செவ்வாய், 31 மார்ச், 2015

தவறான அழைப்பு ! ( Missed call )



சென்ற வாரம் கோபி நாங்கள் வேலை பார்க்கும் கம்பெனியிலேயே இரண்டாவது அல்லது மூன்றாவது ஆளாகச் செல் வாங்கியிருந்தான் .நல்ல ஃபேன்சி நம்பர் கேட்ட போது எனக்குத் தெரிந்த ஒரு கடைக்காரரிடம் வாங்கிக் கொடுத்தேன் .அந்த எண் ஆக்டிவேட் ஆன சில நாளில் அவனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்தது.கூப்பிட்டுப் பேசிய போது தான் இப்போது அவனைத் தேடி வரும் பெண் பேசினாள் .யாரையோ கூப்பிட இவனைக் கூப்பிட்டாளா அல்லது கோபியைப் போல அவளும் பொழுதை போக்க பேசும் பெண்ணா தெரியவில்லை.இரண்டு பேரும் சில சமயம் கடலை போடுவதை விடச் செல்லின் பேட்டரியை அவிந்து போகும் அளவுக்குக் கருகி விடுவார்கள் .ஆனால் அதர்க்கு சில நாள் முந்திதான் இந்த மாதிரி பெண்களைப் போனில் தவறாகத் தொடர்பு கொள்வது ஜீரோ க்ரைம் அளவுக்கு ஜல்லி அடித்துக் கொண்டு இருந்தார்கள் பத்திரிக்கைகளிலும் காவல் துறையிலும் . ஒரு வேளை கோபி எதாவது ஆபாசமாகப் பேசி சிக்க வைக்கும் முயற்சியா ? இந்த நேரில் சந்திப்பு என்பதுதான் என் பயம்.சரி பிரச்சனை கதவை தட்டி விட்டது இனி கதவை சாத்திக் கொண்டு அடுப்புக்குள் பதுங்க முடியாதே ? தனியே அவனை அனுப்பவும் முடியாது ( ? ) .எதாவது செய்ய வேண்டும் .

மீதியை சாப்பிட்டு விட்டு ,கம்பெனிக்குள் ஒரு சின்ன வேளை என்று புது மனைவிக்குப் பொய் சொல்லும் கணக்கை தொடங்கி வைத்து விட்டு ,அருள்புரத்திலிருந்து திருப்பூர் பஸ் நிலையம் வந்து விட்டோம் .வரும் போதே அவனிடம் தெளிவாய் சொல்லி விட்டேன் .நீ போய் முதலில் பேசு.நான் ஓரமாக இருந்து கவனிக்கிறேன் .ஒருவேளை ஆளை மாட்டிக் கொடுக்கும் வேளை என்றால் நான் வேறு மாதிரி எதாவது செய்கிறேன் .( அந்த வேறு மாதிரி என்பது அப்போதுவரைக்கும் எனக்கே தெரியாது ) ஒரே இடத்தில் நின்று பேசாதீர்கள் .இடத்தை மாற்றிப் பேசுங்கள் அப்போதுதான் யாராவது உங்களைக் கவனிக்கிறார்களா என்பதை நான் கவனிக்க முடியும் என்றும் சொன்னேன் .எல்லாத்துக்கும் சரியென்றான் கோபி .அவனுக்கு முதலில் இருந்த பயத்தை விடவும் இப்போது யாரோ ஒரு பெண்ண பார்க்கும் த்ரில்லும் பரபரப்பும் மட்டுமே பிடித்திருந்தது அதனால் எது கேட்டாலும் சரி என்று சொல்லும் மன நிலைக்கு அவன் போய் விட்டான் .ஒருவேளை அவன் இடத்தில் நான் இருந்தால் இப்படித்தான் இருந்திருப்பேனோ தெரியவில்லை ?

அந்தப் பெண் வந்த பேருந்து எண் சொன்னதும் அவன் சந்திக்கச் சிரமமும் இல்லை அதுதானே அலைபேசியின் இருப்பதன் வசதி.நான் சுமார் 100 அடி தொலைவில் நின்று கொண்டேன் .அந்தப் பெண்ணைப் பார்த்தேன் .தோளில் மருத்து கல்லூரி வெள்ளைக் கோட் இருந்தது .கையில் ஒரு சின்னச் சூட்கேஸ் .பேருந்து நிலைய மங்ளான வெளிச்சமும் , எனக்கும் அவர்களுக்குமான தூரமும் அந்தப் பெண் அழகா இல்லையா என்பதைக் கணிக்க முடியவில்லை .இப்போது இதுவா முக்கியம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு அவர்களைக் கவனிக்காத மாதிரி பஸ் நிலையத்துக்குள் வருவோர் போவோரை கவனிக்கத் தொடங்கிவிட்டேன் அல்லது அப்படி நடந்து கொண்டேன் .அவர்கள் பேருந்து நிலையம் விட்டு வெளியே வந்து ஒரு குளிர்பான கடைக்குள் போனார்கள்.எனக்கு தள்ளி இருந்து கவனிக்கு வசதியாக இருந்தது .யாரும் சந்தேகப்படும் படியாய் தொடரவில்லை.கால் மணி நேரம் கழித்து வெளியே வந்தார்கள் .அவர்கள் இருவரும் பேசும் தோரணையைப் பார்த்தால் ஏதோ போன ஜென்மத்துப் பழக்கம் மாதிரி சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டு , மிக அன்னியோன்யமாய் இருந்து .அது சரி அவர்களுக்கு என்ன ? பார்த்துக் கொள்ள ஆள் இருந்தால் பல்லவன் பஸ் கூடச் சேரன் பஸ் மேல் உரசி விட்டுத்தானே போகும் ( இதர்க்கு அர்த்தம் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. ஏதோ டென்சன் எனக்குள் உளறிக்கொண்டேன். )

மீண்டும் பஸ் நிலயத்திர்க்குள் அழைத்துச் சென்றான் கோபி.நானும் சில நூறு அடிகள் இடவேளையில் தொடர்ந்து போனேன்.அந்தப் பெண் தண்ணீர் பாட்டில் வாங்கியது .அந்தப் பெண் கொடுத்த நோட்டுக்குச் சில்லறை இல்லை என்று கடைக்காரர் சொல்வது தெரிந்தது .கோபி செலவாளி .நிச்சயம் கையில் காசு இருக்க வாய்ப்பு இல்லை.இனி காத்து இருப்பது அவன் கௌரவத்திர்க்கு இழுக்கு .மெல்ல கிட்டப் போய் அப்போதுதான் கோபியை அங்குப் பார்ப்பது போலக் கோபி என்றேன் .திரும்பியவன் எதுவும் சொல்லி விடுவதர்க்கு முன்னே , எங்க இங்க ? என்றேன் புரிந்து கொண்டான் .இவங்க என் ஃப்ரண்ட் .டாக்டருக்கு படிக்கிறாங்க என்று அறிமுகப்படுத்தினான் .அந்தப் பெண் அழகாய்த்தான் இருந்தாள் .

அப்புறம் சில நிமிடங்களில் அந்தப் பெண் விடை பெற்றுக் கிளம்பினாள் .எனக்குத் தீபாவளி பட்டாசை கார்த்திகை மாதம் வரை வைத்து இருந்து வெடிக்க வைத்தால் எப்படி இருக்குமோ அப்படிப் புஸ் என்று போய் விட்டது . இருந்தாலும் நான் கோபி மேல் இவ்வளவு அக்கறை இருக்கக் காரணம் அவன் ஒரு கால் போலியோவால் பாதிக்கப்பட்டு இருக்கும்  .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக