புதன், 28 ஆகஸ்ட், 2013

பால்ய நட்பு


நாகராஜை சந்தித்து சுமார் 20 வருடங்கள் மேலாகிவிட்டது. இருந்தாலும் அவனை அடையாளம் காண்பது கஷ்டமாக இல்லை...


அவனும் நானும் எட்டாம் வகுப்பு ஒரு வருடம் சேர்ந்து படித்து இருந்தாலும்,  அவனுக்கும் எனக்கும் உள்ள உறவு நடிகை நடிகர்களுக்கெல்லம் சொல்லப்படும் கெம்ஸ்ட்ரி ,பாட்டனி உறவுக்கெல்லம்  மேலானது . மேலும் யார் வாழ்கையிலும் பால்ய நட்பு எப்போதுமே ஒருபரவசம்தான். அதர்க்கு தனி இடம் உண்டு .அதில் நாகராஜ் எனக்கு ஒரு ஆச்சர்யமானவன் .


          
நாகராஜுக்கு அப்பா இல்லை .ஒரு அக்கா, ஒரு தங்கை அவனுக்கு .பிராமணர் வகுப்பை சார்ந்த அவன் வீட்டுக்குள் யாரையும் அவ்வளவு சுலபமாக அனுமதிக்க மாட்டார்கள். 

அந்த வேறுபாடு அப்போது எனக்கு தெரியாது .இருந்தாலும் என் பெயரையும்  தோற்றத்தையும்  விடவும் என்னை நண்பன் என்பதால் அவன் வீட்டுக்குள் போராடி முன்னறை வரை அழைத்து சென்று இருந்தான் .அப்புறம் நடு வீடு வரை அவர்களே அனுமதித்தார்கள். என் மேல் ஏதோ எப்போதுமே ஒரு ஈடுபாடு இருந்ததால்தான் 20 வருடத்திற்க்கு பிறகும் கூட என்னை தேடிவந்து இருக்கிறான் .


வெகு ஆண்டுக்கு பிறகு சந்தித்ததால் ,நிறைய விசயங்கள் ஆர்வமாக பேசிக்கொண்டோம் . அக்காவின் திருமணம் அவசரமாக சொந்தத்தில் மும்பையில் உள்ள உறவினருக்கு பேசி முடித்து  கொண்டதால் எட்டாம் வகுப்பு இறுதி தேர்வு முடிந்த கையோடு  வீடு காலி பண்ணி போனதால் சொல்ல முடியாமல் போய்விட்டார்களாம் . அவன் இப்போது மும்பைவாசி . இப்போது தங்கைக்கும் அடுத்த ஆண்டு திருமணமாம் .அது சம்பந்தமாக திண்டுக்கல் வந்ததாக சொன்னான் . 


பள்ளி ஆசிரியர்களை பற்றி பேச்சு வந்த போது ,இப்போது உள்ள ஆசிரியர்கள் பற்றி பேசினோம் .எங்கள் வகுப்பாசிரியர்கள் பலர் இப்போது அனேகமாக பணி ஓய்வு பெற்று விட்டார்கள் .இருந்தாலும் அவர்களை பற்றி அவன் நினைவு கூர்ந்தான். 

சொன்னால் யாரும் நம்ப மறுப்பார்கள் படிப்பில் அவனுக்கு பெரிதாய் ஆர்வம் இல்லை ஆனால் சகலவித விளையாட்டு போட்டிகளிலும் அவன் முன்னிலை .முக்கியமாக யாரும் கலந்து கொள்ளாத சர்க்கஸ் வித்தை போல நெருப்பு வளையத்திர்க்கு உள்ளே குதிப்பது ,வாயில் பெட்ரோலை ஊதி நெருப்பை வரவைப்பது போன்ற அப்போது பள்ளிகளில் அனுமதி மறுப்பு இருந்தாலும் நாகராஜால் அது மீட்டு எடுத்து பள்ளி CEO க்கள் முன்னே  நடைபெற்றது  நாகராஜுக்கு தனி பரிசு வழங்கப்பட்டது ..


இப்போது வாழ்க்கை பற்றி பேச்சு வந்தது .அதில் மும்பை சிவப்பு விளக்கு பற்றி அவன் சொன்ன ஒரு அனுபவம் என்னை புரட்டி போட்டது .நாயகன் கமல் போல ,முதன் முறையாக நண்பர்களுடன் சிவப்பு விளக்கு பகுதி நாகராஜ் மும்பை போயிருக்கிறான் .உடன் வந்த நண்பர்கள் இருவருமே மும்பைவாசிகள் .ஆனாலும் தோடா தோடாதமி(ழ்)ள் மால்பவர்கள்.
           
பெண்களுக்கான தேர்ந்தெடுப்பு  முடிவுபெற்ற பிறகு இவன் தேர்வு பெண்ணை காண்பித்து இருக்கிறான் .அந்த பெண்ணை பற்றி தனது நண்பர்களிடம் ஏதோ ஒரு வார்த்தை தமிழில் சொல்ல ,அதை கேட்ட அந்த பெண் நேரே வந்து இவன் தமிழ் ஆளான்னு  இவன் கூட வந்த நண்பனிடம் ஹிந்தியில் கேட்டுச்சாம் . அவன் ஆமாம் என்றதும்.அவனிடம் எனக்கு வர முடியாது  என்றதாம் . 

ஏன் கேட்டதற்கு அவள்
“நான் தமிழ் நாட்டுக்காரி, அங்கு  இருந்து வருபவன் எல்லாம் எனக்கு அண்ணன் தம்பிதான்”  என்று சொல்லி விட்டு உள்ளே போய்விட்டதாம் .




இதை சொல்லி முடிக்கும் போது  நாகராஜின் கண்ணில் நீர் தளும்பியது . அதற்க்கு பிறகு அந்த பக்கம்  இதுவரை அவன் மீண்டும்  போனதில்லை என்றான்.

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகான எங்கள் இனிய சந்திப்பு ஏதோ ஒரு நிரடலுடன் முடித்தது.