முதலில் உடல் உயிர் தந்த தாய் ,தந்தை ,படித்தாலும் படிக்காவிட்டாலும் ஏதோ ஒரு தொழில் செய்தாலும் குரு அவசியம் ,அடுத்து துணைவி ,அல்லது துணைவன்.(இது இல்லாதவன் சாமியார் என்ற சௌகர்யமான பெயரோடு அலைபவர் அவருக்கு இது பாதிக்காது. ) நாம் வாழும் வாழ்க்கை முதலில் தாய் தந்தை என்ற இரண்டுபேரும் பார்த்து வளர்ந்து இருக்கிறோம் .அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையும் ,ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவர்களை விலகி பிறகு வாழும் நம் வாழ்கை அவர்கள் மெச்சவில்லையானாலும் எட்டி பார்த்து விமர்சிக்காமல் இருந்தாலே போதுமானது .அடுத்து நம்மை படிப்பிலோ தொழிலிலோ குருவாக இருப்பவர் கற்று கொடுத்ததை சரியாக செய்வது அல்லது மதிப்பது .சரி அடுத்து நான்காவது துணைவி அல்லது துணைவனுக்கு செய்ய வேண்டிய கடமை அதில் குறை வைத்துகொண்டு ஊரே என்னதான் மெச்சினாலும் வீண் பெயர்தான் .

பேங்கில் லோன் கேட்பது.. 


இந்த நாழுபேர் மட்டும்தான் முக்கியம் நம் வாழ்க்கைக்கு .மற்றபடி வந்து போவோர்களுக்கெல்லம் நம் வாழ்க்கையில் பதில் சொல்லிக்கொண்டு இருந்தால் நமக்கு நாமே குழிதோண்டிகொள்ளும் திட்டத்திர்க்கு ஸ்டேட் பேங்கில் லோன் கேட்பது போலத்தான் .அது மட்டுமல்ல இந்த குறிப்பிட்ட நாழுபேர்  சிந்தனை மட்டுமேதான் நம்மை சுற்றி ஒரு அதிர்வுகளை ஏற்படுத்திகொண்டே இருக்கிறது .இவர்களை மறுத்து நாம் சிந்திக்கும் அல்லது புறம் தள்ளி யோசிக்கும் சிந்தனை நன்மை தருவதே இல்லை. பெறும்பாலான விபத்துக்களில் காரணமானவர்கள் வீட்டில் சண்டையிட்டு சாலைக்கு வந்தவர்கள் என்று சொல்லப்பட்டு வருகிறது .

எதிர்காற்றை விரும்புங்கள் . 


அப்படியே நம்மை பற்றி மற்றவர்கள் நினைப்பதை உணர்ந்தால் அதை எதிர்காற்று போல நினைத்து முன்னேறினால் நல்லது .பின்னே இருந்து அடிக்கும் காற்று முன்னே தள்ளுவது போல தோன்றும் ஆனால் அது அதன் இலக்கை நோக்கி தள்ளி திசை மாற்றுகிறது என்பதை நம் காதுக்கு வராத சொந்தமாக எவனோ நினைக்கிறான் என்ற நம் கற்பனையை சொல்லாம் .ஆனால் எதிர்காற்று நாம்மை தூண்டும் அது ஆரோகியமானது கூட  எனவே  அது சுகம்.எதிர்காற்றை விரும்புங்கள் . 

கொடுத்த வாக்குகள்..


இந்த இடத்திர்க்கு ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதை ஞாபகத்திர்க்கு வருகிறது 

. "அடர்ந்து இருள்படர்ந்த அழகான காடு கொடுத்த வாக்குகள் உண்டு காப்பதர்க்கு கடந்து போகவேண்டும் இன்னும் பலகாத தூரம்"..

1 கருத்து:

  1. வித்தியாசமான சிந்தனை...
    எதிர்காற்றை விரும்புவதற்கு முன் நம்மை முதலில் விரும்ப வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்...

    தொடர வாழ்த்துக்க்கள்...

    சிறிய அலசல் : நேரம் கிடைப்பின் வாசிக்கவும்... நன்றி...

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post_28.html

    பதிலளிநீக்கு