திங்கள், 17 பிப்ரவரி, 2014

பாலுமஹேந்திரா - ஏகலைவன்களின் பிதா மகன் .


பார்வையால் கட்டி போடபோகின்றான் !

1951 வருடத்தில் மே மாதம் 20 ஆம் தேதியில் தனது 13 வது வயது பிறந்த நாளை  இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழியில் கொண்டாடும்  தனது மகனுக்கு ,Kodak Eastman, Baby Brownie கேமிரா வாங்கி தந்த  பாலநாதன்  என்ற கணித ஆசிரியருக்கு அப்போதே தெரிந்திருக்கிறது தன்னுடைய பையன் பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் தென்னிந்திய மாநிலம் நான்கையும் தனது காமிராவின் பார்வையால் கட்டி போடபோகின்றான் என்று.


செல்லுலாயிடு சித்திரக்காரன் .

ஆனால் Sir David Lean என்ற ஆங்கில இயக்குனரின் The Bridge on the River Kwai படபிடிப்புக்கு வேடிக்கை பார்க்க போன  பாலநாதன்  மகேந்திரனனுக்கு  டேவிட் லீனின் அந்த ஆளுமை பிடித்து போனது .ஒரு பக்கம் கேமிரா ஆக்சன் என்கிறார் ,இன்னொரு பக்கமிருந்து ரோல்லிங் என்று பதில் குரல் வருகிறது .அடுத்து லீன் ஒரு கையசைவில் மழை என்கிறார்  மேஜிக் போல மழை கொட்டுகிறது என்பதெல்லாம் பார்த்த பாலு மஹேந்தினுக்கு தான் யார் என்பதையும்  தனது பூமி அவதாரம்  சினிமா என்ற செல்லுலாயிடு சித்திரக்காரன்  என்பதை  உணரவைத்தது .இவ்வளவு அருமையான பதிவுகளை இயற்கை இவர் மூல வருங்காலத்தில் தரப்போகிறது  என்பதை செல்லுலாயிடு (அதை மேம்படுத்தி) கண்டுபிடித்த,  கிறிஸ்டியன் ஷோன்பின் கூட அறியமாட்டார் .


செல்லுலாயிடு கல்லூரி

தனது செல்லுலாயிடு உருவாக்க கனவை 1966 வரை மனதுக்குள் உருவேற்றிய பாலுமகேந்திரா என்ற கலைஞன் தன் அங்கீரத்தை பெற்று கொண்டது Film and Television Institute of India, பூனாவில்தான் .ஆனால் அந்த திரைப்பட கல்லூரி அப்போது அறியவில்லை தான் அனுப்பும் இந்த பாலுமகேந்திரன் என்ற செல்லுலாயிடு சித்திரக்காரனுக்கு ஐந்து தேசிய விருதுகளும் , மூன்று மாநில மற்றும் ஃப்லிம்பேர் விருதுகளும் இரண்டு நந்தி விருதுகளும் காத்து  இருக்கின்றன என்பது. அது மட்டுமல்ல ஒளிப்பதிவுக்கலைக்கு 1971 ல் தங்கபதக்கம் பெற்றது ஒரு மாணவனுக்கு என்பதுதான் தெரியும் அது ஒருசெல்லுலாயிடு கல்லூரிக்கு வழங்கப்பட்டது என்பதை .



ஏகலைவன்களின் பிதா மகன்

ஆம். அவரின் அற்புத வார்ப்புகள்தானே பாலா,ராம், வெற்றி மாறன், சீமான் சுகா போன்றவர்கள் தனது உதவி இயகுனர்களை தினமும் சிறு கதைகள் படிக்க வைத்து ,அந்த கதையின் ஆக்கத்தின் பின் புலம் ,அதன் பாத்திர படைப்புகள் அதன் மன ஓட்டங்களின் மனோதத்துவம் ,உரையாடல்கள் ,ஆரம்பம் ,முடிவு என்ற பல அம்சங்களை பிரித்து அதை எழுதி வர சொல்லுவாராம் . அப்படி ஒவ்வொரு சிறுகதையில் கவனித்து உருவான உதவி இயக்குனர்கள்தான் இன்றைய இயக்குனர்கள் பலர் ஆனால் அவரின் படங்களை  பார்த்து உருவான கட்டை விரலை இழக்காத இயக்குனர் ஏகலைவன்கள் ஏராளம்.


ஒரு படைப்பாளியின் பார்வை

 பாலுமகேந்திரா என்ற கலைஞன் தன்னை ஒரு ஒளிபதிவாளராகவும் ,இயக்குனராகவும் ,கதாசிரியராகவும் ,எடிட்டராவும் ,ஒரு நடிகராகவும் பல் அவதாரம் எடுத்து கொண்டாலும்  இந்த எல்லாத்துறைகளிலும் உள்ளே தந்து கலையின் ஒரு உயிரோட்டத்தை பிண்ணி படர்ந்து இழையோட செய்வதை தவிர்க்கவில்லை .ஒரு படைப்பாளியின் பார்வை ஆழமான மன உணர்வை வெளிக்கொண்டுவரும் முயற்சியாகும் .அதுதான் படைப்பாளியை வேறுபடுத்தி காட்டும் திறமை என்பதை சொல்லியதோடு அதை தனது ஒவ்வொரு ஆக்கங்களிலும் செய்து காட்டினார் .

அளவு கோள் 

சினிமாவை அதன் கோணத்தில் பார்க்க கற்று கொள்பவர்களால் மட்டும்தான் அதை புரிந்து கொள்ள முடியும் என்பதை அவர் மிகவும் நம்பினார் .இது ஒரு சூத்திரம் .ஆம் . யார் வேண்டுமானாலும் விமர்சனம் எழுதலாம் என்று சில பேர் கிளம்பியதன் விளைவுதான் அப்படி பார்க்க படாத பல சிறந்த திரை படங்கள் இன்றும் பல ஆச்சர்யங்களை விதைத்து விட்டு போய் இருக்கிறது .நல்ல படங்களுக்கு மோசமான படங்களுக்கும் அளவு கோள் அது பார்க்க படும் விதத்தில்தான் என்பது மிக முக்கியமான நிதர்சனம்.



உணர்வு பூர்வமாக மட்டுமே வாழத் தெரிந்தவர்!

பாலு மகேந்திரா என்ற மனிதனின் தனிப்பட்ட வாழ்வில் எப்போதுமே சாபம் போல பெண்களுக்கும் அவருக்குமான உறவில் இருந்து வந்து இருக்கிறது  உலகில் உள்ள படைப்பாளிகளுக்கு இருக்கக்கூடிய சாபக்கேடுதான் இது என்று அவர் அழுந்த புதைந்து பேசியும் வருந்தி இருக்கிறார் .தனது மூன்று மனைவிகளான அகிலா,ஷோபா(ஷோபா. தற்கொலை செய்து கொண்டார்) ,மௌனிகா வரை எல்லோரையும் பற்றியும் அவர்களின்  பங்கு என்ன என்பதை ஒருபோதும் வெளிப்படையாகப் பேச மறுத்ததில்லை. சொந்த வாழ்க்கையை புத்திபூர்வ மாக வாழாமல், உணர்வு பூர்வமாக மட்டுமே வாழத் தெரிந்ததால் ஏகப்பட்ட குழப்பங்கள் நிறைந்ததாகிவிட்டது .ஆனால் என் வாழ்க்கையில் நேர்த்தியாக நான் வைத்திருக்கும் ஒரே விஷயம் சினிமாதான் என்றும் சொல்லி இருக்கிறார்  அந்த மறைந்த கலைஞர் பாலு மகேந்திரா.



 கொட்டித் தீர்த்துக்கொண்டேன்...

பொதுவாக கமல் உட்பட நிறைய அற்புதமான கலைஞர்கள் சொல்வது கலைஞனின் வாழ்கையில் எட்டி பார்க்காதீர்கள் .தலையிடாதீர்கள் என்கிறார்.அது உண்மைதான் .அது உரிமைதான் .ஆனால் அதே கலைஞன் தன்னுடய கோபதாபங்களை காட்டாமல் அல்லது வெளிப்படுத்தி கொள்ள தன் கலை எனும் ஆயுததின் வழியாக  வெளிப்பட்டுட்தானே நிற்கிரான் .அதர்க்கு அவரே சொன்ன காட்சி -   மூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் நாம்  பார்த்த, கமலை விட்டு ஸ்ரீ தேவி ரயில் பயணிக்க தொடங்குபோது அழுது புரள்வாரே! (அதர்க்கு கமல் தேசிய அவார்டு வாங்கி கொண்டார் ) அது ஷோபா  மீது வைத்து இருந்த   நிறைந்து கிடந்த சோகத்தின் ஒரு துகள் மட்டுமே.! நெஞ்சு வெடிக்கும் என் துக்கத்தை எனது சினிமா மூலம் கொட்டித் தீர்த்துக்கொண்டேன். அப்படித் தீர்த்துக்கொண்டதால் இன்று உங்களுடன் இருக்கிறேன் என்கிறார் .

               தான் பெற்றதை மற்றவர்க்கு சொல்லி தர வேண்டும் நினைத்து , அவர் தொடங்கிய ”சினிமா பட்டறை: ஒரு முழுமையான கலைஞனின் நன்றி  உணர்வின்  வெளிப்பாடு .தான் கற்று கொண்ட இடத்திர்க்கு செய்த நன்றி . தான் பெற்றதை விட்டு செல்லும் அடையாளம் .


கடைசி ஆசை .
திரைப்படங்களுக்கான ஒரு ஆவணக் காப்பகம் அமைப்பதன் அவசியத்தை கடந்த மூன்று வருடமாக பேசிவந்தார் பாலு மஹேந்திரா மேலும் அதர்க்கான  பாதிச் செலவை அரசும், மீதிச் செலவை திரையுலகமும் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் கூட திட்டம் கூறினார்.ஆனால் யாரும் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் உள்ளனர் .வருவாயை மட்டுமே பார்க்கும் சினிமாதுறை இதை எப்போது செய்யும் ? வந்து அழுது விட்டு போன கலைஞர்களின் மனதுள் இனி பஞ்ச பௌதீகங்களாய் பிரிந்து நிற்க்கும் அவரின் ”அதுவே” கலந்து செயல் படுத்தட்டும் .


https://www.youtube.com/watch?v=EWO-yNnWdFA

அடையாளாம் காணும் குணம் .

அற்புதமான அந்த படைப்பாளியின் மனதை எனக்கு மிக அருகிலே கொண்டு வந்தது எனது பள்ளி தோழன் சுகுமாரின்   கேரிகேச்சர் ( ஒரு வித ஓவிய முறை... அது ஒரு வித்தியாமான வெளிப்பாடு. மனிதரை, அவரின் குணங்களை, செயல்பாடுகளை தனியாக, மிகைப்படுத்தி காட்டும் ) ஓவியமுறையில், பாலு சாரை வரைந்து பாலு சாரின்  உதவி இயக்குநர் சுகா மூலம் அனுப்பி வைக்க அதை பார்த்து விட்டு அவர் ,சுமார் ஒரு நிமிடம் பேசிய வீடியோ பதிவை முக நூலில் பதிவிட்டு இருந்தார் .ஒரு கலைஞன் எங்கு இருந்தாலும் பாராட்டப்பட வேண்டும் என்ற அந்த மறைந்த கலைஞனின் ,மறக்க முடியாத  அடையாளாம் காணும் குணம் என்னை மீளாத ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது .அன்றிலிருந்து மிக தீவிர ரசிகனாக பாலு சாருக்கு ஆகிவிட்டேன் .


அவரை வழியனுப்ப வந்த  திரைப்பட  உலகம் ,அவரின் நினைவுகளை  பாதுகாக்க விட்டு சென்ற ”தலைமுறைகளின் ’ வளர்ச்சியை கொண்டாடினால்  குறைந்த பட்சம் அந்த கலைஞனை ஆவணக் காப்பகமாக ஆக்கமாலேயே பாதுகாக்கலாம்.  





1 கருத்து:

  1. அருமை... என் மனதிலும் நான் எழுத நினைத்த விசயங்களின் தொகுப்பாகவும் நீயே எழுதிவிட்டாய்... நல்லது!

    அவர் சொன்னபடியே உடல் மரணித்தபிறகும் வாழ்ந்துகொண்டிடுக்கிறார்!

    பதிலளிநீக்கு