செவ்வாய், 17 நவம்பர், 2015

என்றென்றும் அன்புடன் ,



அப்பாடா என்று புது அலுவலகம் வந்து உட்கார்ந்து விட்டோம் .அற்புதமான சூழலில் இன்னும் உற்சாகமாகப் புது விசயங்கள் எழுதுவதற்கு ஆர்வம் பிறக்கிறது.பொதுவாய்த் தேர்வுக்கு மிகக் கவனமாகப் படிக்கும் போதுதான் நிறையக் கவிதை எழுத ,கட்டுரை எழுதப் புத்திப் போகும்..அப்படித்தான் தொடர்ந்து வேலை இருக்கும் போது நிறையவிசயங்கள் வந்து போனது. 

குறிப்பாய் , 

நடனமாது மனது பற்றி.. 

கிருஷ்ணனின் குழந்தைப் பருவத்தைப் மட்டுமே விரும்பிய கவிஞர் சூர்தாசர் அருமையான ஒரு பக்திப் பாடலான ”பிரபு எந்தன் குறைகளைமனதிற்கொள்ளதே”என்றுத் தொடங்கும் பாடலை கேத்ரி மன்னரின் அரசச் சபையில் “அம்மா! என் கண்களைத் திறந்துவிட்டாய்? உலகில் யாரும் உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை?“ என்று சுவாமி விவேகானந்தரை கண்ணீர் மல்கக் மன்னிப்பு கேட்க வைத்த அந்த நடனமாது மனது பற்றியும் , 

ஆண் - பெண் மனநிலை

உலகில் எப்போதும் சுவாரசியமாகவே இருக்கும் ஆண் - பெண் மனநிலைகளைப் பற்றிச் சமீபத்திய நீயா – நானாவின் அழகியல் பற்றிய ஆய்வும்,இயற்கையிலேயே 
ஆண்-பெண் மூளை அமைப்பை இந்தியாவைத் தவிர 45 நாடுகளுக்கு மேல் நேரடியாக ஆய்வு செய்து எழுதிய ஆலன் & பார்பரா பீஸ் கட்டுரைகளும் , 

மனதில் எண்ணம்


எங்கிருந்து மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன என்று சொல்லப்படாத ரோண்டா பைரனின் ( Rhonda Byrne - The Secret ) ”ரகசியம்” ( அதன்தொடர்ச்சியாய் வந்த .சக்தி .மாயாஜாலம் போன்ற புத்தகங்கள் ) ஏன் விற்பனையில் சக்கைப் போடு போடுவதையும், 

ஊனமுற்ற மனம்

எங்கள் அம்மாவைத் தொடர்ந்து அப்பாவின் மறைவின் வலியை சுமக்கவும் முடியாமல் இறக்கி வைக்கவும் முடியாமல் ஊனமுற்ற மனதோடு உலவிக்கொண்டுஇருப்பதுவும் 

என எழுதப் பல விசயங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது .. 

அதில் ஒன்று திருப்பூரில் எனக்கு இருக்கும் இரண்டு நண்பர்களில் இரண்டாமவர் ராஜதுரை .அவரின் கல்யாணம் பொள்ளாச்சியில் . 


இப்போது இருக்கும் என் கம்பெனியில் அவர் ’சீனியர் மெர்சண்டைசராக’ இருந்தவர் அவர். ஒட்டன்சத்திரம் அருகில்தான் அவருக்குச் சொந்த ஊர்.எதையும் ’டேக் இட் ஈசியாய்’ எடுத்துக்கொள்ளும் கொள்கையுடையவர் அவரை விட அவர் அப்பா மிகச் சுவாரசியமானவர் .விவசாயியாகப் பிறக்கவேண்டும் என்ற என் அடுத்த ஜென்ம ஆசையை இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு விவசாயி .அவர்கள் தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் கணக்கன் பட்டி .இரண்டு முறை அவர்கள் ஊருக்குப் போயிருக்கிறேன் .முற்றிலும் வேறு தனித்த ஓர் உலகமாகப் படும் இடம் .அங்குச்செல்ஃபோன் எப்போதாவது வேலை செய்யும் .வெகுதூரம் வண்டிப்பாதைதான்.மிகுந்த வயல் பரப்பு மட்டுமே என்பதால் அது நகர மன அழுதத்திலிருந்து வெகு தூரம் தள்ளிச் சென்ற மிக விடுதலைப் போல உணர்வைத் தரும் இதல்லாமால் அங்குக் காட்டு யானைகள் வந்து போகும் இடம் அவர்கள் தோட்டத்தைப் பலமுறை துவம்சம் செய்துஇருக்கிறது .ஒருமுறை நாங்கள் போன போது அதிகாலை நான்கு மணிக்கு யானையின் பிளிறல் பயமுறுத்த்த்தி இருக்கிறது ! .அவர் அப்பா சுவாரசியமானவர் என்று இங்குச் சொன்னதற்குக் காரணம் வேறு. 

கண்டப் பயலுகச் சகவாசம் !

முதல் முறை ஊருக்கு நண்பர் ஆதியுடன் கண்ணக்கன் பட்டி போயிருந்த போது வீட்டுக்கு அடுத்தச் சாலை வீட்டில் ராஜதுரையும் அவர் அப்பாவும் முழுப்பாட்டிலைக் காலி செய்து கொண்டு இருந்தார்கள் . குடிப்பது தவறுதான் ஆனால் அதை அப்பா ஊற்றித்தர அம்மா கறி சமைத்துத் தட்டில் சுடச் சுட படைப்பதுவும் இது வரை எந்த வீட்டிலும் நான் பார்த்தது இல்லை.இங்கு யார் போனாலும் அவருக்கும் ஒரு கோப்பைக் காத்து இருக்கும் .இதற்கு நண்பரின்அப்பா சொல்லும் கரணம் என்ன தெரியுமா?என்னுடன் அவன் குடிப்பதால் ஒரு பொறுப்பு வருவதாகவும் கண்டப் பயலுகச் சகவாசம் குறைவதாகவும்சொல்கிறார். சரிதான் ! 

பொள்ளாச்சிக்குக் குறைந்தது ஒன்னறை மணி நேரப் பயணம்.போகும் போது படிக்க ஒரு பாலகுமாரன் பழைய அலமாரியிலிருந்து எடுத்துக்கொண்டேன்.ஒரு வேளை நின்ற படியே பயணம் என்றால் அதற்கு ஹெட்ஃபோன் எடுத்துக்கொண்டு புஷ்பாத் தியேட்டர் நிறுத்தத்தில் மத்திய பேருந்துநிலையம் செல்ல நகரப் பேருந்ததில் ஏற முதல் படியில் கால் வைக்கிறேன் .உள்ளுகுள்ளிருந்து ஒரு கை என் தோளில் அழுத்தமான பிடிக் கவ்வியது.சுதாரிபதற்குள் யாரோ மனிதர் என்னைச் சரித்து விட்டு கீழே இறங்கினார்.உள்ளே ஏறிய பிறகுதான் தெரிந்தது என்னைத் தள்ளி விட்டு இறங்கியமனிதர் டாஸ்மாக் அனுதாபி போல !.அரசின் இந்த வருட இலக்கை அடைவதற்கு உதவக் காலை ஏழுமணிக்கே தொடங்கிவிட்டார் போல ! . 

டிக்கெட் எடுத்து விட்டுப் புத்தகத்தை எடுத்தேன் .பாலகுமாரனின் - ”என்றென்றும் அன்புடன்” பல்சுவை மாத இதழில் 1997ல் எழுதிய 155 பக்க நாவல்.பொதுவாகவே பாலாவின் கடிதங்களில் அவர் கையெழுத்துக்குக் கீழ் கற்றுக்கொண்ட இந்த என்றென்றும் அன்புடன் வரிதான் என் எல்லாக்கடிதங்களிலும் பாலாவிடம் கற்றுக்கொண்ட இன்றும் தொடர்கின்றன.ஒருக் கடிதம் முடியும் போது இந்த வசீகராமான வார்த்தையை வெட்கமில்லாமல்காப்பியடிக்கக் கற்றுக்கொண்டேன் நான் .அப்போதெல்லாம் என்னைப் பாலகுமாரனின் நிழல்போல நினைத்துக்கொண்ட காலம் ! அவர் எழுத்தை மறுபேச்சிலாமல் பின்பற்றும் தருணங்கள் அவை.இப்போது மீண்டும் அந்த நாவலைப் படிக்கிறேன்.அவரே அந்த நாவல் தன் சொந்தக் கதை என்பதாகச்சொல்லியிருப்பார். 

அடங்காத வெறி !
அந்தக் கதை சொன்ன இரண்டு விசயத்தை நினைத்தால் இன்னும் வியப்பாக இருக்கிறது .ஒன்று அவர் இரண்டாவது மனைவியை வீட்டுக்குள் கொண்டுவர எழுதும் கதைக் கோணத்தில் தன்னைத் தன் புத்தியைப் பல கோணத்தில் ஆய்வு செய்துகொண்ட நுட்பம்.(எனக்கு இந்தப் புத்தகம் எப்படி அப்போதுபுரிந்தது என்பது ஆச்சர்யமக இருக்கிறது ) அடுத்தது அவருக்கு இருந்த ராஜராஜசோழனின் வாழ்வில் மேல் இருந்த அடங்காத வெறி ! அதுவே 2010 ல் ஆறுபாகம் கொண்ட 2733 உடையார் நாவலின் ஆணிவேர் இதைத் தினமலர் இணைய இதழில் அவரே சொல்லியிருக்கிறார்


கேள்வி : சோழதேசம் மீது ஏன் இந்தப் பாசம்? 
பாலகுமாரன் பதில்”உண்மைதான். அதுக்குக் காரணம் இருக்கு. கிருஷ்ணன்ராமனைப் பத்தி நான் திரட்டுனத் தகவல்கள் மூலமா, ராஜராஜனைப் பத்தினநிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். ராஜராஜன் எப்படியிருப்பான்? பெரிய கொண்டை, ஒல்லி உடம்பு, மீசை, கொஞ்சூண்டு தாடி... இதுதான்ராஜராஜன்னு, ஓவியங்கள் அடையாளம் காமிச்சது. அவன் வடித்தக் கல்வெட்டுக்கள் மூலமா, அவனோட மனசைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். சோழதேசத்தின் மீது எனக்குக் காதல் வர, ராஜராஜனும் ஒரு காரணம். ஒவ்வொரு ஊராகப் போய், சோழர்கள் பத்தின விபரங்களைத் தேட ஆரம்பிச்சேன்.சேர்த்து வைச்சிருந்த பணத்தை எல்லாம் இதுக்காகவே செலவுப் பண்ணினேன். அப்பதான் புரிஞ்சது. சோழ தேசத்து மேல எனக்கு இருக்கறதுக் காதல்அல்ல...வெறி!” 
பாதி நாவல் படிப்பதற்குள் பொள்ளாச்சி வந்து விட்டேன். 


அப்போதுதான் ஓர் ஆர்வக்கோளாரில் ராஜதுரைக் கல்யாணப் பத்திரிக்கை வைக்கிறேன் என்று சொல்லியும் வேண்டாம் என்று வசனம் பேசியதன்பிரச்சனையைச் சந்தித்தேன் மண்டபத்தின் பெயர் என்ன எங்கு இருக்கிறது ? மாப்பிள்ளைக்கே தொடர்புக் கொண்டேன்.மறுமுனையின் மாப்பிள்ளைத் தோழர்ச் சரோ பேசினார் .தொழிற்பேட்டை அருகே உள்ள சரோஜினித் திருமண மஹால் எனக் கேளுங்கள் நடந்து வந்து விடலாம் என்றார்.எதற்கும்கேட்போம் என்று அருகிலிருந்த பேருந்து நடத்துனரைக் கேட்டேன் .எந்தத் தொழிற்பேட்டை உடுமலைப்பேட்டை சாலையில் இருப்பதா என்று பதிலுக்குப்பயமுறுத்தினார்.விவரம் சொன்னேன் .அதுவா அது உடுமலைச் சாலையில் மின்நகரம் நிறுத்தம் என்று கேளுங்கள் என்றார் .நடந்து போகலாமா என்றஎன்னைப்பார்த்துச் சிரித்தார்.மூன்றுக் கிலோ மீட்டர் நடந்தே போக வேண்டுதல் இருக்கா ? .அது சரி . சத்தமில்லாமல் நகரப் பேருந்தில்ஏறினேன்.மின்நகரம் தாண்டியும் நடத்துனர் எதுவும் பேசவில்லை .சந்தேகப்பட்டுக் கேட்டதற்கு அடுத்தம் நிறுத்தம் என்றார்.மண்டபம் பேரையேகாணோம்.அதற்குப் பதிலாக வால் புட்டிப் பெயிண்ட் விளம்பரம் மட்டுமே பெரிதாக இருந்தது .

பெண் தனியார் பள்ளியில் ஆசிரியை என்பதால் கல்யாண மண்டபதிற்குப் பதிலாகப் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்து விட்ட உணர்வு வரவைத்துவிட்டார்கள் . சமீபத்திய தீபாவளி வெளியீடு ஆடைகள் புது மடிப்புக் கலையாமல் ஆசிரியைகள் வலம் வந்தார்கள் . மாப்பிள்ளை ராஜதுரையுடன் படம்எடுத்துக்கொள்ள மேடையேறியப் போது என்னைப் பெண்ணிடம் இவர் என் அப்பா மாதிரி என்றார்.அதற்கு அவர்கள் என்ன வயசு குறைவா தெரியுது என்றார் .அதற்கு என்ன பதில் சொன்னார்த் தெரியவில்லை ! 

அங்கு வந்த இன்னும் சில நண்பர்களுடன் சாப்பிடப் போனோம் . அங்குச் சில ஆசிரியர்கள் மாணவர்கள் .வயது மூத்தவர்கள் விரல் விட்டுஎண்ணிவிடலாம்.இளமைப்பட்டாலம் எங்கும் நிறைந்து இருந்தது.எதுச் சொன்னாலும் க்ளு க்ளுக் என்ற சிரிப்பு வெடிகள் அமர்க்களப்பட்டது.மொத்தம் 50இருக்கைகள் மட்டுமே இருந்ததால் ஏற்கனவே சாப்பிட்டவர்கள் இலை எடுப்பதற்குள் உட்கார வேண்டிய நிர்பந்தம். 
அங்கு சில ஆசிரியைகள் நான் பார்த்த உடனே இவர் அறிவியல் பாடம் எடுப்பவர் இவர் கணக்குப் பாடம் எடுப்பவர் இவர் வரலாறுப் பாடம் எடுப்பவர்என்றதும் உடன் சாப்பிட்டுக்கொண்டு இருந்த நண்பர் எப்படிச் சொல்கிறீர்கள் என்றார் ஆச்சர்யத்துடன் . காரணம் சொன்னதும் சாப்பிட்ட உணவு மண்டையில் புறையேறச் சிரித்தார். 

விடைபெற்றுப் பேருந்து ஏறியதுவும் மீண்டும் என்றென்றும் அன்புடன் பயணம் தொடர்ந்தது. வீடு வந்துதான் முற்றியது. 

அந்த நாவலில் வரும் ராகவனும் நானும் சில விசயத்தில் ஒரே குணம் போலத் தோன்றியது .ஆமாம் .இதுதானே பாலகுமாரன் வெற்றி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக