செவ்வாய், 30 ஏப்ரல், 2013

கொடைக்கானலின் - தற்கொலை முனை ( sucide point )




            சன் டி.வி சூரிய வணக்கம் தொலைந்து போய் அந்த இடத்தில் நேற்று காஞ்சிபுரத்தில் பட்டு சேலை நெசவு பற்றி ஒரு அழகான தொகுப்பு வெளியானது .சரி ,இனி இப்படித்தான் இருக்கும்போல என்பதை தகர்த்தது ,இன்றைய நிகழ்சியில்  கொடைக்கானல் தற்கொலை முனை ( sucide point )  பகுதியிலிருந்து இந்த உலகை விட்டு உயிரை பிரித்து கொள்ளும் உடல்களை மீட்க்கும் ஜோசப் என்பவரின் நேரடி உடல் மீட்க்கும் பேட்டி ஒளிபரப்பபட்டது .





இந்த கோடை வெய்யிலில் கொடைக்கானலை நினைத்தால் நமக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது கடல் மட்டத்திர்க்கு 6998 அடி உயரமும் அதிக பட்ச வெப்பமான 19.8ºC யும் குறைந்த பட்சம்  11.3 ºC ஞாபகம் வரும் ஆனால் அதனுள் சுமார் 5000 அடி ”பசுமை பள்ளத்தாக்கை ”ஒரு சேர காணும் பகுதியான "Sucide Point/Green Valley View" ஒரு மரணக்கிணராக ( கல்ஃப் ஆஃப் மெக்சிகோ கடல் பகுதியில் இருக்கும் எண்ணெய்க் கிணறு -  பிரிட்டிஷ் பெட்ரோலியம் (BP) என்ற எண்ணெய் நிறுவனம் அல்ல ) இங்குள்ள மக்களால் பேசப்படுகிறது என்பது ஒரு சோகம் 
.

ஜோசப் தன் தந்தை வழியாக இந்த தொழிலை (   தற்கொலை முயற்சியில் உயிர் இழந்த)  உடல் மீட்க்கும் வேலையை கடந்த 20 வருடமாக  செய்து வருவதாகவும் ,தனக்கு 50 மாடுகள் இருப்பதாகவும் தான் பணத்திர்காக மட்டும் இந்தவேலையை செய்வதில்லை என்கிறார் . இறந்தவரின் உறவுனர்களின் கோரிக்கையை ஏற்று காவல் துறை அனுமதியுடன் இதில் ஈடுபவதாகவும் தனக்கு இந்த தொழிலில் உதவியாக வெவ்வேறு பணியில் உள்ள பலரும் உதவுவதாகவும் சொன்னார் ,அதோடு அவர் சொன்ன இன்னொரு தகவல் ,நாங்கள் தேடி போகும் உடலுக்கு சொந்தக்காரர்களிடம் அவர் அணிந்து இருந்த உடைகளின் வண்ணம் ,கழுத்துக்கு கீழ் உள்ள மச்சம் போன்ற அடையாளங்களை கேட்டு கொள்வோம் அது பொருந்தி இருந்தால் மட்டுமே அந்த உடலை எடுத்து வருவோம் .ஏனென்றால் நாங்கள் தேடிப்போகும்போது பல உடல்கள் அங்கு கேட்க்க ஆள் இல்லாமல் கிடக்கும் .அதை அப்படியே விட்டு விடுவோம் என்று அதிர வைக்கிறார் .


மேலும் நாங்கள் தேடி கண்டுபிடித்த   அந்த உடலை ஒரு சாக்கு பையில் கட்டி சுமார் 3500 அடிக்கு மேல் ,பாதையே இல்லாத காட்டு விலங்குகளின் ஆபத்துகளுக்கு இடையேயும் மழை , பனிமூட்டம் போன்ற இயற்கை இடர்களை தாண்டி  அந்த உடலை பல இடங்களில் இழுத்து கொண்டேவும் சில இடங்களில் சுமந்து கொண்டு வருவதாகவும் சொல்கிறார். அதை படம் பிடித்து சன் டி.வி காட்டும் போது - ஒரு இறப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் இறந்த பிறகும் அது இவ்வளவு வலிகளை தரவேண்டுமா என்ற கேள்விக்கு நம்மிடம் எப்போது பதில் வரும் ? தெரியவில்லை .


             அதிலும் சில பேர் யாரையோ பழிவாங்குவதாக நினைத்து கொண்டு இங்கு வந்து தன் உயிரை மாய்த்து கொண்ட பின் காவல்துறைக்கு சொல்லி ,ஜோசப்பிடம் மன்றாடி , வேதனையுடன் காத்து இருந்து பிறகு அந்த உடலை பெற்றுகொண்டு ஈமக்கிரியை செய்து அது வரை எத்தனை தவிப்பு , கெஞ்சல் ,அவமானம் ,இறந்த பிறகு யாரை பழிவாங்கி என்ன செய்ய போகிறார்கள் ?இதை எப்படி இறந்தவர்களிடம்  கேட்பது ?


இதில் இன்னொரு புள்ளி விவரம் பயமுறுத்துகிறது .உலகில் வருடதிர்க்கு 1/2 மில்லியன் மக்கள் தற்கொலை செய்து கொள்கிறார்களாம் அதில் இந்தியர்களின் பங்கு 20 சத விகிதமாம். இந்தியாவில் வருடத்திர்க்கு 1 லட்சம் பேர் தற்கொலையில் மட்டும் இறக்கிறார்களாம் .அப்படியானல் உலகமே நம்மிடம் ஆன்மீகமும் , குடும்ப வாழ்வையும் ,கற்று  கொள்ள ஓடோடிவந்து கொண்டு இருக்கும் போது நமக்கு என்ன ஆகி விட்டது ? ஏன் இறப்பை தேடி ஓடி கொண்டு இருக்கிறோம் தெரியவில்லை .இதில் இன்னொரு கவனிக்க தகுந்த விசயத்தை ஜோசப் சொல்கிறார் அப்படி இந்த தற்கொலை முனையை தேடி வருபவர்களில் 90 சதவிகிதம் பேர் ஆண்களாம் .தன் உயிரையே மாய்த்து கொள்ளும்  அளவுக்கு போகும் இந்த ஆண்கள் எதர்க்கு பெண்களை பலவீனமான பாலினம் ( weaker sex ) என்று  பெண்களை பார்த்து சொல்லிகொண்டு அலைகிறார்களோ ? சோகத்திலும் ஒரு வேடிக்கை ! 

              அதிலும் இப்படி இறப்பவர்களில் 37.8 சதவிகிதம் 30 வயதுக்கு கீழே உள்ளவர்களாம் .இந்தியா உலக சுகாதார அமைப்புக்கு 2009 ஆம் ஆண்டுவரை கொடுத்த தகவல் அறிக்கைப்படி உலகின் மொத்த தற்கொலையில் 10.5 நாம்தானாம் இதனால் உலகின் மொத்தம் 107 ! நாடுகளில் நாம் 45 ஆவது இடம் என்பது கூடுதல் தகவல் 

             சரி எது எப்படியோ தற்கொலை மனிதாபிமானப்படியும் ,சட்ட ரீதியாகவும் தவறு என்பதை சத்தம் போட்டு சொல்லிகொண்டு  அலைவதை விட்டு விட்டு ஏன் என்ற காரணத்தை மெல்ல புரிந்து  அதை பற்றி புத்தகங்கள் , மீடியாக்கள் , கல்வி கூடங்கள் ,வீடுகள் , புரிந்து கொண்டு பேச தொடங்கினால் ,கொடைக்கானல் குறிஞ்சி பூக்கள்  சுகமாக பூக்கும் தினமும் கூட ..

3 கருத்துகள்:

  1. ஒரு நிமிட பைத்தியக்காரத்தனம்...

    எப்போதோ (தற்கொலை முனை) பசுமை பள்ளத்தாக்கு என்று பெயர் மாற்றப்பட்டு உள்ளது...

    பதிலளிநீக்கு
  2. சென்ற வாரம் கொடைக்கானல் சென்று வந்தோம். நிறைய தவறவிட்டு விட்டோம்.

    பதிலளிநீக்கு
  3. அந்த பட்டுப்புடவை நெசவாளர் காட்சி இரண்டு நாட்களாக என் தூக்கத்தை கெடுத்தது.

    பதிலளிநீக்கு