வியாழன், 30 மே, 2013

போலிஸ் ,குற்றவாளி ,நாங்கள் .


 போலிஸ் ...
                                   தருமபுரி மாவட்டதில்  புற நகர் பகுதியில் அந்த பிரதான சாலையை ஒட்டி இருக்கும் மூன்று வீடுகளை குறிவைத்து  வந்த அந்த டெம்போ ட்ராவலர் வேன் மெதுவாக யார் கண்ணிலும் படாமல் ஓசை குறைத்து  நின்றது . உள்ளே இருந்து மூன்று நபர்கள் இறங்கினார்கள் .மிக சாதாரண தோற்றத்தை கொண்ட அவர்கள் உடை சுருக்கங்கள் வெகு தூர பயனத்தை அனுபவித்ததாக சொன்னது .முதல் வீடு நோட்டமிட்டபோது அது பூட்டி இருந்தது .வீட்டூக்கு வெளியே ஒரு ஆடு இவர்களை கண்டு மிரண்டு பின் வாங்கி தவித்தது .


அடுத்தவீட்டை நெருங்கினர்கள் .

ஒரு பெண் பாத்திரம் கழுவி கொண்டே , யாரு ? என்றது .

வந்தவர்களில் ஒருவர் ரவி இல்லையா ? என கேட்டு கொண்டே அந்த பெண்ணை நெருங்கினார் .

அதர்க்குள் ஒரு மூன்று வயது பெண் வீட்டுக்குள் இருந்து இவர்களை பார்த்து கொண்டே ஓடிவந்து,

அந்த பெண்ணிடம் ,யம்மா தம்பி அழறான் என்றது .

அதர்க்குள் மூன்றாவது வீட்டுக்கு நெருங்கய மூவரில் ஒருவர்  உள்ளே நோட்டமிட்டார் ..அந்த வீட்டின் அமைப்புக்கு சம்பந்தமில்லாமல் அந்த பொருள் அவர் கண்னை உறுத்தியது .
மற்ற இருவர்களையும் நோக்கி இங்கே வாருங்கள் என்று அவர் வேகமாக கையசைக்க,
 அதர்க்குள்,
அந்த பெண் வீட்டுக்கு பின்புறமுள்ள காட்டை நோக்கி,
அக்கா என்று ஒரு வித பயத்துடன் கூப்பிட ...
அந்த மூன்று வயது சின்ன பெண் எதுவுமே புரியாமல் அழ தொடங்கியது ...

                  வந்தவர்கள், குற்றப் புலனாய்வு துறை ( Crime Branch ) அவர்கள் தேடி வந்தது ஒரு திருட்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக கருதப்படும் ரவி என்ற   நபரை   . ஏற்கனவே அவன் பல வழக்குகளில் சம்பந்தபட்டவன் .அவர்கள் புதியதாய் ஒரு  குறிபிட்ட திருட்டு குற்றதின் குற்ற முறை மற்றும் குற்ற பின்னனி இந்த ரவியின் குற்ற பதிவுகளுடன் ஒத்து போனதால் தேடிப்போனார்கள் அங்கு .ரவி அங்கு வருவதே இல்லை என வீட்டார்கள் சொன்னார்கள் .
        ஆனால் அவர்கள் பார்த்த மூன்றாவது வீட்டு ஆள் பெயர் விசாரித்தபோது  இது வரை அவன் எந்த காவல்துறை குற்றவாளி பட்டியலில் இல்லாதவன் . அவன் வீட்டில் பார்த்தது வித்தியாசமாக உணர்ந்தது விலை உயர்ந்த வெளி நாட்டு ஒரு சுவர் கடிகாரம் .

             வந்து இருந்த காவல் துறையின் ஒரு உதவி கண்காணிப்பாளருக்கு வேறு ஒரு பழையதிருட்டு குற்றதில் காணாமல் போன பட்டியலில் இந்த விலை உயர்ந்த ஒரு சுவர் கடிகாரமும் ஒன்று என உள்ளுணர்வு சொல்லியது .காலம் நேரம் பார்க்காமல் குற்றவாளியை தேடி அலையும் தமிழ்நாட்டு காவல் துறையின் மிக பெரிய சொத்து இந்த உள்ளுணர்வுதான் .

                உடனே ,இழந்தவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது  .அப்படியானல் இந்த வழக்குக்கும் ஏற்கனவே தேடப்படும் குற்றவாளி ரவிக்கும் இந்த புதிய நபர் சந்தோஷ் என்ற சந்தோஷ் குமாருக்கும் தொடர்பு இருப்பது ஒரு புதிய கோணத்தில் குற்றத்தை தேட காவல்துறைக்கு வேலை வந்தது .

             இது மேலும் ஒரு தலைவலி .தேடி வந்த குற்றவாளியும் இல்லை .ஏற்கனவே போய் கொண்டு இருக்கு தேடலில் புதிய திருப்பம் வேறு ஏற்பட்டுவிட்டது .காவல்துறை உள்ளூர் துப்பு தரும் இன்பார்மர்களிடம் இந்த வீட்டை கண்காணிக்க அறிவுறுத்திவிட்டு திரும்பியது .


குற்றவாளி ...
                               சந்தோஷ் ஒரு சோம்பேறி .ஒரு வேலையும் தொடர்ந்து செய்ய பிடிக்காது .ஆனால் கல்யாணம் ஆன மூன்று வருடத்திர்க்குள்  சாந்தி . சச்சின் என்ற இரண்டு குழந்தைகள்  .அதனால்தான் புதிய வேலைக்கு போக ஆசைப்பட்டு கார் ஓட்ட கற்று கொண்டான் சில மாதங்களாக லோக்களில் உள்ள டாடா ஏஸ் (சின்ன யானயை 0 மூலம்   சின்ன ,சின்ன வாடகை போனான் .சொற்ப வருமானம்தான் .

                அவன் மனைவிக்கு அவன் கூலி வேலைக்கு போவது மட்டும்தான் பிடித்தது .அதனால் தன் அப்பாவின் உதவியை கார் வாங்க சந்தோஷ் கேட்க சொல்லியும் மறுத்து வந்தாள் .

               ஆனால் சந்தோசுக்கு வெகு நாளாக ஒரு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை .இதை அவன் அண்ணனின் சொன்னான் .அவன் தன்னுடய நண்பன் ரவியிடம் சொல்ல,அதர்க்கு ரவி , சரி நம்முடன் வரட்டும் , ஒட்டும் திறமை பார்த்து ஏற்பாடு பண்ணலாம் என சொல்ல, அடுத்தவாரமே சந்தோஷ் அவர்களுடன் சேர்ந்து கொண்டான் .
அவனுக்கு தேவை கார் .

              முதன் முறையாக ஆம்னி வேன் ஓட்ட கொடுத்தார்கள் .அவர்கள் சொன்ன ஊர் வரை ஓட்டி போனான் . ரவி அண்ணன் வண்டி நன்றாக ஓட்டுவதாக  பாராட்டினார் .
             ஊருக்குள் சில இடங்களில் வண்டியை நிறுத்த சொல்லிவிட்டு ,அண்ணனும், ரவியும் போய் வந்தார்கள் .திரும்ப வந்தவுடன் ,ஒரு தியேட்டருக்கு வழி கேட்டு போக சொன்னார்கள் .


மதிய நேரம் .ஒரு திரைபடம் அரங்கு போனார்கள் .
மாலை ,படம் விட்டு தியேட்டரை விட்டு வெளியேறும்போது ஏற்கனவே போன இடத்திர்க்கு போக சொன்னார்கள்.

நீ போன் எங்களுக்கு பண்ணவேண்டாம் .நாங்கள் போன் பண்ணினால் வந்தால் போதும் அது வரை வேறு  எதாவது இடத்திர்க்கு போய் வா என்று  சொல்லி விட்டு போனார்கள் .

போகும் போது காரின் சீட்டுக்கு அடியிருந்து  ஒரு கனமான பேக்கை அண்ணன் எடுத்து கொண்டு போனான் .
அவர்கள் போவதை பார்த்து விட்டு ,எங்கு போவது தெரியாத ஊரில் யோசித்து கொண்டே சந்தோஷ் வண்டியை கிளப்பினான் ...


      போன் வந்தது .அவசரமாக பேசினார்கள் .முன்னால் சொன்ன இடத்திர்க்கு பக்கத்தில் வர சொன்னார்கள் .கையில் மேலும்   ஒரு பையுடன் ஏறினார்கள் .வேகமா ஓட்டு என்று அண்ணன் சொல்ல ,நேரே வண்டியை சேலம் விடு என்றார்கள் .அவர்கள் எதுவும் அப்புறம் பேசவில்லை .அண்னன் தூங்கிவிட்டான் .ரவி மட்டும் மெயின் ரோடு வழியாக செல்லாமல்  வழி சொல்லி கொண்டே வந்தார் .

நாங்கள் ...

     அந்த வெளி நாட்டு சுவர் கடிகாரத்திர்க்கு சொந்தகாரருக்கு நான் நண்பன் என்பதால் இதுவரை இப்படி நடந்த   இந்த மேற்கண்ட சம்பவங்களை ,திருட்டில் பிடிபட்ட மூவரில் ஒருவனான் சந்தோஷ்  காவல் துறையிடம் பிடிபட்ட பிறகு அவனுடன் இருந்த மூன்று நாட்களில் என்னிடம் சொன்னான்
   பொதுவாக இந்த மாதிரி திருட்டை தொழிலாக ஆரம்பிப்பவர்கள் எதாவது ஒரு காரணம்   சொல்கிறர்கள் .பிறகு சிக்கி கொண்டு தண்டனை அனுபவித்த பிறகு மீண்டும் வேறு வழி இல்லை என்றும்  அப்படி பட்ட முத்திரை குத்திய பிறகு, திருந்த வாய்ப்பு குறைவு என்பதாக சொல்லிகொண்டு அதையே  தொடர்கிறார்கள்..


Recovery

       இந்த வழக்கில் இப்போதைக்கு மாட்டி கொண்டவன் சந்தோஷ்.அவன் தாங்கள் திருடிய குற்றத்தை ஒப்புகொண்டு திருடிய பொருள்களை விற்ற இடங்களை! காட்டி கொடுப்பதாக காவல்துறையும்  மற்றும் திருடபட்ட  பொறுளை அடையாளம் காட்ட நாங்களும் (நண்பருக்கு துணையாக நானும்) கிளம்பினோம் ..இம்மாதிரி பொறுள் மீட்டலுக்காக  போவதர்க்கு  Recovery என்பதாக காவல்துறை சொல்கிறது


வீடியோ படம்.
         இம்மாதிரி பொறுள் மீட்டலுக்கு ( Recovery ) போகும்போது காவல்துறை  தன்னுடன் ஒரு வீடியோ படம் எடுப்பவரை கூட்டிகொண்டு போகிறது .இந்த இடத்தில் நான் வைத்து இருக்கவோ ,விற்கவோ திருடிய பொறுளை கொடுத்தேன் என்று குற்றவாளி சொல்பவரை விசாரிக்குபோது வீடியோ படம் எடுப்பதர்க்காகவாம் !


 அதிர்ச்சி !!

      சந்தோஷ் பெங்களூர் வரை, மூன்று நாட்களில் பல இடங்களை காட்டினான் .அதில் பெரும்பாலும் நகை கடைகள் என்பது அதிர்ச்சி தந்த விசயம்.
மற்றவர்கள் ப்ரோக்கர்கள் போன்ற இடைதரகர்கள் ஒத்துகொண்டவர்களிடம்  நகை பெற்றுகொள்ளபட்டு அவர்களிடம் எழுதி வாங்கப்பட்டது .ஒத்துகொள்ளாதவர்களிடம் வழக்கு பதியபட்டது .காரணம் குற்றவாளியே நேரில் வந்து சொல்லியும்  அவர்கள் இல்லை மறுப்பதால் அதை அவர்கள் பக்கம்  நிரூபிக்க வேண்டும் என்பதால் .

குற்றவாளி்யா நான் ..
          ஒரு இடத்தில் இம்மாதிரி ஒரு விசாரணையின் போது கூட்டம் கூடி விட்டது .அந்த பகுதியில் உள்ள அனைத்து நகை கடைகளும் மூடிவிட்டு,கடைக்காரர்கள் ( அவர்கள் சங்கம் ) ஒன்று கூடி காவல்துறையை எதிர்த்து குரல் கொடுக்க,வழக்கம்போல பத்திரிக்கை துறையும் கேள்விபட்டு ஓடிவந்து சரமாரியாக நாங்கள் இருந்த காவல்துறை வேனுக்குள் இருந்த குற்றவாளியை படம் எடுக்க முன்னேற   அப்போது வேனுக்குள் நான வேனின் சீட்டில் உட்கார்ந்து இருக்க, எனது சீட்டுக்கு பின்னால்  குற்றவாளியை மறைத்து கீழே உட்கார வைத்திருந்தார்கள் ( மற்ற காவல்துறையின பிரச்சனையை எதிர்கொள்ள வேனின்  கண்ணாடிகள் அனைத்தும் ஏற்றி வேனின் கதவுகள் அன்னைத்தும் பூட்டி விட்டு வெளியே இருந்தார்கள்) .போட்டோ எடுத்த பத்திரிக்கை தோழர்களிடம் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை - அதனால் அடுத்த நாள் பத்திரிக்கையில் குற்றவாளி என்ற இடத்தில் என் படம் வேனுக்குள் இருப்பது போல வந்தது .


இழந்தவனே ஜாமீன் கொடுக்க  வேண்டும் .

          மீட்ட பொறுளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து ,பிறகு ஒருநாள் நண்பரை அழைத்து ஒரு நகை மதிப்பீட்டாளர் முன் மீட்ட நகைகள் சோதிக்கப்பட்டு ( ஒருவேளை மீட்ட பிறகு மாறி இருக்கலாம் அல்லது போலி நகையே மீட்க்கபட்டு இருக்கலாம் என்பதர்காக )அந்த நகையை பெற சொந்த வீடு வைத்து இருக்கும் இரண்டு நபர்கள் நண்பருக்கு ஜாமின் கொடுத்த பிறகு நீதிமன்றம் கொடுத்தது .


        இங்கு,இது  நீண்ட பதிவாகிவிட்டதால் - சந்தோஷ் என்ற குற்றவாளியுடன் மூன்று நாட்கள் இந்த தேடலில் இருந்த போது, ஏற்பட்ட அனுபவங்களை வேறு ஒரு பதிவில் சொல்ல ஆசைப்படுகிறேன். 

1 கருத்து:

  1. நமது காவல்துறையின் உள்ளுணர்வு நன்றாகவே செயல்படுகிறது...

    திருட்டு மட்டுமல்ல... நம்மை தாழ்த்தியோ / கேவலப்படுத்தியோ பேசுவதை கேட்டாலே... அதனால் மாறுவதும் பல பேர் உண்டு...

    சுவாரஸ்யம்... விறுவிறுப்பு... தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு