சனி, 25 ஜனவரி, 2014

சினிமா என்ற சாதனம் புத்தகமாகட்டும்.


                    இப்போது திரை அரங்குகளில்  இரண்டு தமிழ் படங்கள் ஓடிகொண்டு இருக்கின்றன .ஒன்று இன்னும் சில காலம் ஓடும் மற்றொன்று ஓடாது .அது ஏன் என்பது எல்லாருக்கும் புரிந்த விசயம்தான் ! ஆனால் விசயம அதுவல்ல .நம் கதாநாயகர்கள் எப்படி எதிரே வரும் கெட்டவர்களை எலும்பு முறிய நொறுக்கி பிழிகிறார்கள் நியூட்டனின்  விதிகளையும் தவிடு பொடியாக்கி தியேட்டரில் படம் பார்க்கும் வரு ரசிகர்களின் உடையெல்லாம் ரத்தம் தெரிக்க சண்டை போட்டு திருப்பி அனுப்புகிறார்கள் .இதெர்க்கெல்லாம் ஏதோ காரணம் சொல்லுகிறார்கள். இருக்கட்டும் . இத்தனையும் பண்ணும் அவர்கள் ஒரு கதாநாயகியை கண்டவுடன் அத்தனை வன்முறை அஸ்திரங்களை தூக்கி எறிந்து விட்டு வெட்கப்படுவது எப்படி ? இதில்,இப்படி  இதை யோசிக்கும் இயக்குனர் மற்றும் நடிகர்கள் சேர்ந்து யாரை திருப்தி படுத்துகிறார்கள் அல்லது யாரை ஏமாற்றி கொள்கிறார்கள் ?


                              பொதுவாகவே வெளிப்படையாக ‘டுயல் ரோல்’(Dual role ) கொண்டவன் சந்தேகமில்லாமல் பைத்தியகாரன்தான் .(ஆனால் உண்மையில் நாம் பல பேர் உள்ளுக்குள் அன்னியனை(Muliple persionality) விட மோசம் என்பது வேறு விசயம் .)ஆனால் நம் கதாநாயகர்கள் ஒருபக்கம் காதலையும் இன்னொறு பக்கம் வன்முறையும் எப்படி ஒரே தோளில் சுமக்கிறார்கள் ? நடைமுறையில் உள்ளதைதான் நாங்கள் காட்டுகிறோம் என்று சொல்லிக்கொண்டு தண்ணி அடிக்கும் காட்சிகள் இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக காட்டுவதும் ,வேலை இல்லாமல் சுற்றிக்கொண்டு திரிவதும், கட்டாயமாக காதலித்தே தீர வேண்டும் என்ற கதா நாயகிகளும்..


 அதிலும் கதாநாயகன் காதலுக்கு சம்மதித்து விட்டால் எந்த சம்மந்தமும் இல்லாமல் வெட்கத்தை அவிழ்த்து  விட்டு -  தன்னுடைய காதலியை அல்லது மனைவியை எத்தனை  பேர் இப்படி ஆபாசமாக எல்லாரும் பார்க்க ஆடுவதர்க்கு சம்மதிக்கிறார்களாம் ?இருப்பதை காட்டுவதாக சொல்லிகொண்டு அலையும் இவர்கள் இன்னும் எத்தனை சமாதானங்கள் சொல்ல போகிறார்கள்?   
  


                     கதை என்ற கட்டத்திர்க்குள் ஒரு காலத்தில் பொழுது போக்கை மையமாக்கினார்கள் ,அப்புறம் சமூக அக்கறை  ,அரசியல் , உண்மை சம்பவம் ,அறிவியல் ,நவீனம் ,என்று அந்த கட்டதிர்க்குள் காய் நகர்த்தி விட்டு  இப்போது காதல் என்ற விரசத்தையும் ,சண்டை என்று ரத்த சகதியையும் ,எதார்த்த பாதைகளை தூக்கி எறிவதுமே தனது கொள்கை என்று கடை பரப்பி வருகிறார்கள் .ஒரு காலத்தில் இதெல்லாம் திரும்பி பார்க்கும் போது இவர்களே சகித்து கொள்வார்களா என்பது புரியவில்லை .யார் இதை விரும்புகிறார்கள் என்று அவர்கள் சொன்னாலும் தனது குழந்தைகள் ரெஸ்ட்லிங்தான் (wrestling) மட்டுமே பார்க்க ஆசைபட்டால் அது நார்மல் இல்லை என்று அவர்களே ஒத்து கொள்வார்களா மாட்டார்களா ? தெரியவில்லை .   


              எது எப்படியோ வரும் தலைமுறை மேலும் கெட்டு போக அற்புதமான சினிமா என்ற சாதனத்தை குறை பிரசவ குழந்தைகளாய் மாற்றி எதிர்காலத்தை ஊனமாக்காதீர்கள் .அன்று கருப்பு வெள்ளையிலும் ,ஒரே கேமிராவால் ஒரே இடத்தில் தனக்கு என்ன பொறுப்பு இருக்கிறது என்று ஒத்து கொண்டு திரைப்படம் எடுத்த இயக்குனர்களை மனதில் வைத்து கொண்டு படம் எடுங்கள் .அவர்களும் கதை சொன்னார்கள் .நம்புங்கள் .


காசு கொடுத்து படம் பார்க்க வருபவனை  அதிகபட்சமாக முட்டாளாக்கினால் கூட பரவாயில்லை  பைத்தியக்காரனாக அலையவிடாதீர்கள்.எதார்த்தம், எதார்த்தம் என்று ஆகாயத்தில் ரோடு போட ஆசைப்படாதீர்கள்.சினிமா என்ற சாதனம் தவிர்க்க முடியாத கடமைகளை கொண்டு உள்ளது .ரஷ்யாவில் பள்ளி பாடங்கள் இப்போது திரைப்பட முறையில் வடிவமைக்கபட்டு போதிக்க படுகிறது .நமது ஆவண படங்கள் அத்தனையும் உலக பரிசுகளையும் அள்ளிக்கொண்டு வந்து கொண்டு இருக்கிறது .


          ஆதலால் இந்த சினிமா சாதனம் அலமாரியில் வைக்கப்படும் புத்தகமாக படைக்கபட்டால்  கூட மீண்டும் ஒருகாலத்தில் திருப்பி பார்க்கலாம் .அழுகிய பழங்களாக்கினால் அது எங்கு போகும் என்பது அனைவரும் அறிவோம் .பார்த்து செய்யுங்கள் .ஏனென்றால் சினிமாவை நாங்கள் காதலிக்கிறோம் உங்களை போல அல்ல !

3 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அதர்க்குள் ...?படித்தர்க்கு நன்றி !
      நன்றி இதே சினிமாவின் சேரன் சொல்வதும் இப்படித்தான் http://tamilnews24x7.us/tamil/?p=4555 படியுங்கள்

      நீக்கு
  2. For Long Days, Making Cinema is a Business (Some of exceptions) - Cinema fans never change, The Directors, Producers change them with ever trends :(

    பதிலளிநீக்கு