திங்கள், 12 அக்டோபர், 2015

பிஞ்சுக்கால்களின் முள் பயணங்கள் !



குழந்தைகளுக்குத் தவறான விசயங்களைக் கற்பிப்பதில் நம்மைவிடவும் புத்திசாலிகள் யாரும் இருக்க முடியாது .பால் குடி மாறாத போதே பள்ளிச்சேர்க்கை விண்ணப்பப் படிவம் நிரப்பி வைத்துக் கொள்கிறோம். வயசு மூன்றரை வருகிறதோ இல்லையோ விஜயதசமிக்கு “ அ “ போட, அழைத்துக் கொண்டு போய் அடைத்து விடுகிறோம்.அப்புறம் தொடர் ஓட்டம் ... முதலில் நல்ல மார்க் எடுத்தால்போதும் என்போம் .பிறகு வகுப்பில் முதலாவதாக வரவேண்டும் என்போம் அப்புறம் மாவட்ட ,மாநில அளவில் இப்படியே விக்கிரமாத்தியன் கதை போல  கட்டளைகள் நீண்டு கொண்டே போகிறது  அவர்களுக்குக் கொடுத்து அனுப்பும் மதியம் உணவை அமுக்கி அனுப்புவதை விட அவர்கள் புத்திக்குள் வழிய வழிய ஏன் வழிந்து வந்த பிறகும்அமுக்கிக் கொண்டு இருக்கிறோம் கேட்டால் நாங்கள் கஷ்டப்பட்டோம் எங்கள் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்ற புலம்பல் அதோடு மட்டுமில்லைஇன்னொரு பகவத்கீதைப் போல நாங்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிறோம் அவனைப் படிக்க மட்டும்தானே சொல்லுகிறோம் என்ற புலம்பல்பட்டியல் நீள்கிறது ..பெற்றோர்களை உங்கள் படிப்பு என்ன என்றால் மூனாம் கிளாஸ் என்கிறார்கள் .உங்களைப்போல நிறம் இருக்க வேண்டும் ,கலர் இருக்க வேண்டும் ,பல்லு மூக்கு எல்லம் அப்படியே இருந்தால் சந்தோசப்படுவீர்கள் ஆனால் அறிவின் வளர்ச்சியில் ஐன்ஸ்டீன் போல இருக்க வேண்டும் என்றால் அந்தக் குழந்தை என்ன செய்வான் ?அப்படியே பார்த்தால் கூட ஐன்ஸ்டீன் கூடப் பள்ளியிலிருந்து ‘எதற்கும் லாயக்கில்லாத பிள்ளை’ என்றுவெளியேற்றப்பட்டவர்.

நண்பர் சுகுமாரிடம் பேசிக்கொண்டு இருந்த போது , நாம் பிள்ளைகளாக இருந்துதான் பெரியவர்கள் ஆனோம் .இது நாம் பெற்றோர் ஆன பிறகு  அடிக்கடி மறந்து போகிறது .குழந்தைளுக்குன்னு ஒரு உலகம் இருக்கு அதில் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது .நாமெல்லாம் முடிந்த அளவுக்கு படித்தோம் இப்போ நாமும் ஒரு இடத்தில் இல்லையா ? அவர்களை தொந்தரவு படுத்தாமல் விட்டாலே அவன் வழியை தேர்வு செய்து விடுவார்கள். அப்போது போய் உதவினால் போதும்  என்றார். அது மிகவும் சரிதானே ?  இப்படி நாம் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மன அழுத்தம் கொடுக்கும் பட்டியல் நீண்டு கொண்டே போனால்  பின்னாளில் புதுவித நோயாளிகளாக இந்த சமூகத்தில் வலம் வருவார்கள் அவ்வளவுதான் நடக்கும் !

மதிப்பெண் பட்டியலில் ரேங்க் பார்த்துக் கையெழுத்தும் போடும் நாம் பையன் ஒழுக்கம் பற்றியோ ,உடல் நலம் பற்றியோ. என்றாவது அதில் குறிக்கப்பட்டு இருக்கிறதா என்று கவலைப்பட்டு இருப்போமா ? சக மாணவர்களுடன் அவர்கள்  வைத்து இருக்கும் நட்புணர்வு எப்படி இருக்கிறது என்று என்றாவது பார்த்து இருப்போமா ? அவர்கள் என்ன உணவு உண்ண வேண்டும் , எப்படி விளையாட வேண்டும் ,விளையாட்டில் அவர்கள் விருப்பம் எது ? எதாவது தெரியுமா ? நம் வீட்டில் ஒரு புது ஜீவன் வளர்கிறது ஆனால் அதற்கு அதன் விருப்பம் எது என்று தெரியாமல்.இது நல்லதா ?நம் காரணங்களை அவர்கள் மேல் திணித்து எதிர்மறை எண்ணங்களின் விதைகளை அவர்களுக்குள் ஆழமாக விதைப்பதன் மூலம் வாழ்வே கஷ்டம் என்ற மன உணர்விலேயே அவர்கள் முள் செடியாய் வளர்வது அழகா?

இது பத்தாதுன்னு இப்போது இன்னொரு அபாயம் பரவி வருகிறது யோகா என்ற பெயரைச் சொல்லித் தனியார் பள்ளிகளில் மிகப்பெரிய ஸ்டால் போடாத குறையாகக் கூவிக் கூவி வியாபாரம் நடத்தத் தொடங்கி விட்டார்கள். ஆயிரம்கொடு ,ஐநூறு கொடு என்று பிள்ளைகளை  நச்சத் தயார் செய்து அனுப்பிவைக்கிறார்கள்  .

போன வாரம் என் பையன் இப்படித்தான் யோகாவுக்கு நான் தேர்வுச் செய்யப்பட்டு இருக்கிறேன் .வெளியில் போட்டி வைத்து இருக்கிறார்கள் பணம் வேண்டும் என்றான் நாழாவது படிக்கும் என் பையன் பள்ளியில் பணம் கட்டப் போனால், பணத்தை வாங்கிய பிறகு  இந்த போட்டிக்கும்  எங்களுக்கும் எந்தச் சம்ப்ந்தமும் இல்லை.நீங்கள்தான் ஞாயிற்றுக்கிழமைக் குறிப்பிட்ட இடத்திற்குக் அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்றார்கள்.

போட்டி நடக்கும் இடத்திற்கு  பையனைக் கூட்டிப் போனால் எந்த ஒரு சரியான நிர்வாக ஒருக்கிணைப்பும் இல்லை . ஒரே கும்பல் மொச்சுகிறது கும்பலுக்கிடையில் மூன்று மேடை அதில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்புவரை ஒரு மேடை .நான்கு முதல் எட்டாம் வகுப்பு , அடுத்து ஒன்பது முதல் பனிரெண்ட்டாம் வகுப்புவரை . ஒவ்வொருமேடையிலும் மூன்று நடுவர்கள் கையில் மதிப்பெண் போட்ட பிரிண்ட்டடுப் பேப்பரை நடுவர்கள்  தங்கள் மதிப்பெண்ணைத் தூக்கிக்காட்டுவார்கள் பக்கவாட்டில் அவர்கள் ஜூனியர்கள் ( மாஸ்ட்டர்களின் மாணவர்கள் ) குறித்துக் கொள்வார்கள் .மேடையை விட்டு இறங்கியவுடன் ஒரு மெடல் ,சான்றிதல் தருவார்கள்  வாங்கிய பணத்துக்கு மனசாட்சிக்கு பதில் சொல்ல ஆறில் ஒரு பங்குச் செலவுசெய்து விட்டார்கள் .தேர்வு செய்யப்பட்டவர்கள் பின்னர் அழைக்கப்படுவார்கள் என்றார்கள் ( ஒரு வேளை விவேக் பாணியில் ’பின்னே காணும்’ என்பது போலவா? தெரியவில்லை  )

யோகா என்ற பெயரில் யோகா மாஸ்டர்கள் அசோசியேசன் மற்றும் பள்ளிகள் மூலம் ’அன்கோ’ போட்டு யோகாவை வளர்ப்பதாக சொல்லி அவர்கள்தான்  அமோகமாக வளர்கிறார்கள் அதன் மூலம் வரும் தொகையைப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். இது பற்றி எனது பையனுக்குப் பிரத்தியோக யோகா வகுப்பு எடுக்கும் ஆசிரியரைக் கேட்டேன் . அது ஏமாற்று வேலை சார் .சம்பாதிக்க இது ஒரு புதுவழி .இனி இதெல்லாம் நம்பிப் பசங்களைக் கூட்டிட்டுப்போய்த் தான் தேர்வு செய்யப்படவில்லை என்ற ஆதங்கத்தை விதைக்காதீர்கள் என்று எச்சரித்தார் . (அவரும் அந்த அசோசியேசனில் ஒரு முக்கிய உறுபினர்தான்)

சரி அப்படியானால் யோகா வேண்டாமா என்ற உங்கள் கேள்விக்கு  ஜக்கி வாசுதேவ் அவர்களின் பதிலைப் படித்தேன்  இந்த மாதிரி விசப்பரிட்சைகளைத் தவிர்க்க இதை தெரிந்து கொள்ள வேண்டும் . ( நமது வாழ்வில் யோகா என்ன செய்கிறது என்பதான கேள்விக்கு அற்புதமான ஒரு புத்தகம் படித்து வருகிறேன் - விரைவில் அதையும் பதிவு செய்ய வேண்டும் )

கேள்வி: குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து யோகாசனங்கள் கற்றுக் கொடுக்கலாம்?


சத்குரு: எட்டு, ஒன்பது வயது வரை நாங்கள் குழந்தைகளுக்கு ஆசனங்கள் எதுவும் கற்றுக் கொடுப்பதில்லை. குழந்தைகளுக்குப் பதினான்கு, பதினைந்துவயது ஆகும் வரை நாம் எல்லா ஆசனங்களையும் கற்றுக் கொடுப்பதில்லை. துரதிருஷ்டவசமாக, இன்று பள்ளிகளில் குழந்தைகளுக்கு எல்லாயோகாசனங்களையும் கற்றுத் தருகிறார்கள். பத்மாசனம் போன்ற ஆசனங்களையெல்லாம் குழந்தைகளுக்கு, அவர்களுடைய எலும்புகள் இன்னும்வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கற்றுக் கொடுத்தால், அவர்களுடைய கால்கள் வளைந்து போவதற்கு வாய்ப்புண்டு. அவர்கள் அதையெல்லாம்கற்றுக் கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட வயது ஆக வேண்டும். அவர்களுடைய எலும்புகள் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைய வேண்டும்.அதன்பின்தான், அவர்களுக்கு ஆசனங்கள் கற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். குழந்தைகளுக்கான ஈஷா யோகாப் பயிற்சி வகுப்பை நாம் ஏழிலிருந்து பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு நடத்தினாலும், அதில் கற்றுத் தரப்படும் ஒன்றிரண்டு ஆசனங்கள் மிக, மிகஎளிமையானவை. ஆனால் உங்கள் குழந்தைகள் யோகாசனப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெறவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு எல்லாஆசனங்களையும் கற்றுத் தர ஆரம்பித்தால், அவர்கள் வளைந்த கால்களுடன், சிதைந்த மூட்டுகளை உடையவர்களாக ஆகிவிடலாம். ஏனென்றால்குழந்தைகளுடைய எலும்புகள் இன்னும் வளர்ந்துக் கொண்டும், உருவாகிக் கொண்டும் இருக்கின்றன. அந்தச் சமயத்தில் அவற்றின் மேல் அதிகமானஅழுத்தம் கொடுத்தால், பிரச்சனைகள் ஏற்படலாம்.
( http://tamilblog.ishafoundation.org/kundaliniyai-parisothikka-ninaithal/)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக