திங்கள், 15 ஜூலை, 2013

திருட்டு ரோஜாக்கள்


                                             
                                         
                                       திருப்பூரில் ஒரு திருமண வரவேற்பு விழா லட்சுமி கல்யாண மண்டபத்தில் நடந்தது .மண்டபத்தின் நுழைவு வாயிலில் பலவகையான ரோஜாக்கள் மற்றும் பல மரக்கன்றுகள் இலவசமாக கொடுத்து கொண்டு இருக்க ,சரி நாம் வரும்போது வாங்கி செல்லலாம் என பேசிக்கொண்டு உள்ளே சென்றோம்.


                           இந்த வரவேற்பு முக்கிய நிகழ்சிகள் திருப்பூர் மனவளக்கலை அமைப்பினர் தலைமையில் சிறப்புற செதுக்கப்பட்டது போல மிக அழகான வகையில் அர்த்தத்துடன் ஏற்பாடு செய்திருந்தார்கள்
                                                   எந்த கல்யாணத்திலும் பார்க்காத வகையில் மணமகனின் தந்தையும் , தாயும் வந்தவர்களை வரவேற்க்க ,அமர்ந்து இருக்கும் இடத்திற்கே வந்து வரவேற்று அசத்தினார்கள் .


                                                 அடுத்து சென்னை அனுஷம் வித்தியாசமான குழுவினரின் நாட்டிய நடன கலைநிகழ்ச்சி அரங்கேறியது .பொதுவாக இம்மாதிரி நிகழ்சிகளில் திரைபாடல்களுக்கு முக்கியத்தும் கொடுப்பதை தவிர்த்து நிறைய கருத்துருக்களை வைத்து அசத்தினார்கள் .இதில் உச்சகட்டமாக பெண்ணையும் மாப்பிள்ளையையும் மேடைக்கு அழைத்து "நூறுவருஷம் இந்த மாப்பிளையும் பெண்ணும்தான் " என்ற படலை ஒலிக்க செய்து, ஆட விரும்பிய பார்வையாளர்களையும் மேடைக்கு அழைத்து கொண்டாடினார்கள் .


                                             நினைவுபரிசாக வந்திருந்த அனைவருக்கும் ஒரு பரிசுபையை தந்தார்கள் .அதில் 1.வேதத்திரி அவர்களின் லேமினசன் படம் .2.வெற்றிகரமான மண வாழ்க்கைக்கு ...(கையடக்க புத்தகம்) .3. இல்லம் சங்கீதம் என்ற ஒரு கட்டுரை தொகுப்பு (அழகிய படங்களுடன் + முக்கிய தொலைபேசி எண்கள் ) 4.திருப்பதி +பத்மாவதி திருகல்யாண வண்ணப்படம் .5.மந்திரங்கள் + இறைப்பாடல்கள் அடங்கிய 1.05 G.B அளவுள்ள DVD என அருமையாக யோசித்து அளித்து இருந்தார்கள் .


                                                பொதுவாக இந்த கல்யாணங்களில் பபே ( Pafe ) முறைப்படி மட்டுமே வழங்குவார்கள் .ஆனால் இங்கு வழக்கமான முறையும் இருந்தது .( கையேந்தி பவனில் சாப்பிட்டு பழக்கம் இல்லாதவர்களுக்கு! )


                            எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக மண்டபத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு பல வகையான மரக்கன்றுகளை வழங்கினார்கள் .அங்குதான் நம் மக்களின் மனம் ஆரோக்கியத்தை கண்டோம் .இலவசமாக தந்தால்  அனைவருக்கும் சென்று அடையும்  என்ற கொடுப்பவர்களின் நல்ல எண்ணத்தை புரிந்துகொள்ளாமல் எல்லோரும் ஒன்றுக்கு பல கன்றுகளை அள்ள , பாவம் பலபேர் ஒன்று கூட கிடைக்காமல் புலம்பிகொண்டார்கள் .

 வினோத திருட்டு!

                              நாங்கள் வண்டி நிறுத்தும் இடம் வந்த பொது ஒரு உண்மை  அப்போதுதான் தெரிந்தது .அங்கு நிறுத்த பட்டு இருந்த பல வாகனங்களில் பல  அற்புதமான செடிகள் பாலி பேக்குகள் வைத்து பலவிதமாக தொங்கிகொண்டு இருந்தன .இந்த வினோத திருட்டுதான் பல பேரை ஏமாற்றி விட்டது .சில பேர் போகும்போதே  ( வந்ததே இதர்க்காக என்பதாக  - விவரமாக முன் கூட்டியே !) நிறைய வாங்கி வைத்துவிட்டு போய் இருக்கிறார்கள் .


             இப்படி திருட்டுக்கு சமமாக எத்தனைபேருக்கு போகவேண்டிய செடிகள் அந்த வண்டிகளில் தொங்கிகொண்டு இருக்கிறது ? அதில் நிறையபேரின் பெயர் இருப்பது போல மானசீகமாக எனக்கு பட்டது !!! .
                     

                                             

1 கருத்து: