சனி, 31 ஜனவரி, 2015

பெண் பேய்கள் !!



ஏதோ திரைப்படம் தலைப்பு போல இருந்தாலும் இதையும் சிலர் சந்தோசத்துடன் படிக்கத் தொடங்குவது உணர முடிகிறது! அதற்குக் காரணம் வேறு ! எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அதே சமயம் இங்குத் திரைப்படம் விமர்சனம் பற்றியும் பேச போவதில்லை .படங்களைப் பார்க்கும் இடத்தில் இருக்கும் ரசிகன் என்பதைத் தவிர வேறு தொழில்நுட்ப சூட்சுமங்கள் தெரியாத அதைப் பற்றிப் பேச நான் லாயக்கு இல்லை .அதர்க்கு ஜாக்கி சேகர் (http://www.jackiesekar.com/) மற்றும் கருந்தேள் கண்ணாயிரம் (http://karundhel.com/) போன அற்புதமான வல்லுனர்கள் இருக்கிறார்கள்.ஆனால் நான் பேச ஆசைப்படுவது சமீபத்திய தமிழ் படக் கதை கர்த்தாக்கள் உட்படப் பலரும் செய்து வரும் ஒரு நல்ல விசயமும் , அதர்க்கு எதிரான விசயமும் ஒன்று ஓசைபடாமல் நடந்து வருகிறது ... 

நல்ல விசயம் ... 



சமீபத்திய மாசாணி காஞ்சனா ,முனி, பீட்சா போன்ற பேய் படங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட அரண்மனை ,‘யாவரும் நலம்,யாமிருக்கப் பயமேன், பிசாசு ,டார்லிங், இன்னும் பல திரைப்படங்கள் பேய் மற்றும் பிசாசுகளைப் பற்றிய பயத்தைத் தரும் படங்கள் என்றாலும் ஒருவகையில் அவைகள் மீதான பயத்தைத் தெளிவாக்கும் ஒரு முயற்சியாக இந்தத் தலைமுறைக்கு உதவுகிறது .இதில் பிசாசு படம் செத்த பிறகும் சவுக்கியம் உண்டாகட்டும் என்று ஊர்வசியின் வசனத்தைப் போலச் செத்த பிறகும் கதாநாயன்கன் நந்தாவை காதலிப்பதாகாவும் அவன் பீர் குடிக்கத் தடை விதிப்பதுவும் உச்சம்தான் . 

            பொதுவாக ஆன்மாக்களின் முக்தி வகைகள் நான்கு என்று புராணங்கள் சொல்லும் சாலோக்கியம், சாயுச்சியம், சாமீப்பியம், சாரூப்பியம் என்பதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு இங்கு நம் திரைப்படங்கள் வசதிக்காகக் கொண்டு வந்து பயமுறுத்தும் பேய்கள் அனேகமாக அகால மரணம் அடைந்தவர்கள் பற்றியதென்பதால் நாம் புராணங்கள் பார்வைக்குப் போக வேண்டாம். 





        
         அதர்க்கு முன் பதிமூன்று வயது வரை நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு ( இன்றைய திண்டுக்கல் ஆர்.என்.காலனி குடியிருப்புகள் ) நேரே பின்னால் சன்னல் திறந்தால் திண்டுக்கல் - பழனி ரயில்வே பாதையில் நடக்கும் தற்கொலைகள்கிராமத்தில் மற்றும் அப்போது நகர எல்லையை விட்டு சுமார் இரண்டு கி.மீ தள்ளி இருந்ததால் பேய் , பிசாசு ,குட்டி சாத்தான் ,குறளி வித்தை ஆவி ,முனி ,கடவுள்களை வாய் கட்டுதல் போன்ற இவைகளின் நம்பிக்கையில் வளர்ந்ததாலும் என் வீட்டிலேயே இருப்பவர்கள் மட்டுமல்ல என் நண்பர்கள் கூட்டத்திலும் பேய் படம் பார்க்க இன்று கூட லாயக்கிலாதவன்  



            நான் மட்டுமே . மிகப் பழைய படங்களான நெஞ்சம் மறப்பதில்லை அதற்க்கு முன் மர்ம யோகி (எம்,ஜி.ஆர் படம்) பேய் பயம் போக்க டெண்ட் கொட்டாகைக்கு அண்ணன்கள் அழைத்துச் சென்றபோது, தாவணி கனவுகள் படத்தில் பாக்கியராஜ் தங்கைகள் சீன் வரும்போதெல்லாம் தரையைப் பார்க்க செய்வது போலக் காதை மூடி கொண்டு, நடுங்கி கொண்டே இருப்பேன் கீழே குனிந்தே படம் பார்ப்பேன் அதனால் காய்ச்சல் கூட வந்து இருக்கிறது .அதன் பிறகு பேய்களிடமிருந்து பிழைத்து போகட்டும் என்று என்னை விட்டு விட்டார்கள். ( கல்யாணம் ஆன பிறகும் இந்தப் பயம் போகவில்லயென்றால் பார்த்து கொள்ளுங்களேன் !) 



            சரி அதர்க்கு அப்புறம் வந்த ‘யார்’, ‘மை டியர் லிஸா', ‘ஜென்மநட்சத்திரம்', ‘13-ம் நம்பர் வீடு' ‘வா அருகில் வா' போன்ற படங்கள் யார் நடித்தார்கள் என்று கூட எனக்குத் தெரியாது .பார்க்க விருப்பம் இருந்தால்தானே ? 



         ஆனால் மிகச் சமீபமாக எடுக்கப்பட்ட படங்கள் பேய் படங்களை நானே பார்க்கிறேன் .அவை பேய் இருப்பதை நிரூபிக்கிறதா அல்லது மர்மக் கதை மன்னனான ஸ்டீஃபன் கிங் சொல்வது போல “நம் நினைவுகள்தான் பேய்கள்” என்று சொல்ல வருகிறார்களா என்பது போன்ற ஆராய்ச்சி விலக்கி விட்டு நானே இவைகளைப் பார்க்கிறேன் (கொஞ்சம் பயத்தோடானாலும் ) 
இன்றைய பேய் படங்களை நம் வரவேற்பு அறைக்குக் கொண்டு வந்து பேய்க்ளை குடும்பத்தோடு ரசிக்கும் அளவுக்கு நடுங்க வைக்காது தந்த நம் பேய் இயக்குனர்களுக்கு மன்னிக்கவும் இயக்குனர்களின் பேய்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் ( முக்கியமாக நான் ) 



ஒரு கெட்ட விசயம் .

  சமீபத்திய படங்கள் இறந்து போன பெண்கள் மட்டும் பேயாக வருவதாகக் காட்டுவது கொஞ்சம் பேய் லாஜிக்கில் இடிக்கிறது .அதென்ன பயமுறுத்துவது பெண் பேய்கள் சொத்தா என்ன ? ஆண் பேய்கள் ஜப்பானில் கல்யாண ராமன் முருங்கை மர (கமல்) பேய் கதைதானா? அங்குப் போயும் வேலைக்கு ஆகாதா ? சந்தோசமா ஆண்கள் சாகக் கூட முடியாதா என்பன போலக் கேள்விகள் கேட்க தொன்றுகிறது .இன்னொரு பக்கம் யோசித்தால் சம்பந்தமில்லாத விளம்பரகளில் கூடப் பெண்கள் நடித்தால் ஒரு கவர்ச்சி இருக்குமே என்ற பெண்கள் பேயாக முன்னிலை படுத்துகிறார்களா என்பதுவும் தெரியவில்லை . சில ஆண்களுக்குப் பெண்கள்தான் பேய்கள் ,என்ற தனது சொந்த அநுபவங்களை யோசித்துப் பார்த்து இம்மாதிரி படங்களை வெற்றி பெற செய்கிறார்களோ ? என்பதுவும் ஒரு கேட்க கூடாத கேள்விதான் ( இந்தப் பதிவை என் மனைவி படிக்க மாட்டார்கள் என்ற தைரியம் இருக்கிறது ) இருந்தாலும் பாவம் பெண்கள் செத்த பிறகும் நிம்மதியா விட மாட்டேன்கிறார்களே என்ற ஆடு நனையுதே என்ற ஒரு பச்சாதாபம் நிலவத்தானே செய்கிறது ! 



  சின்னப் பட்ஜெட்டை இருந்தாலே போதும் என்பதர்க்கு இம்மாதிரி படங்கள் எடுப்பதர்க்கு ஒரு காரணம் என்பதுவும் , அறிவை முன்னிறுத்தாமல் வேண்டிய அளவுக்குத் தனது கற்பனை சக்கரத்தை ஒட்டி கொள்ளலாம் என்ற கலைஞர்களும் செழுத்த வேண்டிய ஒரே கவனம் ஏற்கனவே பெண்கள் இரண்டாம் தர குடிமக்கள் இல்லை விலங்குகளைத் தாங்களே உடைத்துக் கொண்டு முன்னேறிக் கொண்டு இருக்கும் நிலையில், சமூகத்தின் மத்தியில் பெண்கள் மட்டுமே பேய்களாக வருவார்கள் என்ற சித்தரிப்பை பற்றிக் கொஞ்சம் மாற்றி யோசிக்கலாமே.அதற்காகப் பேய் படங்கள் வரட்டும் என்பது எனக்கான எதிர்பார்ப்பு இல்லை.



            அதை தாண்டிகண்ணுக்கு புலப்படாத பல சக்திகள் பல மனித உடலில் , ஆழ்கடலுக்குள் ,இந்த பூமியின் மையங்களை நோக்கி செல்லும்போது  இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் , அதற்கான அடிப்படை அதார புவியீர்ப்பு விசயங்களில் நிறைய விசயங்கள் கொட்டி கிடக்கிறது  .அதில் அறிவியல் கலந்து படையுங்கள் .பேய்களை ரசிக்கச் செய்யும் வல்லமை கொண்ட உங்களால் இன்னும் நிறையச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம்புகிறோம் . 

புதன், 28 ஜனவரி, 2015

சிரிப்பது என்பது...





சிரிப்பது என்பது ஒரு புனிதமான பிரார்த்தனைக்குச் சமம்! -ஓஷோ 


இந்த அளவுக்குத் தத்துவ யோசிக்க முடியாட்டியும் பரவாயில்லை நமக்குச் சிரிச்ச மாதிரி கொஞ்சம் மூஞ்சிய வச்சுக்க யாராவது போட்டோ எடுக்கும் போது சொன்னாத்தான் நம்ம யோக்கிதை நம்ம செருப்புக்கு கீழே கிடப்பது தெரியும் .அதைத் தேடி குனிஞ்சு எடுப்பதர்க்குள் போட்டோ எடுத்து விட்டானேன்னு நொந்துக்கறதை தவிர வேறு என்ன செய்ய ? 


       
            அதிருஷ்டம் வருமென்றால் சிரிக்கும் புத்தர் சிலை வைத்துகொள்ள யாரும் தயங்குவதில்லை ஆனால் புத்தரே சிரிக்க தெரியாத சிரிக்க ஞாபக படுத்தவே நம்மை பார்த்து சிரிக்கிறாரோ என்பதாகத்தான் அடிக்கடி நம்மை நினைவு படுத்திக்  கொள்ள வேண்டி  இருக்கிறது !



அஞ்சு நிமிசம் சிரிச்ச மாதிரி சொந்த வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்தா கூட நம்ம ஆளுகளே , நான் அப்பவே நினச்சேங்கற மாதிரி ஒரு லுக்கு விடறாங்க அப்புறம் என்னத்ததான் செய்யிறது ? ஆனா நாமெல்லாம் ரொம்ப ஹூயுமரஸ் பேங்குக்குச் சொந்தக்காரன் மாதிரி வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்ல வருகிற பிரகாஸ்ராஜ் லாஃபிங் தெரபி பார்த்து விட்டு பக்கத்துல இருக்கிறவன் தொடயில தட்டி தட்டி சிரிப்போம் .இதுல வீட்ல சிரிச்சா மரியாதை குறைந்து விடும்ன்னு எப்பவுமே விநாயகர் சதுர்த்திக் களிமண்ணாட்டமே இருக்கணும்ன்னு ஒரு தளராத நம்பிக்கை. அவர்களையெல்லாம் சிரிப்பூட்டும் வாயு நைட்ரஸ் ஆக்சைடு (nitrous oxide)  வைத்து கொண்டு நெருங்க வேண்டியதுதான் !

சரி,அது எதுக்கு நமக்கு ? நம்ம ஏரியாவுக்குப் போகலாம் .



பொதுவா விஞ்ஞான ரீதியா அல்லது மெய்ஞான ரீதியோ நமக்குச் சிரிப்பு வர முதல் காரணம் நாம் லேசா இருந்தா சிரிப்புவரும் அதுக்காகச் சந்திர மண்டலத்தில குடியேறனம்ன்னு சொல்லலை.மனிதனின் இயல்பான குணமே ரசணை என்பதுதான் அது யாருக்கெல்லாம் மருந்துக்காகவாவது இருந்ததுன்னா சிரிப்பு வரும்ங்கிறது கேரண்டி வாரண்டியெல்லாம் உண்டு . 

          இனி போற போக்குல சாதரண டாக்டர்கள் சிபாரிசுகளில் கூட இது பற்றிப் பேசப்படலாம் .இனி பிரஸ்கிரிப்சன்லகூட - நிறையத் தண்ணி குடிங்க ,சூடா சாப்பிடாதிங்க , சுட வைத்த தண்ணியில் குளிங்க ,எக்சசைஸ் பண்ணுங்க அப்படியே மறக்காம தினமும் ஒரு தரம் ரகசியமாவாவது எங்கேயாச்சும் போய்ச் சிரிச்சு தொலைங்கன்னு எழுதி கொடுத்து ஃபீஸ் வாங்கலாம் !.


எனக்குத் தெரிந்த அளவில் மதுரையில கூடச் சாலமன் பாப்பையா அவர்களுக்கு இல்லாத கூட்டம் திண்டுக்கல்லில்தான் கூடும்.அங்குள்ள கோபால சமுத்திரம் விநாயகர் கோவில்,மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோவில் போன்ற இடங்களில் போடும் அத்தனை பட்டி மன்றங்களும் மாறாத தீர்ப்பாகப் பாப்பையாதான் வருவார் .மக்கள் கூட்டம் அவர்கள் சிரிப்பு வெடிக்காகக் காத்து இருக்கும் .ஆண் பெண் அத்தனை பேரையும் அந்தத் தாமதமான இரவிலும் உட்கார வைத்த பெருமை அவரை மட்டுமே சாரும் அங்கு நடக்கும் சிரிப்புப் பந்தலுக்காகதான் அத்தனை கூட்டம் இன்னும் சேருகிறது . .லியோனி கூட அவர் மேடையில் பாப்பையா வளர்ந்தவர்தான் . 



நதி மூலம் - சேவல் பண்ணை.
 
எங்கள் வீட்டில் எனக்குச் சகோதரிகள் யாரும் இல்லை.நான்கு அண்ணன்கள் அதில் மூன்று பேருக்குமே எப்போதும் அவர்கள் சிரிப்பு வெடி கொளுத்தி போடுவதை ரசிக்கவே ஒரு நண்பர் கூட்டம் இருக்கும் .எங்கள் வீடு அதிகம் மோட்டார் துறை சார்ந்தது என்பதால் சிரிப்பு எங்காவது ஒரு மூளையில் சுழல்வது வாடிக்கை அதிலும் அம்மாவை தவிர ஆண்கள் மட்டுமே வாழும் சேவல் பண்ணை என்பதால் எப்போதும் அந்தச் சிரிப்பு வெடிகளில் செக்ஸ் புகை கட்டாயம் கலந்துதான் வெளிவரும் .ஆனால் நண்பர்களைத் தன்னை மறந்து சிரிக்க வைப்பார்கள் .எங்கள் வீட்டில் வளர்ந்த ஆறாவது பிள்ளையாகச் சிரிப்பு எப்போதும் குடியிருக்கும்.அவர்கள் வேலை பார்க்கும் இடங்களிலும் இதே நிலைதான் .ஒரு கூட்டம் சுற்றிக் கொள்ளும் .இந்த அண்ணன்களில் ஒருவர் பெயர் முருகாணந்தம்.அவர் வீட்டிலேயேயும் வெளியேயும் சிரிப்பால் கதறடிப்பார். 



ஒரு மரணம் தந்த பாடம்..  
இயக்குனரும் நடிகருமான ராஜ்கிரண் தனது முதல் படபிடிப்பை திண்டுக்கல் நகரை சுற்றி ஆரம்பிக்கும் போது அவரின் படபிடிப்புக்கு, இதே அண்ணன் வேன் ட்ரைவராகப் போனார். அண்ணனின் அந்த நகைச்சுவையுணர்வை கேள்வி பட்ட ராஜ்கிரண் தொடர்ந்து அங்கு வரும்போதெல்லாம் அவராலேயே அழைக்கப்பட்டுப் படபிடிப்புக்கு போவார் . ஆனால் அவர் துரதிருஷ்டவசமாக மூளையில் கட்டி வந்து இறந்து விட்டார் .அவர் வேன் மற்றும் கார் ஸ்டாண்டிலிருந்து அத்தனை பேரும் வந்து இருந்தார்கள் .அண்ணனின் இறந்த உடலை வீட்டை விட்டு எடுத்துச் செல்லும் கடைசி நேரத்தில் ,அறுபது வயது மேற்பட்டவர் ஒருவர் கையில் மாலையுடன் வந்து சொன்ன கடைசி வார்த்தை அங்கு அடங்கிப் போயிருந்த துக்கத்தைத் தூண்டி எல்லோரையும் கதற வைத்தது. ’எப்போதும் எங்கள் சிரிக்க வச்சுட்டு இருப்பியேட நீ மட்டும் எங்கடா போற எங்கள விட்டுட்டுப் பாவி டே முருகா “ 

இன்னும் எனக்குள் இதை நினைத்து பார்க்க வலிக்கும். அவர் கதறியபடி சொன்ன வார்த்தை எனக்குள் நகைச்சுவை என்பது உணர்வல்ல அது யாரும் கற்று கொள்ளும் கலை  என்பது இன்னும் புரிய வைத்தது .இப்படி வாழ்க்கையில் சில வலிகள் தரும் பாடமே வெகு நாள் கூட வருகிறது !



முதல் தகுதி !
 எனக்கு நகைச்சுவை வருமா ? என்பது அப்போது எனக்கே கேள்விக்குறியதாக இருந்தது .வீட்டில் நான்கு அண்ணன்களுக்கும் சின்னதாகப் போகும் சட்டை எனக்கு ( வந்து ) சேரும் போது ,அவர்களுக்குள் இருக்கும் அந்த ஹூயுமர் என்னுள்ளே இல்லாமலா போகும் என்று தேட ஆரம்பித்தேன் .
        சில பேருக்கு பார்வையிலேயே சிரிப்பு வர வைக்க முடியும் சிலருக்கு அக்சனில் சிரிப்பு வர வைக்கத் தெரியும் .சில பேருக்குப் பேசித்தான் சிரிக்க வைக்கத் தெரியும்.எனக்கு இந்த மூன்றாவது வரும் என்று நம்பினேன் இதர்க்கு என் முதல் தகுதி எனக்குச் சூழ்நிலையை லேசாய் இருக்க மைண்ட் ஃபிரி இருக்க வேண்டும் என்பது கட்டாயம் .ஆனால் என்ன தலை விதியோ தெரியவில்லை யாருக்கெல்லாம் சிரிக்க வைக்கத் தெரியுமோ அவர்களுக்கெல்லாம் எளிதில் கோபமடையும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்  என்பதையும் இதனோடு புரிந்து கொண்டேன் ! சரி அது வேறு விசயம் ... 



கல்வி வடிவில் நகைச்சுவை இன்று யோகா அடிப்படையில் இந்தியா உட்பட பல நாடுகளில் சிரிப்பை சொல்லி கொடுக்க வந்து விட்டார்கள் கேட்டால் உடலுக்கு நல்லது ,மனதுக்கு நல்லது என்கிறார்கள் இது கூட பரவாயில்லை சிரிப்பைச் சொல்லிக் கொடுக்க ஒரு பள்ளிக்கூடம் மான்செஸ்டர் நகரில் நடக்கிறது. சிரிக்க வைக்க ஆறு வாரங்கள், சிரிப்புப் பாடங்கள் நடத்துகிறார்கள். ஆசிரியர்கள் சிரிக்கச் சிரிக்க பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.அப்படி ஆகிவிட்டது நிலைமையும் அவசியமும் .


நான் நகைச்சுவையுணர்வை ஏற்படுத்த மற்றவர்களை நிறைய அப்சர்வேசன் பண்ண வேண்டி இருந்தது.முகம் சுழிக்காமல்,அவர்கள்  மனம் நோகாமல் சிரிக்க வைக்க உன்னிப்பாகக் கவனிக்க வேண்டி இருந்தது .முக்கியமாக அவர்களின் சாஃப்ட் கார்னர் எது என்பதுதான். அடுத்து கவனிக்க வேண்டி அவர்கள் சூழ்நிலை.பொதுவாகச் சில பேர் சும்மா கூடக் கெக்கே பெக்கேன்னு சிரிப்பாங்க ஆனால் நாம் அவர்களமுயற்சி செய்யும்போதெல்லாம் எதையோ காணாமல் போட்டு தேடுவது போலப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள் சுவத்தில் கூட முட்டி கொள்ளலாம் எனத் தோணியதுண்டு .. 



சிரிக்க வைக்கும் நூழ் இழை !

முதலில் ஆரம்பிக்கும் போது ஒன்றுக்கு இரண்டு முறை அவர்களோடு நம் சிரிக்க வைக்கும் நூழ் இழை தேடிபின்னி விட்டால் போதும் அப்புறம் நம்மைப் பார்த்தாலே ஏற்கனவே பின்னப்பட்ட இழை தானாகவே வேலை செய்யத் தொடங்கி விடும் என்பது ஒரு விசயம் . 

   அடுத்து, அவர்களிடம் சிரிக்க வைக்கப் பயன் படுத்தப்படும் வார்த்தைகள் மிக எளிமையாக இருக்க வேண்டும் ஐன்ஸ்டீன் ஃபார்முலாக்களை அங்குப் பயன் படுத்த வேண்டியதில்லை.அப்படியெல்லாம் ஆரம்பத்தில் நாக்கை சுட்டுக் கொண்ட அநுபவமெல்லாம் உண்டு.


பெரிய சவால் !
                  அதிலும் எல்லா வயதினரும் தனித் தனியாக இருக்கும்போதெல்லாம்  சிரிக்க வைப்பது கொஞ்சம் சுலபம் . தவறாகப் புரிந்து கொண்டால் பேலன்ஸ் பண்ணிக் கொள்ளலாம்.ஆனால் கூட்டத்தில் ,அதிலும் சொந்தங்கள் கூடி இருக்கும் இடத்தில் ( சொந்தமென்பதால் நம் ஏற்கனவே மேல் இருக்கும் அபிப்ராயம் தவிர்த்து ) நம் ஜம்பம் பலிப்பது கொஞ்சம் கஷ்டம் .ஆனால் இங்குதான் என் பயணம் தொடங்கியது .காரணம் நண்பர்கள் வீட்டு திருமணம்,மற்ற விசேசங்கள் கற்று கொடுத்தன இதெல்லாம் சரி ஆனால் அதை விடக் கஷ்டம் சோகமாக அல்லது பிரச்சனையோடு வருபவர்களைச் சிரிக்க வைத்து அதைப் பற்றிச் சிந்திக்காமல் தள்ளிப் போட வைக்கும் திறமை இருக்கே அதுதான் பெரிய சவால் நமக்கு.


நிறைய படித்துப் பாப்பையா அவர்களை மற்றும் சுகி சிவம் போல என்னால் பேசுவது முடியுமா சாத்தியம் இல்லை.ஆனாலும் படித்தவர்க்ள் மத்தியிலும் பேச தகுதியை உயர்த்திக் கொள்ளும் என்ற் ஆர்வம் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள விரட்டியது .மேலும் எளிமையான விசயங்கள் எப்போதும் அழகும் ஹியுமரஸ் கொண்டவைகள் அதைக் கவனித்து எடுத்து கொண்டாலே போதும்.  நகைசுவையுணர்வை கொண்டுவர மிகப் பெரிய லாஜிக் தேடுவது மிகப் பெரிய குற்றம் எனப்தை தெரிந்து கொள்ள வெகு நாளாயிற்று அதிலும் பெண்கள் மத்தியில் லாஜிக் சிரிப்பு சான்ஸே இல்லை காரணம் பெண்கள் எப்போதும் மனதுக்குப் பிடித்த விசயத்தைப் பேசுவதில்தான் அக்கறை காட்டுகிறார்கள் .

             ஆனால் ஆண்கள் - 67P என்ற வால் நட்சத்திரத்தில் இறங்கிய ரோசட்டா விண்கலம் தொடங்கி – சுஜாதாவின் மெக்ஸிக்கோ சலைவைக்காரி ஜோக் வரை பேசலாம் அதிலும் ஆண்கள் தன்னை அறிவு கொழுந்துகளாகக் காட்டி கொள்வதில் எப்போதும் தவறுவதே இல்லை என்பதால்  ஜோக் அடிக்க இடமும் அதிகம் வேலையும்சுலபம் .


நாம் இப்படி சொல்கிறோம். ஆனால் பிறந்த குழந்தை தனது பெற்றோர்களிடமிருந்து 16 மாதங்களுக்குள் சிரிப்பை கற்று கொள்கின்றன .அப்படி கற்று கொண்டவுடன் ,  ஒரு நாளைக்கு 400 முறைகளுக்கு மேல் சிரித்து விடுகிறதாம் . கிளு கிளுப்பையை அதன் முன்னால் ஆட்டினாலும் சரி ,வீட்டு சாவியை ஆட்டினாலும் சரி சுலமபாகச் சிரித்து விடும் குழந்தை உலகம் தனித் தன்மையுடையதுதான் .தொட்டிலில் யாரையும் பார்க்காமல் தானாக சிரிக்கும் குழந்தை கடவுளுடன் பேசுகிறது என்பார்கள் .ஆனால் கடவுளுக்கு தினமும் பூஜை செய்யும் மனிதர்கள் ஒரு நாளைக்கு 20 முறைகள் கூட சிரிப்பதில்லையாம் .இது எப்படி? 



ஆனால் பிடிவதமாக இருக்கும் ஒரு குழந்தையைச் சிரிக்க வைக்க அபாய முயற்சி செய்த  என்னைக் காதோடு ஒன்று விட்டதே பார்க்கலாம் .அன்றிலிருந்து கைக்கெட்டாத தூரத்தில் நின்று கொண்டுதான் என் இன்று என்  வேலையை துவங்குவேன். 



          ஆங்கில நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ், ‘நாம் வாழ்க்கையின் பாதையில் மலர்களை தூவ முடியாவிட்டால்கூட, நமது புன்னகையைச் தூவ முடியும். அவற்றை நாம் தூவத்தான் வேண்டும். ஏனெனில் சிரித்து வாழும் வாழ்வு சிறந்த முறையான வாழ்வாகும்’ என்று அழுந்த சொல்கிறார் .


நவரசத்தில் நகைச்சுவை.

நகைச் சுவையுணர்வுப் பரதகலையின் நவரசத்தில் நகைச்சுவையில் உவகைச் சிரிப்பு, பெரு நகை, இடிநகை, கேலிச்சிரிப்பு, வஞ்சப் புன்னைக, வெறிநகை, பைத்தியச்சிரிப்பு இடர்க்கண் நகுதல், செருக்குநகை எனப் பலவகை உண்டு. உதட்டை மலர்த்தியும் வாயை ‘ஒ’ எனத் திறந்தும் கைக் கொட்டியும் குதித்தும் நகைச்சுவையைக் கலை வடிவில் பேசுகிறது !.

மருத்துவத்தில் நகைச்சுவை.
மருத்துவம் இன்று வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்கிறது ..
* அதிகம் வாய் விட்டு சிரிக்கும் போது நுரையீரலுக்குள் செல்லும் பிராண வாயு இரத்தல் முழுதும் பரவி புத்துணவு தருகிறது
*அதே சிரிப்பு ஒவ்வொருவரின் உடலிலும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்யும் என்டோர்பின் (Endorphin) சுரக்க உதவுகிறது .
*உடலின் நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் பிட்யூட்டரி சுரப்பி சிரிப்பினால் தூண்டப் பெறுகிறது.உடலின் அத்தனை உறுப்புகளும் மருந்து மாத்திரை எடுத்து கொள்ளாமல் இலவசமாக தூண்டப்பட்டு அரோக்யமாக்குகிறது .
*முகத்தின் தசைகள் முப்பதுக்கும் மேற்பட்ட தசைகள் இயங்கும் போது இயல்பாகவே ஃபேர் அன் லவ்லி பூசப்படுவது போல முகப் பொலிவு கிடைக்கிறது .தலையில் முடி உதிர்வு குறைகிறது.

மொத்தத்தில் மாத அல்லது வருட மெடிக்கல் பட்ஜெட் பல விதத்தில் நீங்கள் சிரித்தாலே குறைகிறது எனும் போது ஏதாவது ஒரு நல்ல முடிவு எடுங்கள்.


வரும் காலத்தில் மாநில அரசுகளின் இலவசங்களில் சிரிக்க வைக்கும் கையேடுகள்( http://vkool.com/benefits-of-laughing/) விரைவில் சேர்த்து கொள்ளப்படலாம்! எனவே சிரிப்பது இத்தனை தருகிறதென்றால் சிரிக்க வைப்பவர்களுக்கு எல்லாமே தருமல்லவா ?

சிரிக்க வைக்க முயற்சிப்பவனுக்கு நட்பு வட்டம் கூடுகிறது .மற்றவர்கள் சிரிக்க வைக்கப்படும் போது நம்மை சுற்றி ஒரு நல்ல சூழல் உருவாகிறது .மேடையில் நகைச்சுவை கலந்த கருத்து பரிமாற்றம் சிந்தனை தூண்டும் பாலாமகிறது .அடுத்தவகள் சூழல் உங்கள் கைவசமாவது எவ்வளவு பெரிய சுகம் என்பது உங்களுக்கு தெரியும் போது அதுவும் ஒருவகை கிக்தான் .


சில நாட்களுக்கு முன்னால் வழக்கம் போல என் பையனைப் பள்ளியிலிருந்து அழைத்து வரச் சென்ற போதுஅவனோடு இருந்த அவன் வகுப்புத் தோழனும் தோழியும் இரண்டு பேருமே என்னருகே வந்து, அங்கிள் ப்ரணவ் எப்பப் பார்த்தாலும் எதாவது சிரிப்புக் காட்டிக் கொண்டே இருக்கான் என்றார்கள் .வீடு வரும் வரை நான் அதுபற்றிக் எதுவும் கேட்கவில்லை .அவன் அம்மா முன் இதைச் சொன்னேன் அதர்க்கு அவன் சொன்னான் ,அம்மாசிரிக்க வைப்பது ஒரு சந்தோசப்படுத்தறதுத் தானே அதனாலே புண்ணியம்தானே நமக்குகிடைக்கும் என்றான்.

என்முகத்தை வேறு எங்காவது தேட வேண்டுமா ?

 


வெள்ளி, 23 ஜனவரி, 2015

அமானுஷ்யச் சிலிர்ப்புக்கள்


  
வாழ்க்கையில் சில விசயங்கள் புரிந்து கொள்வதர்க்கு அநுபவத்தை விட வயது தன் முக்கியத்துவத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது .எப்போதோ படித்த ,கேட்ட விசயங்கள் வயதின் பக்குவத்தின் வாசலை தொடும்போதுதான் விழித்துக்கொள்கிறது .நான் இத்தனை பீடிகை போட்டு நுழைவதர்க்குக் காரணம் சில சமயத்தில் எல்லோருக்கும் அநுபவமும் வயதும் விலகி கொண்டு வேறு சில அமானுஷ்ய அநுபவங்கள் வாழ்வில் வந்து சில காலம் தங்கி போகின்றன.அது பற்றிப் பேச அல்லது தூண்டி விட ‘சிக்த்சென்ஸ் பப்ளிகேசன்’ வெளியிட்ட ”வெளிச்சத்தின் நிறம் கருப்பு ” ஆசிரியர் முகில் (தொகுத்து வழங்கிய) மர்மங்களின் சரித்திரம் படிக்க நேர்ந்தது .அதன் 19ம் பாகத்தில் நமக்குள் ஒரு நாஸ்டராடாமஸ் பற்றி ஒரு கருத்துதான் எனக்குள் ஒரு பின்னோக்கிய ஒரு நழுவிய தடத்தைப் பற்றி இங்கு பதிய செய்தது .



             ஏதோ ஒரு பிரயாணத்தின் போது ரூ.4.50 க்கு பொழுது போக வாங்கிய ஒரு எண் கணித ஜோதிட புத்தகம் அது.எண் கணித நிபுணர் சி.வி மோகன் எழுதிய ”1996ல் உங்கள் அதிருஷ்டம்  நியுமரலாஜி - ஜாதகமின்றி பிறந்த தேதி அல்லது பெயர் மூலம் பலன் அறியலாம்”   அதில் மற்றெல்லா எண் கணிதப்படித்தான் பிறந்த நாள் மற்றும் மாதம் ,வருடம் கூட்டிவரும் மொத்த கூட்டி வரும் எண் பலன் இருந்தது.அதோடு இன்னொரு புதிய விசயம் இருந்தது .மேற்படி மூன்றையும் கூட்டி அதனோடு அவர்களின் பெயர் எண்ணுக்கு வரும் மொத்த பதிப்பையும் கூட்டினால் வாழ்வின் மொத்த பலனும் அடங்கிவிடும் என்பதாகச் சொல்லப்பட்டு இருந்தது . 



            சரி எல்லாரையும் போல எனக்குத்தான் முதலில் பார்த்து கொண்டேன்.சரி அதோடு நிறுத்தி கொண்டு இருந்து இருக்கலாம் .என் நிறுவனத்தில் என்னோடு பணிபுரியும்  என்னை விடச் சில வயது மூத்த எனக்கு சீனியர் ஒரு பெண் அவரிடம் சொன்னதுதான் தாமதம் – தாமதம் கூட இல்லை உடனே தன்னுடைய மற்றும் இரண்டு பையன் ,கணவர், அத்தனை பேரின் தேதி குறிப்புகளை  ஒரு் பல சரக்கு கடை பட்டியல் போல  எழுதி நீட்டி விட்டார் .பெண்களுக்கு எதிர்காலம் பற்றி அதிக அக்கறை இருப்பது எனக்கு இவ்வளவு இருக்கும் என்பது அப்போத்துதான் நான் தெரிந்து  கொண்டாலும் என் நிகழகாலம் அப்போது கேள்விக்கு உரியதாகிவிட்டது. சரி காசா பணமா என்று் அந்த மளிகை லிஸ்டை வைத்து  என் பலன் சொல்லும் ஆபத்தான பகடையை உருட்ட தொடங்கினேன்...

     முதலில் எல்லாம் சரி என்று சொல்ல தொடங்கியவர் .மெல்ல ஆழமான கேள்விகளைத் தொடங்கிவிட்டார் .எனக்குக் காசு கொடுத்தாலும் வராத பதில்களை நான் எங்குப் போய்த் தேடுவேன் ? என்னிடம் நாஸ்டராடாமஸ் படித்துணர்ந்த யூதத்தின் கபாலா (Kabbalah) குறிப்புகள் கிடைத்தாலும் பரவாயில்லை இருந்தாலும் மெல்ல நானும் யோசிக்க, யோசிக்க ஒரு சில பதில்களை என் சுய அறிவு அல்லது சிந்தனை இல்லாமல் பேசுவதை உணர்ந்தேன் .அந்தப் புத்தகத்திர்க்குச் சம்பந்தமில்லாமல் இன்னும் சொல்ல போனால் கொஞ்சம் குருட்டுதனமாக இருந்தது ஆனால் என் சீனியர் பெண் தொடர்ந்து சரியாகச் சொல்கிறேன் என்று உற்சாகப் படுத்திக் கொண்டு இருந்தார் 
                 

 
                   அதை எனக்கு நானே தெரிந்து கொள்ள அடுத்த நாள் வாய்ப்புக் கிடைத்தது . அதே என் சீனியர் பக்கத்து வீட்டுக்கார பெண் தேதிகளை எப்படியோ பிடித்துக் கொண்டு வந்தார் .(எல்லா பக்கத்து வீட்டு பெண்ணையும் போல அவரையும் அவருக்கு பிடிக்காது போல !) அதன் பலன் சொல்லும்போது எனக்குத் தோணிய விசயமெல்லாம் பேச தொடங்கினேன்.அதாவது நியுமராலஜி தாண்டி ..அப்படி  நான் சொன்ன விசயத்தில் ஒன்று அவர் கொண்டு வந்த பக்கத்து வீட்டுப் பெண்  அவர் கணவர் இல்லாத நேரத்தில் , அவர் கணவரின் சட்டையை மாட்டிக் கொண்டு வீட்டுக்குள் ஆடுவார் என்றேன் .இதை எப்படிச் சொன்னேன் என்று எனக்கே ஆச்சர்யம் .  அதைசொன்னவுடன் அவர்களுக்கு ஆச்சர்யம். எப்படி பார்த்த மாதிரி சொல்றீங்க என்றார் ?  அது சரி அதை இவர்கள் எப்படி எட்டி பார்த்தார்கள் என்று கேட்க தோணியது ஆனால் அவர் எனக்கு  சீனியராச்சே ?      



             இதில் எனக்கு நெருங்கிய அல்லது எனக்குத் தெரிந்த யாருக்கும் பலன் சொல்ல வரவும் இல்லை அப்படிச் சொன்னது பொருந்தவும் இல்லை என்பது எனக்கு் ஏன் புரியாத புதிராகவே தொடர்ந்தது.அப்போது  என் நிறுவனத்தில் எலெட்ரிக்கல் செக்சனில் நண்பர் ஆறுமுகம் இருந்தார் அவர் துறையில் மிகச் சிறந்த புத்திசாலி .எனக்கு எப்போதும் ஏதாவது ஒரு வகையில் புத்திசாலிகளிடம் தொடர்பு வைத்து கொள்வேன் ஆனால் அவர் சட்டென கோபப் படுபவர் .ஒருநாள்.அவர் தனது  என்னை பற்றி சூப்பர்வைசரிடம் சொல்லி இருக்கிறார்.அவருக்குப் பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லை எனவும் அவர் மனைவி பல முறை கருவுற்று கலைந்து போவதாகவும் சொன்னார் .இத்தனைக்கும் அவர் மனைவி ஒரு அரசு பொது மருத்துவ மனையில் இருக்கும் அந்தப் பகுதியில் வசிக்கும் அனேக பேருக்கு தெரிந்த சீனியர் நர்ஸ். 



           அவருக்குப் பார்க்கும் போது நான் கேட்ட முதல் கேள்வி உங்களுக்குத் தந்தை இருக்கிறாரா என்பதுதான் .இல்லை என்றார் .அவருக்குத் திதி அல்லது திவசம் செய்கிறீர்களா என்றேன் .சட்டெனக் கோபப் பட்டு அவன் செத்த அன்னைக்கு எங்கு இருந்தாலும் கட்டாயம் கறி சாப்பாடு சாப்பிடுவேன் என்றார் கொஞ்சமும் தயக்கமில்லாமல் .நான் யோசிக்காமால் ,அவருக்குத் திதி செய்தால் மட்டுமே குழந்தை பாக்கியம் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன் . 



                சில நாள் கழித்து மிண்டும் என்னைச் சந்தித்தார் .தன் மனைவியிடம் பேசினேன் .அதையும் செய்து பார்க்கலாம் என்கிறார் என்றார் .அதாவது தனக்கு உடன்பாடி இல்லையென்பதை சூசகமாகச் சொன்னார் .அதர்க்கு என்ன செய்ய வேண்டும் என்றார் .எனக்கு என்ன தெரியும் ? யாராவது இதைப் பற்றித் தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளச் சொன்னேன் .அதைத் தொடர்ந்து அப்போது எனக்குள் ஒரு கேள்வி அவரின் உள்ளுணர்வே தூண்டி கேட்க சொன்னது போல இருந்தது .அது உங்க அப்பா போட்டோ அல்லது பயன் படுத்திய பொருள் எதாவது ஒன்றை வைத்து இந்த ’காரியம்’ பண்ணுங்கள் என்றேன் அந்த ஆள் இருக்கிற போட்டாவும் இல்லை பயன் படுத்திய எந்தப் பொருளும் இல்லை என்றார் தீர்மானமாக. 



    இருக்கும் என்றேன் நான் .என்னைக் கூர்மையாகப் பார்த்து எங்கு? என்றார் . ஏதோ ஒரு உங்கள் உறவுக்கார பெண் கல்யாண போட்டோவில் பின்னால் மூன்று நபர்கள் இருக்கிறார்கள் அதில் அவரும் இருக்கிறார் என்றேன் தீர்மானமாக .அதோடு அவர் பயன்படுத்திய மரப் பொறுள் உங்கள் சொந்த ஊரில் உள்ள வீட்டில் இருக்கிறது என்றேன் .அவர் என்ன மீண்டும் உற்றுப்பார்த்தார் .எனக்கு நான் சொல்வது சரியா, இல்லையா என்பது கூட எனக்குத் தெரியவில்லை ஆனால் அவர் விச்யத்தில் அது பற்றி எனக்கு அக்கறையும் இல்லை.காரணம் அவர் ஏதோ சோதிப்பது போல என் உள்ளுணர்வு சொன்னது . 

             அவர் இரண்டு மாதம் கழித்து என் வந்த் போது எலெட்ரிக்கல் செக்சனில் நண்பரிடம் , காரியம் எல்லாம் செய்து விட்டதாகவும் அதர்க்குப் பின் தன் மனைவி கருவுற்று இருப்பதாகச் சொன்னார் . 



              இதர்க்கு இடையில், மே 1 ஆம் தேதிக்கு இரண்டு நாள் தொடந்து விடுமுறை கிடைத்ததால் கமபெனியில் வேலை பார்க்கும் ஒரு படுகர் இனத்தைச் சேர்ந்த பையனுடன் அவன் சொந்த ஊரான நீலகிரி மாவட்டத்தின் மஞ்சகோம்பைக்கு அழைத்துச் சென்றான் அங்கு மூன்று நாள் திருவிழா.அங்குள்ள நாகராஜா என்ற பாம்பு சாமி கோவில் விழா அப்போதுதான் கொண்டாடுவார்கள் .அங்கு ஆண்கள் எல்லோரும் போதை திருவிழாவாகக் கொண்டாடினார்கள் .பெண்கள் அவர்கள் பாரம்பரிய நடனத்தோடு வெகு உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள் . அன்று இரவு எல்லோரும் சுமார் 10 மணி சுமாருக்கு தூங்க போகும் முன் என்னை அழைத்துப் போன பையன் எனக்குத் தெரிந்த குறி சொல்லும் ! வேலையைச் சொல்லி விட்டான் .அங்கு இருக்கும் படுகு இன மக்கள் நம்மைப் போன்று பிறந்தவுடன் ஜாதகம் எழுதும் பழக்கம் இல்லாதவர்கள்.இயற்கையை மிகவும் நம்புவதால் இருக்கலாம் . வேறு காரணம் தெரியவில்லை . 

      அங்கு எனக்கு என் வேலை ஒருவிதத்தில்சுலபமாக இருந்தது .அவர்கள் பெயர்களின் எண் பலனே போதுமானதாக இருந்தது .மேலும் குறி சொல்லும் வேலைக்கு அது போதாதா என்ன ? 



              சுமார் இரண்டு மணி வரை பலன் சொலும் வேலை தொடர்ந்தது .அதில் புதிதாய் திருமணம் ஆனவர்கள் நகரத்தில் எந்த வேலை எப்படி அமையும் ,ஒரு பெண் 13 வயது ஆகியும் வயதுக்கு வரவில்லை எப்போது வருவாள் எப்போது என் முட்டி வலி சரியாகி நான் சாய்பாபவுக்குச் சேவை செய்வேன் ,குடிப்பதை எப்போது என் வீடடுக்காரர் நிறுத்துவார் , எப்போது கல்யாணாம் ஆகும் ,இந்த வீடு ராசியா ,எனக்கு என்ன விதமான் நோய் ,மீண்டும் கணவர் ஒன்று சேருவார் என இப்படிப் பல கேள்விகள் முன் வந்து கொட்டினார்கள் அத்தனைக்கும் பதில் சொன்னேன் ஆனால் யாருக்கு என்ன சொன்னேன் என்று ஞாபகம் இல்லை . 



   திரும்பி வேலைக்கு வந்த சில மாதங்களில் கல்யாணம் அன் புது ஜோடிக்கு சொன்ன மாதிரி வேலை கிடைத்ததாகச் சொல்லி ஒரு விருந்து வைத்தார்கள் .அடுத்து ,சாய் பாபா சேவைக்குத் தயரானவர் , வயதுக்கு வராமல் இருந்து வந்த பெண் வீட்டார் இப்படிச் சிலர் மட்டும் சொன்ன மாதிரி நடந்ததாக நேரில் வந்து என்னை அங்கு அழைத்துச் சென்ற பையன் வீட்டுக்கு வந்து என்னை அழைத்துச் சொன்னார்கள் .அதெல்லாம் நான் சொன்ன மாதிரி ஒரு தடயமில்லாத சான்றுகள் ,அதே போலக் கம்பெனி எலக்ட்ரிக் சூப்பர்வைசர் மனைவிக்குக் குழந்தை பிறநதது.அடுத்து அவர் வீடு கட்டவும் ஏதோ கேட்டார் .ஆனால் எனக்கு எதுவும் பெரிதாகச் சொல்ல தெரியவில்லை . 




         சில பேருக்கு இப்படி பலன் சொல்லும்போது அவர்கள் விசயம் அவர்கள் வழியே காட்சியாக விரிவது போலவும் மேலும் அவர்களுக்கான விசயத்தை அவர்களே என்னிடம் சொல்ல தூண்டுவது போலவும் எனக்குள் தொன்றும் .சில ஆண்டுகள் என் இந்த விசயங்கள் மெல்ல என்னை விட்டுப் போகத் தொடங்கியது அதர்க்குக் காரணம் இந்த  பற்றித் தெரிந்தவர்கள் வேலையை விட்டுப் போனதும் ,அதே நிறுவனத்தில் வேறு பொறுப்புகளுக்கு நான் மாறிப்போனதும் இது தொடரமல் போனது காரணமாக இருக்கலாம் .இதெல்லாம் உண்மைதானா என்று கூட சந்தேகம் வருகிறது .ஆனால் அந்த உள்ளுணர்வு தடம் எல்லோருக்கும் சில சமயம்  வந்து போகும் .ஆனால் எனக்கு தொடர ஆர்வமில்லை .சிலிர்ப்புகள் எப்போதாவது மட்டும் வருவது்தானே  நல்லது  ? 

திங்கள், 12 ஜனவரி, 2015

ராஜீவ் காந்தி சாலை - வலியின் பயணம்.



                   நேற்றுத்தான் ராஜீவ் காந்தி சாலை வாசிததேன் .வெகு பல விமர்சனங்களால் விவாதிக்கப்பட்டு அதன் மூலமே பரிந்துரை செய்யப்பட்ட வித்தியாசமான ஆனால் வெகு தாமதமாக என்னால் வாசிக்கப் பட்ட ஒரு புத்தகம் .

               சமீப காலமாகப் புதிய எழுத்தாளார்களைப் படிக்காமல் தள்ளி போட்டுக் கொண்டே வந்து இருந்தேன்.அதர்க்குக் காரணம் நான் வெகு நாளாகத் தேடி போன புத்தகங்கள் என்னை நோக்கி வர தொடங்கியதுதான் .அவை பெரும்பாலும் உயிர் மற்றும் பிரபஞ்ச ரகசியங்கள் பற்றியது மற்றொரு பக்கம் இப்போதுதான் டிப்ளோமா YHE (Yoga for Human Excellence) முடித்த கையுடன் M.A (VISION ADVANCE DIPLOMA) வகுப்புகள் ஆக்கிரமித்துக் கொள்ளத் துவங்கிவிட்டது .ஏற்கனவே தனிச் செல்ஃபில் வாங்கி வைத்த வேத்தாத்ரி மஹரிசி புத்தகங்கள் படிக்கப்படாததால் முறைத்துப் பார்ப்பது போல ஒரு பக்கம் தோன்றுகிறது .மறு பக்கம் உள்ள செல்ஃபில் காத்து இருக்கும் பல கனத்த புத்தகங்கள் நான் வாசிப்பதர்க்காக என் மரணத்தைத் தள்ளி போட்டுக் கொண்டு இருப்பது போலப் பய முறுத்துகின்றன இதர்க்கு இடையில் லைப்ரரி புத்தகங்கள் வெகு தொந்தரவு செய்யவே இரண்டு லைப்ரரி டோக்கன்களை உள் பீரோவுக்குள் ஒளித்து வைத்து விட்ட பிறகுதான் நிம்மதியாக இருக்கிறது.ஏதோ பெரிய படிப்பாளி போல என்னைப் பற்றிச் சொல்லி விட்டேனோ ? அப்படியெல்லாம் சொல்லி விட முடியாது.போதிய அளவு வருமானம் போதும் என்ற முடிவுக்குள் வந்த பிறகு இது சாத்தியம் என்றாகி விட்டது .அதிலும் நிறைய எழுத ஆசைப்படுவதால் துரத்தி துரத்தி நிறையப் படிக்கத் தூண்டும் ஆசையைத் தவிர்க்க முடியவில்லை.எவ்வளவு துரத்தினாலும் ஓடி முடிக்க வேண்டிய எல்லை கோடு மட்டும் எவ்வளவு தூரம் என்பது சத்தியமாகக் கண்ணில் பட மாடேன்கிறது ... 



வசிகரக் குரல் !
ராஜீவ் காந்தி சாலை புத்தகம் கிடைத்தவுடன் அப்புறம் படிக்கலாம் என்று மெல்ல ஒதுக்கி வைத்தேன்.அது வேறு ஒருவர் கொடுத்த ஓசி புத்தகம் என்பதால் மட்டுமல்ல பல நாட்களாக ஏற்கனவே வாங்கி வைத்தும் வாசிக்க முடியாத புத்தகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து என்னைக் காரி துப்பி விடுவதர்க்குள் படித்து விட வேண்டும் என்ற ஒரு உதறலோடுதான் இதன் முன்னுரை படித்தேன்.எந்த புத்தகம் கிடைத்தாலும் அதன் முன்னுரை எப்போதும் கவனமாகப் படித்து விடுவது என் தீராத வழக்கம் .எந்தப் புத்தகம் கிடைத்தாலும் அதன் ஆசிரியரின் எழுத்தோட்டத்தில் கலக்க இது மிக உதவும் எனற என் அசையாத நம்பிக்கை .அப்படிப் படித்தும் சில சமயம் தள்ளி வைத்து விட்டு எனக்கு நானே பல சாபங்களை விட்டு கொள்வதுவும் உண்டு ஆனால் ஏதோ ஒரு ( குதித்து விடு என்று ப்ரணவுக்குக் கேட்ட கடைசிக் குரல் போல !) வசிகரக் குரல் என்னை ராஜீவ் காந்தி சாலையைப் படிக்க ஆட்படுத்தியது . 



அடுத்தச் சாபம் ?
ரயில்வே ஸ்டேச்னில் வெகு தூரம் ஓடி உள்ளே வந்துபுகும் ரயிலுக்கு அருகில் பிளாட் ஃபார்மில் நிற்க்கும் போது ,முகத்தில் ஒரு வெப்பம் அறைந்து தாக்கி உடலெல்லாம் அதன் இரைச்சலும் ஓட்டமும் பிளாட் ஃபாரத்தின் ஒரு அதிர்வு பரவி உடலை உலுக்குமே அப்படிச் சட்டெனெ வேறு ஒரு உலகத்துக்குள் வாரி விழுந்தது போல உணர்ந்தேன் . ஐ.டி உலகம் பற்றி வெகு அரசல் புரசலாக நான் கேள்விப்பட்டு இருக்கிறேன் .நான் அதிகம் படிக்காததால் இந்தது்றை பற்றி எனக்குப் பற்றி வெகு சொற்பமாகவே தெரியும்.நண்பர்களும் இல்லை .ஆனால் சென்னையின் அவசர உலகத்துக்குள் என் முப்பது வருடத்திர்க்கு மேற்பட்ட பழக்கத்தில் இருந்த நண்பர்களைத் தொலைத்து இருக்கிறேன் .இந்தப் புத்தகத்தில் வரும் கார்த்திக் , (அவர்தான் அனேகமாக ஆசிரியர் விநாயக முருகனாக இருக்க வேண்டும்) ப்ரணவ் ,சுஜா,லூர்து பலரும் வெகு பரிச்சயமான என் நண்பர்களின் மன உணர்வோடு ஒத்துப் போவதுதான் என்னை ஒவ்வொரு அத்தியாத்திர்க்குள்ளும் ஓடி ஓடி புதைத்துக் கொள்ளத் தூண்டியது .வெகு அருகே இவ்வளவு அழுத்தமான ஒரு வியாபார உலகம் தனது நீளமான கோரை பல்லுடன் இளித்துக் கொண்டு ஜிகினா பூசி வசீகரப் பொம்மையாய் நிற்பதை தெரிந்து கொள்ளும் போது ,இன்றைய இளைஞர்களுக்கு டாஸ்மாக்குக்கு அடுத்தச் சாபம் இதுதானோ என்று மனசுக்குள் ஒரு அயற்சி கலந்த உதறலை ஏற்படுத்தி விடுகிறது .


விதியின் தீர்ப்பு
 சிறுசேரியில் - ராஜீவ் காந்தி சாலை அமைக்கப்படும் முன் வாழ்ந்த அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையும் அதர்க்குப் பின் மாறிய சிதிலமான வாழ்க்கை முறை பற்றியும் எவ்வித அனுசரனையும் உடன்பாடும் செய்து கொள்ளாத நடந்தது நடந்தபடியே விவரிப்பதாக அதன் பாத்திரங்கள் பேசுவதும் ,காலம் என்ற ஒரு அத்தியாம் அதைச் சில சமயம் விதியின் தீர்ப்பு போல இடையிடையே வந்து பேசிப் போவதும் கட்டுரை நடையை ஞாபகப் படுத்தினாலும் அதன் அவசியம் இல்லாமல் இல்லை . 



எழுத்து நடை 
சில கேரக்டரில் உள்ளும் புறமும் மாறி , மாறிப் பயணிப்பது ஆச்சர்யமாக இருப்பதோடு சந்தோசமாக இருக்கிறது முக்கியமாக எனக்கு மட்டுமேதான் இப்படி அபத்தமாக் தோன்றுகிறதோ என்ற பிரமாணர்களையும் மலையாளிகளைப் பற்றியும் நான் என் அநுபவத்தில் பெற்ற இந்தப் புத்தகம் உரக்க பேசி என் சில ஆறாத காயங்களுக்கு மருந்து இட்டு சென்று விட்டது 



இதைச் சொல்லாமல் விட்டால் ராஜீவ் காந்தி சாலையில் நான் பயணித்த அல்லது வாசித்த அநுபவம் முற்று பெறாது .ஆம். இந்த எழுத்துகளுனூடே பயன்படுத்திய கெட்ட வார்த்தைகள்,பாசாங்கற்ற உணர்வுகளோடு சொல்லப்பட்ட உறுப்புகள் வர்ணனை ...



சென்சார் இல்லாத இவைகளை உணர்வுகள் படிக்கப்படும் போது கொஞ்சம் நஞ்ச அதிர்ச்சி தரவில்லை .எங்கோ ஒதுங்கி போகும் மிருகத்தைக் கையசைத்துக் கவனத்தை நம் பக்கம் திருப்பிக் கொள்ளச் செய்யும் முயற்சி போலக் கொஞ்சம் பயமாக இருந்தது . எது அவரை இவ்வளவு சுதந்திரத்தோடு எழுத தூண்டியது என்பதை வாசித்து முடித்த பிறகும் அதிகப் பயத்தோடு யோசிக்கிறேன் . அது அவரின் எழுத்தின் வெற்றியா அல்லது இப்படியும் தமிழ் எழுதப்பட வேண்டும் என்ற முன் பாதையைத் தனது முதல் முயற்சியிலேயே போட்டு வைக்கிறாரா எனபதொடு நிற்காமல் ஒரு வேளை பய முறுத்துகிறாரோ விநாயக முருகன்? தெரியவில்லை.ஆனால் இந்த நடை மிகப் பெரிய தாக்கம் இடி போல இறங்கி விட்டது. 



புத்தகத்தின் வெற்றி 

அதன் உருவாக்கத்திர்க்கு காரணமான வெளி மாநிலத்தாரின் ரத்த வாடை  ,வெகு அருகே இன்றைய வாழும் இளம் மக்களின் உணர்வுகள் அருகே கொண்டு செல்லும் முயற்சி .மாற்றங்கள் எற்படுத்தும் வலிகள் .அவசர அவசரமாக மாறிக் கொள்ளும் ஒரு கலாச்சாரத்தின் அலங்கோல தரிசனம் .மீண்டும் மீண்டும் இன்றைய ஜெனராசன் கேப்பில் அடி வாங்கிப் பைத்தியகார உலகத்துக்குள் தள்ளப்பட்டுப் பிச்சைகாரர்களாக வாழும் பெற்றோர்கள் .கலாச்சாரம் என்பது வெளிவேசம் மட்டுமல்ல உள்ளே இருக்கும் உலகத்துக்குள் அத்து மீறிய முயற்சி செய்தால் எவ்வித மன அழுத்தம் தரும் தற்கொலை முயற்சி என்று ஒவ்வொருக்கும் மவுன புரட்சியைத் தூண்டு விதமாக ராஜீவ் காந்தி சாலை பயணம் முன்னே கிளைகள் அற்ற சாலையில் பயணிப்பதான அழுத்தமான கேள்விகள் கலந்த யோசனை தந்து விரிந்து செல்கிறது...

சனி, 3 ஜனவரி, 2015

குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்கலாமா ?




தவறு செய்தவர்கள் யாராயிருந்தால் என்ன அது யாரிடம் என்றால் என்ன ? அப்படிக் கேட்பது தானே முறை .என்று ஒரே வார்த்தையில் தீர்ப்பு எழுதிவிட்டு வேறு எதாவது சினிமா விமர்சனம் படிக்கப் போய்விடலாம் .ஆனால் யார் தவறு செய்தார்கள் என்று தெரியவே இப்போதெல்லாம் வெகு நாளாகிவிட்டது .ஆடிட்டர் செய்த தவறுக்கு ஒரு முதல்வர் , பதவியையே இழக்க வேண்டியாதாக இருக்கிறது என்று ஒரு பக்கம் நாம் கவலை படுகிறோம் .இன்னொறு பக்கம் இலவசங்களை அள்ளித்தரும் ஓர் அரசு வெள்ளை அறிக்கை சமர்பிக்கச் சொல்லி (எதிர்கட்சி அந்தஸ்த்து இல்லாத) ஒரு கட்சி ஆளும் கட்சியைக் கேட்கிறது . இது நாட்டில் .சரி அது பெரிய விசயம் .அதைப் புரிந்துகொள்ளப் புரிந்து கொள்ளத்தான் சிக்கல் வலுக்கும் .சரி நாம் தலைப்புக்கு வருவோமே. 

இன்று பையனுக்குப் பள்ளி அரையாண்டு விடுமுறை முடிந்து திறக்கிறார்கள் .காலையில் 7.30 க்குப் பள்ளியெழுச்சி பாடிய போது அவன் சரியாக விழித்துக் கூடப் பார்க்காமல் கேட்ட முதல் வார்த்தை , இன்னைக்கு லீவ் போட்டுக்கறேன்ப்பா... 


எழுப்பி உட்காரவைத்து கேட்டதர்க்கு அவன் சொன்ன காரணம் . நாழு ப்ராஜெட் கொடுத்து இருந்தார்களாம் ஒன்றூ கூடச் செய்யலையாம் இன்று ஒரு நாள் லீவ் எடுத்து பண்ணிட்டு நாளைக்குப் போறானாம் .கடந்த 24 முதல் நேற்று 1 ஆம் தேதி வரை அவனுக்கு ஏறக்குறைய 9 நாட்கள் விடுமுறையில் செய்யாத ப்ராஜெட் ஒர்க்கை இன்று லீவ் போட்டுச் செய்ய அனுமதி கேட்கிறான் .இத்தனைக்கும் அவனுக்கு லீவ் ஆரம்பித்த இரண்டாம் நாளே நான் கேட்டபோது எழுத்துப் பயிற்சி மட்டும்தான் என்று காட்டினான் .எனக்கும் எழுத வேண்டிய வேலை இருந்த போது அழகாக எழுதி முடித்து விட்டான் .ஆனால் அப்போது கூட ப்ராஜெக்ட் பற்றி மூச் விடவில்லை . இதை அவன் டைரியில் எழுதி அனுப்பி இருப்பார்கள் .அதை எப்போதும் கவனிக்கும் அவன் அம்மா சமீபத்தில் வேலைக்குப் போவதால் வேலை பளு கவனிக்கவில்லை . 


இதைக் கேட்டால் சட்டெனெ யாருக்கும் கோபம் வரும்.அது மட்டுமா வரும் நம் மேல் பச்சாதாபமும் - சுய இரக்கம் அப்புறம் கழிவிறக்கம் எல்லாம் வந்தது கூடவே இவற்றின் விளைவாய் கோழைத்தனமான - இயலாமையில் அவனை அடிக்க வேண்டும் என்ற் ஆத்திரம் வந்தது .அதை எல்லாம் தள்ளி போட குளிக்கப் போனேன் . அவன் அம்மா அவனை நான் விட்ட இடத்திலிருந்து திட்டி தீர்க்க முடியாமல் தொடர்ந்து கொண்டு இருந்தது குளியலறை கேட்டது.இத்தனை பணம் கட்டி என்ன பிரோயோஜனம் , வெறும் டி.வி பார்த்துடுக்கிட்டு இருந்துவிட்டுச் சொல்லாமல் மறைத்து இருந்த விட்டாய் நேற்றாவது செய்து இருகலாமே என்றும் சில வார்த்தைகள் காதில் விழுந்தது அப்புறம் பெரிய மவுனம் தொடர்ந்தது .ஒரு வேளை காதில் சோப்பு நுறை பட்டதால் கேட்கவில்லை என்று நினைத்து வீட்டுக்குள் நுழைந்தால் .. 


அவனுக்கு எந்த ப்ராஜெக்ட் முதல்ல பண்ணனும் அடுத்து என்ன பண்ணனுங்கிற புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்து கொண்டு இருந்தது ! குளிதத போது கரைந்து போன கோப குரங்கு இப்போது வேறு கிளைக்குத் தாவி மனைவி மேல் தொற்றிக்கொண்டது.. 

              அவனைக் கவனித்தது போக நேரம் இருப்பதால் வேலைக்குப் போவேன் என்று சொல்லிவிட்டு ,அவன் டைரி கூடப் படிக்காமல் விட்டு விட்டு அவனுடன் விடுமுறை உடன் பாடு போட்டது எனக்கு அதிர்ச்சி அளிக்கமால் என்ன செய்யும் ? 


ஆண்களை விடப் பெண்கள் வருமானம் கூட இருந்தாலும் பல கம்பெனி மாறாமல் இருக்கக் காரணம் இது தானோ ? சட்டெனெ ஒட்டி கொள்Laaal குறை நிறை சொல்லி விட்டு அப்புறம் மெல்ல கம்பெனியே கதி என்பதாய் ஒட்டி கொள்கிறார்கள் .அவர்கள் சிங்கர் வேலை செய்யச் சேர்ந்து முழுதாய் 6 மாதம் கூட ஆகவில்லை .ஆனால் கம்பெனி மேல் இருந்த பேச்சு அக்கறை மெல்ல வீட்டின் மேல் இருந்து திசை விலகி விட்டது .இந்த இடைவெளியை நிரப்ப அவனை டூயுசன் சேர சொல்லி கட்டாயப் படுத்தியும் பார்த்தார்கள்.அவன் மசியவில்லை .என்னிடம் கேட்டார்கள் .அவன் போதிய அளவுக்கு அக்கறையாகப் படித்துக் கொண்டு இருந்ததாகப் பட்டதால் .நான் அவன் முடிவுக்கு விட்டு விட்டேன் .ஆனால் இந்த விவாத விசாரணையில்(! ) அதைக் காரணம் காட்டியதோடு விட்டார்களா இல்லை . 


அறிவு திருக்கோயிலில் நேற்று 01-01-2015 முதல் மகா உறசவ விழா 2015 முன்னிட்டு , அவனுக்கு விடுமுறை விட்ட நாளிலிருந்து காலை 7.30 - 9.00 மணிவரை தினமும் யோகசன பயிற்சி நடந்தது அதர்க்குப் போனதால்தான் அவன் ப்ராஜக்ட் செய்யவில்லை என்று ஒரு புதுவிதமான புத்தகத்தைப் பார்த்து தவறாக முயற்சி செய்த சமையல் பதார்த்தம் மாதிரி பதில் தந்தார்கள் . 

சரி இனி விவாதம் எந்தத் தீர்வும் தராது என்ற அவனை அடிப்பதாகச் சொல்லி கொஞ்சம் பயமுறுத்தி குளித்துக் கிளம்பச் செய்தேன் அழுது கொண்டே கிளம்பினான்.
         நாங்கள் தவறு செய்து கொண்டு இருக்கிறோம் . புதிதாய் வேலைக்குப் போவதால் மனைவியும் அவனைக் கவனிக்க நேரம் எடுத்துக் கொள்ள முடியவில்லை .மேலும் நான் புதிதாய் சேர்ந்த பயிற்சி வகுப்புகள் அவனோடு செலவிடும் நேரத்தை விழுங்கி விட்டது . 


இப்போதெல்லாம்ஆண்களை விடப் பெண்கள் பிரைவசி வேணும் என்பதால் - கோவில் இல்லாத ஊர்களைப் போலப் பெரியவர்கள் இல்லாத வீடுகள் பெருகி வருகிறது .வீட்டில் பெரியவர்கள் தவிர்க்க பட்டு வருவதைப் பள்ளி விடும்போது குழந்தைகளை அழைத்துச் செல்லவரும் பெரும்பாலான தாய்மார்களின் இடுப்பிலும் ,டூ வீலர் சாவியோடு கோர்த்து இருக்கும் வீட்டுச் சாவிகள் சாட்சிகள் சொல்கின்றன. 


வீட்டில் என் மகன் ஒருவன் மட்டுமே . பல வீட்டில் ,குழந்தைகள் படும் பாடு என் வீட்டில் என் மகனுக்கு ஏற்படுவது போல இன்னும் தனிமை அதிகம். அவன் தனிமை அவனைவிட அனாதையாக இருக்கிறது அந்தத் தனிமையை ,சோட்டா பீம், மிஸ்டர் பீன் ,போகோ , டிஸ்கவரி சேனல்கள் நிரப்பிக் கொண்டு வருகிறது .அவனை , எங்களை விட டி.வி தான் அதிகம் பார்க்கிறது என்று கூடச் சொல்லலாம் ! 


குழந்தைகள் யாரோ செய்த ப்ராஜெட் ஒர்க் போல வளர்கிறார்க்ள் .அதிக நேரம் பள்ளி , ஹோம் இதனால்தான் விடுமுறையின் போது அவர்கள் என்ன செய்வது என்பது தெரியாமல் சேட்டை என்ற முரண்பாடக வள்ர்கிறார்கள் .அதிகம் சேட்டை செய்யும் பையனுக்குப் பிட்யூட்டரி சுரப்பில் குளறுபடி என்று நவீன விஞ்ஞானம் கருத்து சொல்லி கலாய்க்கிறது . 


எனவே இந்தச் சூழலுக்கு அவன் காரணம் இல்லை நாங்கள் தான் காரணம் அதை விட நானே ஒரு காரணம். கதை இல்லாத படம் போல போய்க் கொண்டு இருக்கும் அவன் வாழ்க்கையை ஜெனரேசன் கேப் என்ற ஒரு வார்த்தை மூலம் அத்தனை முடிச்சுகளிலிருந்தும் ஒரேடியாகத் தப்பித்துக் கொள்ள நான் விரும்பவில்லை.எதாவது செய்ய வேண்டும் .இரவு அவனைப் பார்க்கும் போது முதலில் அவனிடம் மன்னிப்பு கேட்க்க வேண்டும். அது அவனுக்கு முன்னால் செய்த தவறுக்காக இல்லை. வருங்காலத்தில் எதுவும் இந்த மாதிரி தவறுகள் நிகழாமல் இருக்க வேண்டும் என்பதர்க்காக ..