வியாழன், 11 பிப்ரவரி, 2016

7.83 ஹெர்ட்ஸ் - நிழல் உலக நிஜங்களின் தரிசனம் !


நாவலின் தன்மை !

இன்று தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த நாள் ( பெப்ரவரி 11, 1847 ) இன்று இது போன்ற அற்புதமான அறிவியல் புனைக்கதையைப் பற்றி உங்களோடுபேசுவதில் மிகவும் சந்தோசம் .



அட்டைப்படத்தை பார்த்து விட்டு எதுவுமே கணிக்க முடியாத நாவல் இது ! வெகு நாளாய்க் காத்து இருந்து ஓர் அற்புதமான வரலாற்றுத் தளத்தில் அறிவியல் தன்மையுடன் ஒரு கதையை வாசிப்பவர்களுக்குத் திரு சுதாகரனின்7.83 ஹெர்ட்ஸ் மிகப்பெரிய வரவேற்பைத்தரும் நாவல் . மிகப்பிரபலமான அறிவியல் கதைப் புனைவாளார்கள் கூட எழுதத் தயங்கும் மிக நுட்பமானமனதைக் கட்டுப்படுத்தும் அதிர்வலைகளைப் பற்றிய கட்டுரை வேசமில்லாத கதையுணர்வுடன் வெகு நேர்த்தியான அற்புதமான நடையில் தமிழுக்குப்படைத்து இருக்கிறார். தமிழில் அறிவியல் கதை என்பது தனியாகவும் அறிவியல் கட்டுரைத் தனியாகவும் வளர்ந்து வரும் நேரத்தில் இரண்டையும் சமீபவருடங்களில் இணைத்துத் தரும் இன்னொரு சிறந்த முயற்சி இது.

நாவலின் பெயர். 

”7.83 ஹெர்ட்ஸ்”மிகத் துணிவானப் பெயர்த் தேர்ந்தெடுப்பு . நாவலுக்குத் தமிழில் பெயர்த் தர முடியாவிட்டாலும் நாவலின் அறிவியல் புனைவுகள்அனைத்தையும் மிகச் சுலபாமாகப் புரிந்துகொள்ளும் வகையில் மெனெக்கெட்டுத் தமிழ் படுத்தித் தந்து இருக்கிறார் ஆசிரியர். 

ஆனால் எனக்குச் சிறு வருத்தம் மனதுள் நிழலாடுவதைத் தவிர்க்க முடியவில்லை .எல்லா நாவல்களும் படிக்கப்பட வேண்டும் என்பதற்காக மட்டுமேஎழுதப்படுகிறது.இரண்டாவது, எழுதிய ஆசிரியர், வெளியீட்டாளர் உட்பட அனைவரின் உழைப்பின் பயனை, அதன் அதிக விற்பனையின்விளைவில்தான் அனுபவிக்க முடியும் . அப்படி அது வாசிக்கப்பட வேண்டுமென்றால் அது 1. மிகப்பிரபலமாக, நாவலின் தன்மைக் குறித்துவிளம்பரப்படுத்தவேண்டும்.2.நாவலின் பெயர்த் தவறி விழப்போகும் காதலியைத் தாங்கிப் பிடிக்கும் கைப் போலச் சிக்கெனெப் பற்றிக்கொள்ளவேண்டும்.(பெயர் வைக்கும் விசயத்தில் எழுத்துலக ஜாம்பாவான்கள் கூடக் கவனமாக இருந்தை நாம் மறக்கக் கூடாது ) 3.மிகப்பெரிய விமர்சனத் தாக்கத்தைவலைதளங்களில், பத்திரிக்கைகளில் எழுப்ப வேண்டும் .4.புத்தக விழாக்களில் ஃப்ளக்ஸ் பேனர் வைத்துப் பேசப்படவேண்டும் .என்பது என் தாழ்மையானகருத்து ! 



கதைக்கரு .

இந்த நாவல் வாசிக்கும் முன் வரை எனக்கு ஒநாய்கள் பற்றி எனக்கு ஒரு துளியும் தெரியாது .சில சேனல்களில் அவை கூட்டமாக ஓட,ஓடவிலங்குகளைப் பிய்த்துத் தின்னுவதையும்.சிங்கத்தின் இரையைக் கூட வெறுப்பேத்திப் பிடுங்கிக் கொள்வது மட்டுமே தெரியும். அவ்வளவுதான் !ஆனால் அவை 800 ஆயிரம் வருடங்களுக்கு முன் இதே பூமியை ஆண்ட ஓர் இனமாக ஓநாய் எனும் ஊனுண்ணிப் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒருகாட்டு விலங்கு என்பதுவும் அதன் ஆரம்பப் பிறப்பான பழுப்பு நிற ஓநாயிற்குத் தாயகம் இந்தியா என்பதும் எனக்கு மிகப்புதிய விசயம். அதை விடவும்புதிய விசயம் ஓநாயைத் தனது மூதாதையராக நம்பி, புனிதச் சின்னமாக வழிபட்டுக் கொண்டாடும் உலகில் பல்வேறு இனமக்களை அறிந்து கொள்ளும்போது ஆச்சர்யமாக இருக்கிறது .

கதையாக்கத்தின் நோக்கம் ! 

அந்த ஓநாய்களைக் காக்கும் முயற்சிதான் இந்தக் கதைக்கரு.இந்த நாவலை உருவாக்கிய ஆசிரியரின் உண்மையான நோக்கமாகவும் அதுவேஇருக்கிறது ! நம் தமிழ் திரைப்படக் கதைக்கரு போலப் பழிவாங்கும் படலம் போலத் தன்மைதான் நாவல் . ஆனால் இயற்கையின் உயிர் சூழலில் உணவுச்சங்கிலியின் அக்கறை கொண்ட நாவல்.இந்த நாவலில் எது கற்பனை எது கோட்டைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மிகச்சாதுர்யமாகப் புனையப்பட்ட நாவல் . 

இந்தியாவுக்குள் நுழைந்த செச்சன்யப் போராளிகள் !. 

சீனாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள (சின்சியாங்கு) (Xinjiang) மாகாணத்தில், உய்கூர் (Uyghur) என்ற பகுதி மணிக்கெயிசம் என்ற மதத்தைச் சார்ந்தமக்களுக்கு இந்த இனமக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்கிறார்கள் .அப்படி வாழ்பவர்களில் செச்சன்யாவை (Chechnya ) சேர்ந்த போர்ஜ் மக்கள்குழு உலகில் உள்ள ஓநாயை அழிக்கத்திட்டமிடும் அரசுகளை மற்றும் அமைப்புகளைக் கொடுங்கோளர்களார்களாக நினைத்து அழிக்க நினைக்கிறது.இந்தியாவில் இரண்டு செச்சன்யர்கள் தலைமையில் ஒரு செயல் திட்டத்துடன் இந்தியாவுக்குள் நுழைகிறார்கள். 

அதில் ஒருவன் ரசாயன ஆயுதங்களைத் தயாரிப்பில் முக்கியமாக ’தெர்மடைட்’ என்கிற ஒரு விதமான கந்தகக் கலவையில் ஆயுதம் தயாரிக்கும்மூளைக்காரன் .அவன் கொஞ்சம் நல்லவன் கூட ! என்னது ? தீவிரவாதியில் நல்லவன் எப்படி இருக்க முடியும் ? என்ற கேள்விக்கு – அவன் தனது ஆசனவாயில் தான் இறந்துப் போன பிறகும் நமது ராணுவ அதிகாரி விக்ரம் பத்ராவுக்குக் கிடைக்குமாறு விட்டுப்போன ஓர் எச்சரிக்கைச் செய்தி. இந்தநாவலின் முக்கியமான திருப்பத்திற்கும் மிகப்பெரிய அழிவிலிருந்து தப்பிக்க உதவியது . 


        அது, ஒரு மண்டை ஓட்டுப்படம் ,ஒரு ஃபோர்ஜ் துப்பாக்கி (Forge Gun) ஒரு பெர்சியன் ஸ்வார்ட் (Persian sword) அதோடு ’அந்திம ஆயுதம் அமைதி ‘என்றவாசகம் கொண்ட ஒரு துண்டுச்சீட்டு அந்தத் தாக்குதலில் முடிவில் அதை நடத்திய ஒரு ராணுவ அதிகாரிக்கு விட்டுச் செல்கிறான் . நாவலின் இந்தமுடிச்சு , 31 ஆம் பக்கம் துவங்கிய இந்த ரகசிய முடிச்சிற்கான தேடல் 194 ஆம் பக்கம் வரை வாசிப்பவர்களை, வியர்க்க வைக்கும் அளவுக்குத் துரத்துகிறது. 

     இதில் இன்னொரு தீவிரவாதியை ’சாவுக்களி ஆடும் பிசாசு ‘என்று வர்ணிக்கும் அளவுக்குக் கொடுரமானவன் ஆனால் அவன் மரபியல் மற்றும்தொலைத்தொடர்பியலில் கில்லாடி.இவர்களுக்கு வெளியிலிருந்து உலகி பல இடங்களில் துறைகளில் பரவி வசிக்கும் மக்களின் துணையோடுமிகப்பெரிய ’நெட்வொர்க்’போலச் செயல்படுகிறார்கள் .இவர்களுடன் நம் நாட்டு அரசின் மேலும் அறிவியல் துறையினால் பாதிப்பட்ட ஓநாய் அறிவியல்விஞ்ஞானி எதிரிக்கு எதிரி நண்பன் போலத் துரதிருஷ்ட வசமாகக் கைகோர்த்துக் கொள்கிறார்.அவர்களின் விஞ்ஞானப் பூர்வமான சதி வலையைஅறுத்து எறிவதே நம் சுதாகர் அவர்களின் 7.83 ஹெர்ட்ஸ் நாவல் பேசுகிறது .


ஓநாய்பற்றிய வரலாற்றுத் தகவல்கள். 

ஓநாய்களைப் பற்றி நாம் கேள்விப்பட்ட விசயங்கள் மிகச் சொற்பமே என்பது இந்தக்கதையின் பல இடங்கள் வலியுறுத்துகின்றன. அதிலும் வேத நாயகம்என்ற ஒரு பாத்திரம் மூலம் ஆசிரியர் சுதாகரின் ஓநாய்கள் பற்றிய ஆராய்ச்சி நம்மை வியக்க வைக்கிறது.(அந்த மனிதன் நம்மைப் பொறுத்தவரை நம்வீட்டு நாய்கள் ஓநாய் வம்சத்தின் உப பிரிவாக ( Subspecies of Canis lupus familiaris or Canis familiaris ) அறிகிறோம் . ஆனால் ஆதி ஓநாயான பழுப்பு நிற ஓநாய்(lupus familiaris) இந்தியாவில் பிறந்து உலகெங்கும் பரவி வளர்ந்து இருப்பது தொடங்கிக் கிழக்கே சிக்கிம் தொடங்கி மேற்கே பாமிர் முடிச்சு வரை பூமியைஆண்ட இனம் (பக் -172) என்பதாகவும் ,

இன்றைய செர்பியா,துருக்கி ஆகிய நாடுகளின் தேசிய விலங்குகள் பட்டியலில் ஓநாய்கள் இருக்கிறது. துருக்கியில் சுமார் 10,000 வருடத்திற்கு முன் Anatolia - Gobekli Tepe இடத்தில் கட்டப்பட்ட உலகின் முதல் கோவிலாகத் தொல்லியல் துறை (http://archive.archaeology.org/0811/abstracts/turkey.html ) சொல்லும் கோவில் கற்படிவங்களில் ஓநாய்த் தலை வடிவம் செதுக்கப்பட்டு இருப்பதை ஆய்வு செய்துஉலகின் பார்வைக்குத் தந்தவர் ஜெர்மானியத் தொல்லியல் துறைப் பேராசிரியர் Professor Klaus Schmidt ( இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம்நாள்தான் நீச்சல் செய்துகொண்டு இருக்கும் போது மாரடைப்பில் காலமானார் ) நீல நிற ஓநாய் தெய்வத்தின் வழித்தோன்றலாக அவர்கள் தங்களைக்கருதிக்கொள்கிறார்கள் ! 

இதற்கும் ஒரு படி மேலாய்ச் செச்சன்யார்கள் தங்களுடைய மூதாதையர்கள் ஓநாய் முகம் இருக்குமாம் ! போராளிகளின் புரட்சிக் கொடி அதை இன்றும்பிரதிபலிக்கிறது ! 


ஓநாய்கள் இன அழிப்பு ! 

ஓநாய்கள் இனம் அழிக்கப்பட முதல் காரணமாய் இங்கிலாந்தின் மன்னர் (Edward the Confessor 1042 to 1066 இருக்கலாம் !) 1500 ஆம் ஆண்டில் ஒருதீர்மானத்தைக் கொண்டு வருகிறார்.இது உலகில் ஆங்கில ஆட்சிப்பரவல் போல விரிந்துப் பரவி ஓநாய் இனம் அழிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது .காரணம் மனித இனத்தின் மாமிச உணவின் மேல் கொண்ட பேராவல் . அதற்குத் தடையாக இந்த ஓநாய்களின் வளர்ச்சித் தடையாக இருப்பதாகக்கருதிக்கொள்கிறது .ஓநாய்கள் மனிதனுக்குத் தடையாக நினைக்கத் தொடங்கிய காலமே அதன் வாழ்க்கைச் சுதந்திரத்தை மனித இனம் அறுவடைச்செய்யத்தொடங்கியது.இப்போது நாம் புலிகள் இனத்தைக் காப்பதற்கு இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ”ஆடு பகைக் குட்டி உறவு”என்பது போலஓநாயின் இனத்தின் உட்பிரிவான நாய்களை (சாம்பல் ஓநாய்க் கேனிசு லூப்பஸ் Canis Lupus Familiaris ) நம் வீட்டுச் செல்லமாக மனித இனமாக வளர்கிறது. 


நாம் ஒரு படி மேலே போய்ப் பைரவர் ( சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவர் ) வாகனமாகக் கோவிலுக்குள்வைத்துக் கும்பிடுகிறோம் என்பதும் மகாபாரதத்தில் போரின் போது ”அஞ்சுதற்குரியச் செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன் பௌண்ட்ரம்(பௌண்ட்ரம் என்பது “புடி கண்டநே” என்கிற தாதுவிலிருந்து உருவாக்கப்பட்டது இது எதிரிகள் மனதைப் பிளப்பது என்று பொருள் கொள்ளப்படுகிறது ) என்ற பெருஞ்சங்கை ஊதினான்”என்று பேசப்படுகிறது என்பது வேறு விசயம்.அதாவது நமது சமயத்தில் கூட ஒநாயின் இனமான நாய்கள்ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது .அப்படிபட்ட இந்தியாவும் அந்த இனதிற்கு எதிராகச் செயல்பட (கதைப்படி) எட்டு வருடங்களுக்கு முன் துருக்கியின் எர்ஜரம் எனும் நகரத்தில் அட்டாடர்க் பல்கழைகலகத்தில் (Ataturk University) உலகளாவிய ”மூன்றாம் உலக நாடுகளில் வேளாண்மை ,கால்நடைவளர்ப்பில் உயிரியல் சவால்கள்” என்ற கருத்தரங்கில் விவாதிக்கப்படுகிறது .இதில் இந்திய இந்திய விஞ்ஞானிகளின் நிலைத் தவறாகச் செச்சன்யார்களால் புரிந்து கொள்ளப்படுகிறது இதன் விளைவாகப் போராளிப் பிரிவு ஒன்று இந்தியாவுக்கு எதிராக ஒரு திட்டம் வகுக்கிறது . 


அந்தத் திட்டம் இருவகையில் வகுக்கப்படுகிறது .ஒன்று நேரடிக் குண்டு வெடிப்புகள் மூலம் இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுவது . இதுதான் இந்தநாவலின் 21 ஆம் துவங்கும் ஒரு போராளி ( கொஞ்சம் நல்லவன் என்று முன்னரே சொல்லியிருந்தேனே அவர்(ன்) ) செய்ய வந்த வேலை. இன்னொருவகை நாம் இதுவரை எந்தப் புத்தக்கங்களிலும் வாசிக்கப்படாதப் பகுதி இதை மிகக் கவனமாகப் பக்கம் 105 முதல் 112 சொல்லப்படுகிறது .



மனிதக் குலத்திற்கு எதிரான நுண்மின் அலைப் பேரழிவு !. 

மூளையோட இயக்கம் நுண்மின் அலைகளால் ஆனது.நம் அனைத்து உணர்ச்சிகளையும் மின் அதிர்வுகளால்தான் மூளை உணர்கிறது .ஒவ்வொருஉணர்ச்சிக்கும் உணர்வுக்கும் இந்த மின்அலைதான் எனத் தோராயமாக மூளைமின்னலை வரைவு Electroencephalography, (EEG) என்ற கருவி மூலம்பெருமூளைப் புறணியில் உள்ள பெருமளவிலான நியூரான்கள் அடங்கிய உறுப்புகளுக்கிடையே காணப்படும் சீரான மின்னோட்ட அலைவுகளைஎலக்ட்ரோடுகளின் உதவியுடன் பதிவு செய்து Electroencephalography Functional magnetic resonance imaging மூலம் கண்டறிந்து அதை ஒரு ‘டேட்டாப்பேஸ்ல”சேகரித்து வைத்து அதே மாதிரிச் செயற்கை மின் அலைகளை உற்பத்திச் செய்யும் எஞ்சினை உருவாக்கி,அதைக் கம்யூட்டர் மூலமாக்கண்ட்ரோல் செய்து எந்த மனித உணர்ச்சிகளைத் தூண்ட வேண்டுமோ அதை உருவாக்கி அதை ஓர் ஏற்பு அலை என்று சொல்லும் கேரியர் அலைமூலமா ஒரு குறிப்பிட்ட இடத்தில் பொழியச் செய்து அங்குள்ள மனிதன் அல்லது மீன்கள், எலி,யானை ,ஓநாய் போன்ற எந்த உயிரையும் தூண்டிச்செயல்பட வைக்கலாம்.உதாரணமாக மனிதனுக்கு இந்த உணர்ச்சியின் போது இந்த அலை மூளையில் ஏற்படும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தப்பட்டுஇருக்கிறது.


ஒரு ஹெர்ட்ஸ் அளவு என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி நிகழ்வதைக் குறிக்கும். Hertz என்பதை Hz என்று சுருக்கிக் குறிப்பிடுவர் .மூளையின் செரிப்ரல்கார்டெக்ஸ் என்று அழைக்கப்படும் மேலுறைப் போன்ற பகுதிப் பல மடிப்புகளைக் கொண்ட வெளி அடுக்காக உள்ளது. இதில் கோடிக்கணக்கில்நியூரான்கள் உள்ளன. ஒரு சதுர மில்லி மீட்டர் அளவில் சுமார்ப் பத்து லட்சம் நியூரான்கள் உள்ளன என்றால் எத்தனை கோடானுக் கோடி நியூரான்கள்மூளை இணைப்பில் உள்ளன என்பதைக் கற்பனைச் செய்து கொள்ளலாம் ! இந்த நியூரான்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப் பட்டுள்ளன. மற்ற மூளைப்பகுதிகளிலிருந்து தகவல் முதலியவற்றின் உள்ளீடுகளைப் பெறுகின்றன. நரம்பு தூண்டுதலினால் மின் செயல் பாட்டைப் பெறுகின்றன. புலன்கள்அனுப்பும் அனைத்தையும் பெற்று நியூரான்கள் மூளை மேலுறையில் செய்யும் செயல்பாட்டை அளப்பதை ஒரு EEG ன் எலக்ட்ரோடை மண்டையில்இணைத்து விட்டால் போதும், அதன் அடியில் உள்ள மூளையின் செயல்பாட்டை அது துல்லியமாகக் காட்டி விடும். EEG, சீரான இடைவெளியில்வருகின்ற ஆல்பா, பீட்டா டெல்டா , தீட்டா,காமா மற்றும் பல வகை மின்னலைகளைப் பதிவுச் செய்கிறது.இவற்றை அலைவரிசை அல்லது அலைஎண்என்று இனம் கண்டு ஹெர்ட்ஸ் அல்லது வினாடிக்கு இத்தனை சைக்கிள் (Hz or cycles/sec) என்றும் ஆம்ப்ளிட்யூட் எனவும் அளக்கிறோம்.உதாரணம்..

Delta wave – (0.1 – 3 Hz) 
Theta wave – (4 – 7 Hz) 
Alpha wave – (8 – 15 Hz) 
Mu wave – (7.5 – 12.5 Hz) 
SMR wave – (12.5 – 15.5 Hz) 
Beta wave – (16 – 31 Hz) 
Gamma wave – (32 – 100 Hz) 

இப்போது இன்னும் பல மடங்கு முன்னேறியுள்ளது .அதாவது 0.1  நுண்ணிய ஹெர்ட்ஸ் மின்அலையில் மூளைச் செயல்படும்போது என்ன உணர்வு ஏற்படுகிறது என்று கூட EEG கருவியின் மூலம் கண்டறியும் அளவுக்கு நுட்பம் முன்னேறியுள்ளது . 


1957 இராக் போரில் அமெரிக்காவின் CIA - Central Intelligence Agency இவ்வாறு ஒரு குறிப்பிட்டக் கோப உணர்ச்சிகளைத் தூண்டிச் செயல்படுத்தி இராக் மக்கள் தங்களுக்குள்ளே தாக்கிக் கொல்லுமாறு செயல்படுத்தப்பட்டார்கள். இது மாதிரித் தெரிந்தும் தெரியாமலும் உலக நாயகன் அமெரிக்க அண்ணன்செயல்படுத்தி இருப்பார் யாருக்குத் தெரியப் போகிறது ? கூகுள் மேப்ஸ் எர்த்தில் இருந்து பிக்சலேட் செய்யப்பட்டோ அல்லது முழுமையாகஅழிக்கப்பட்டோ காட்சியளிக்கும் மறைக்கப்பட்ட உலகின் 10 ரகசியப் பகுதிகளில் இந்த அமெரிக்காவின் அரசு ஆய்வு மையம் (HAARP government researchfacility) : அலாஸ்காப் பகுதியில் உள்ள 'ஹார்ப்' எனப்படும் அமெரிக்க ஆராய்ச்சி மையமும் (HAARP - High Frequency Active Auroral Research Program) ஒன்று !அப்படி இந்த ஆராய்ச்சி மையம் உலகுக்கு என்ன செய்கிறது ? இதற்கு இன்னும் பல பெயர் உண்டு அதில் ஒன்று Secret Weapon Used For Weather Modification .இதன் செயல்பாடுகளில் ஒன்றைக் கடந்த 04.12.2016 தினமலர்ச் செய்தி (http://www.dinamalar.com/user_comments.asp?uid=221584&name=wellington)உறுதிப்படுத்துகிறது.வாசித்துப் பாருங்கள் இதன் வலிமைப் புரியும். 

சென்னையில் மேலும் பல பகுதிகளைச் சூழ்ந்தது வெள்ளம் 50 லட்சம் பேர்ப் பாதிப்புத் தண்ணீர் வெளியேற வழியில்லாததால் மீட்புப் படைத் திணறல்இந்தப் பேய்மழைச் செயற்கையாக உருவாக்கப்பட்டது... 

உலகப் பருவ நிலை மாற்றம் குறித்ததான மாநாடுப் பாரிஸில் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அதற்கு ஆதரவுப் பெறும் நோக்கில் இவ்வாறுநிகழ்த்தப்படுகிறது. இதைபோல் பல நாடுகளில் நிகழ்த்தியிருக்கிறார்கள். இதற்குப் பெயர் ஹார்ப் [ HAARP: Secret Weapon Used For Weather Modification ] இந்தமாநாட்டின் நோக்கமே, தொழில்சாலைகளில் இருந்து வரும் கரியாமிலவாயுக்களால் பருவ நிலை மாறுபட்டுவிட்டதாகக் கூறித் தொழில்சாலைகளைமூட வைக்க வேண்டும் என்பதாகும். 


ஒருவேளை இம்மாதிரி மறைமுக விஞ்ஞான ஆயுதங்கள்தான் எல்லா நாடுகளையும் அமெரிக்காவிற்குப் பணியவைக்கும் முயற்சியா ?தெரியவில்லை.இது அமெரிக்கா அண்ணன் மட்டுமல்ல ரஷ்யச் சகோதரரும் Sura Ionospheric Heating Facility என்ற பெயரிலும் நியுஜிலாந்து ( military in aprogramme code named ) Project Sea என்ற திட்டத்தின் கீழும் இம்மாதிரி இன்னும் உலக நாடுகள் பல விஞ்ஞான முன்னேற்றங்களை அழிவின் விளிம்பிற்குஉலகை அழைத்துச் செய்யும் முயற்சியாகத் திட்டமிடுகிறார்கள் .இந்த நாவல் படிக்கும் போது நம் உலகம் எவ்வளவு பெரிய அபத்து வலைப்பின்னலில்சிக்கித்தவிக்கிறது என்பது மிரட்டும் உண்மையாகச் சுடுகிறது.இந்த நாடுகளின் முன் மனிதாபிமானம் என்பது நூறு டன் இரும்புக் குண்டை எச்சில்தொட்டுக் கட்டிடக் கூரையில் ஒட்டும் முயற்சி என்பது மிகத்தெளிவாக உணர முடிகிறது . 
இன்னும் சில பயங்கர உண்மைகளை இந்தச் சதிவலைகளால் எவ்வளவு சாத்தியம் என்பதை உங்களால் முடிந்தால்http://www.maruthamunaionline.com/V3/index.php/articles/205-human-action படித்துப்பாருங்கள் .அது மட்டுமல்லாது நாவலின் பின் பகுதியில் (பக் 229 -231) வரைஆசிரியர் கொடுத்த Reference பகுதிகளுக்குக் கட்டாயம் ஒரு விசிட் அடியுங்கள் .

ஆனால் இந்தக் கதையில் இந்தத் தொழில் நுட்பம் எப்படி யாரிடம் பயன்படுத்தப்படுகிறது ? இந்தப் பாதிப்பை மரபியல் ரீதியாக MAO ( Mono Amine Oxide )Type 2 Allele பாதிக்கப்பட்டவர்களை எப்படித் தாக்குகிறது அதற்கு உபகருவியாக என்ன என்ன தேவைப்படுகிறது ? ( பக். 108) 

இவ்வளவு சிரமமானக் கதை நகர்த்தலில் ஊடே திவாகர் – வித்யாக் காதல் இழைப் பின்னப்படுவதுவும், (பக் 132 – 133) 
இந்த அராய்ச்சியில் ஈடுபட்ட ஜெயா என்ற பெண்ணுக்கு ஹோலிஸ்டிக் சென்சிங் (Holistic sensing) மூலம் நினவுகளைத் திரும்பவும் மின்காந்தஅலைத்தூண்டல்கள் மூலம் செய்தியாகப் பெற MANAS - Mind and neural activity stimulator செயற்கை நுண்ணறிவு மென் பொருள் உருவாக்கப்படுவது இந்தியாவின் சூப்பர்க் கம்ப்யூட்டர் உதவியால் PARAM is a series of supercomputers designed and assembled by the Centre for Development of Advanced Computing (C-DAC) inPune, India (பக் 117 ) 

இதை எப்படி நம் ராணுவம் ”மன ஆளுமைத் தன் வசம் இல்லாத மனிதர்களால் பெரிய தாக்குதல் வரும் என்பதை அறிந்து அதை முறியடிக்கும் இந்தியMAPRREC Mind And Psychical Resource REmote control என்ற திட்டத்தில் யாரெல்லாம் சேர்க்கப்படுகிறார்கள் ?(பக் 111) 

நாவலின் போக்கில் இடச்செருகலாக விக்ரம் பத்ராவின் கனவின் ESP காட்சிகளும் சில்கா ஏரி நிகழ்வுகளும் மீன்களின் தாக்குதல் எலி, யானை, மனிதர்கள்மனிதனைச் சாப்பிடும்  விசயங்கள் (பக் 77) 

நாவல் மூலம் கற்றதும் பெற்றதும் .. 



1.மனித இனத் தோற்றத்துக்குக் காரணமான ‘யாளி’என்றக் கலப்பின உயிரினத்தின் உடலும் ஆதி ஓநாய் இனத்தின் உடலின் அமைப்பும், முதலை அல்லது சிங்கம் போன்ற அமைப்பு Anatolia - Gobekli Tepe பழங்காலக் கோவில் சிற்பம் மூலம் ஒத்துப்போகிறது .இது என் தனிப்பட்ட தேடலுக்கு இன்னொரு பலம்சேர்க்கிறது. 

2. நான் கற்றுக்கொண்டும் மற்றவர்களுக்குச் சொல்லிக்கொண்டு இருக்கும் அகத்தாய்வு Introspection ( empathy, and psychoanalysis: An examination of the relationshipbetween mode of observation and theory.) என்ற HLA – Human Lucosite Antigen Allele பற்றிய செய்திகளும் அதன் தீர்வும் பற்றிய பயணமும் வலுப்பெற்று இருக்கிறது !  

3. தியானத்தின் போது குறையும் EEG அலைகளின் தன்மைக் குறித்த 
பின் பகுதி (பக் 229 -231) வரை ஆசிரியர் கொடுத்த Reference பகுதி அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்கிறது . 
     
        4.The Day After Tomorrow ஆங்கிலப்படமும் ,அமெரிக்காவிடம் தப்பித்த Edward Snowden - http://www.secretsofthefed.com/snowden-reveals-haarps-clobal-assassination-agenda-w-video/ பகுதிக்கும் இன்றைய நவீன HAARP சதிகளை http://www.pearltrees.com/tierracast/haarp/id9718285#l614 பாருங்கள். 

5 .மிகப்பல அறிவியல் நூல்களை ஆராய்ந்து வாசித்துக் கதைகள் புனையப்படுவதன் சாத்தியத்தை நீங்கள் அறியலாம் .ஆனால் ஒரு நாவலைப் படித்துவிட்டு நீங்கள் மிக்கப்பல ஆராய்சிக் கட்டுரைகளைத் தேடிப்போவது நிகழப் போகிறது என்றால் அது 7.83 ஹெர்ட்ஸ் நாவலைப் படித்தவர்களுக்கு நிகழப்போவது உறுதி !.


கடைசியாக … 

                 இரண்டு முறை இந்த நாவலை நான் வாசித்து ஒரு தரமான விமர்சனத்தைத் தர விரும்பினேன் காரணம் இன்னும் பலரால் இந்த நாவல் வாசிக்கப்படவேண்டும் என்ற ஒருவித ஆதங்கமே காரணம் .

                        ஆனால் இன்னொரு சிறு நாவல் அளவுக்கு என் விமர்சனம் விரிந்து விட்டதது ! காரணம் இந்த நாவல் என்னை மிகத்தொலைவு வரை இழுத்துச்சென்றுவிட்டது.அப்படித்தேடல்களில் சேகரித்த சில விசயங்களையும் சேர்த்து இங்குக் குறிப்பிட்டதால் விமர்சனத்தின் நாகரீக எல்லைகளை மீறிப்பயணித்துவிட்டேனோ என்று கூடத்தோன்றுகிறது ! ஓர் ஆர்வத்தில் பதிவுச் செய்ததால் தவிர்க்க முடியவில்லை .நாவலாசிரியர் திரு சுதாகர் அவர்களும் மற்றும்  சிறந்த விமர்சனப் பிதாமகர்களும் ,மகள்களும் இதைப் பொறுத்துக்கொள்வார்களாக ! 
 




(பி.கு)
திரு.சுதாகர் அவர்களின்  முதல் நாவல் 6174, வம்சி புக்ஸ் வெளியீடு. வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றதோடு, திருப்பூர் தமிழ்ச்சங்கத்தினால் '2012ம் வருடத்தின் சிறந்த நாவல்' விருதினையும், கலகம் அமைப்பின் 'சிறந்த நாவல்-2012' விருதினையும் பெற்றது.

வியாழன், 14 ஜனவரி, 2016

சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ?’




நர்தகிக்குத் தனது தாய் மூலம் அந்தச் செய்தியைக் கேட்டவுடன் மிகவும் சந்தோசமாக உணர்ந்தாள்.
தான் வாழ்நாளே இப்படி ஒரு வாய்ப்புக்காகத்தான் காத்து இருந்தது போல உற்சாகமானாள்.
தான் கற்றக் கலையின் தந்தை பரதமுனிக்கும் அதைக் கற்றுக்கொடுத்த குருவுக்கும் மனதார நன்றி சொல்லிக் கொண்டாள் .
அந்த  சமஸ்தான அரண்மனையில் அவள் நாட்டியம் நிகழ்ச்சி இது முதன் முறையல்ல .மாண்புமிகு மன்னர்  கையால் பல முறை தனிப்பட்ட முறையில் பாராட்டுப்பெற்று நர்தகிக் கௌரவப்படுத்தப்பட்டதைப் பல சமஸ்தானங்கள் அறியும்.ஆனால் நம் தாய் நாட்டின் கல்கத்தாவைச்சேர்ந்த ஒரு சிறந்த யோகியின் முன் நடனமாடும் பாக்கியமும் அவரின் கண்களின் மூலம் பெறவிருக்கும் ஆசிர்வாதமும் ,தன் வாழ் நாளில்கிடைத்தற்கு அரிய பாக்கியம் என நினைத்தாள்.
நர்தகி நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் ஆகிய நடனத்தின் முப்பெரும் பிரிவுகளில் தேர்ச்சிப் பெற்றவள் கீதம், அபிநயம், பாவம் இவைகளைக்கொண்டுதாளக்கட்டு விடாமல் ஆட வேண்டியவை நிருத்தமாகும். நடனமாகிய நிருத்தமும் அபிநயக் கலையால் கருத்துக்களை வெளிப்படுத்தும்நாட்டியமும்கலந்துத் திகழும் கலை நிருத்தியம் எனப்படும். பாடலின் பொருளைக் கை முத்திரைகளினாலும் தாளத்தினைப் பாதங்களைத் தட்டிஆடுவதாலும்பாவத்தினை முகத்தினாலும் கண்களினாலும் வெளிக்கொண்டு வரல் நிருத்தியமாகும். ரஸ பாவங்களைக் கூட்டித் தாளக்கட்டுப்பாட்டுக்குள் அடக்கிக் கருத்தைப் புரிய வைப்பதே நிருத்தியமாகும்.இவற்றிலெல்லாம் அவள் கரைகண்டவள் .
அந்த ஒரு நாள் நாட்டியக் நிகழ்சிக்காக மிகக்கடினமான பரதநடனத்தின் பாவங்களையும் நவரஸங்களையும் பொருட்கள் மற்றும் செயற்பாடுகளையும் விளக்கும் அஸம்யுத ஆயத்தம் ஒற்றைக் கை முத்திரைகள் மற்றும் ஸம்யுத ஹஸ்த்தும் ,இரட்டைக் கை முத்திரைகள ஆகிய.சகல பயிற்சிகளையும் மேற்கொண்டாள் நர்த்தகி . அந்த நாட்டியத்திற்கு வேண்டிய பாடலைத்தேர்வு செய்யும்போது அப்போதைய வழக்கத்தில்முறைப்படுத்தப்பட்ட பரதத்தின்புஷ்பாஞ்சலி, பதம், வர்ணம் ஜாவளி, தில்லானா போன்ற சிருங்காரமே பிரதான ரஸமாகக் கொள்ளப்பட்டது. சிருங்காரரஸத்திலும் நாயக நாயகிப் பாவத்தில் இறைவனுக்குப் பதிலாக அன்றிலிருந்த மன்னர்களைப் பாட்டுடைத் தலைவனாகவும் பாடல்கள் புனைய பெற்றன.நடனங்கள் நிகழ்த்தப்பெற்றன.

ஆனால் நர்தகி பூர்வஜன்மத்தில் கம்சனின் அவையில் மந்திரியாக இருந்த கிருஷ்ணரின் பக்தர் அக்ரூரர் சத்தியபாமாவைஆறுதல் செயல்ஒன்று செய்யப்போய்க் கிருஷ்ணரால் பெற்ற சாபத்தில் அடுத்தப் பிறவியில் பூலோகத்தில் பார்வை இல்லாதவறாகப் பிறந்த சூர்தாசர் வல்லபாச்சாரியாரிடம் கற்றுக்கொண்ட "புஷ்டிமார்க்கம்' அடிப்படையில் பாடியச் சூரசாகரம் பக்திக் கீர்த்தனைகளை நர்த்தகி மிகவும் விரும்புவாள். மேலும் சூர்தாசரைப்போலவே கிருஷ்ணனின் குழந்தைப் பருவத்தைப் போற்றி விரும்பி வருபவள் நர்தகி. அவளும் சூர்தாசரைப் போலவே கண்ணன் எப்போதும் வளர்ந்து பெரியவனாவதை விரும்பமாட்டாள்.மிகுந்த சேஷ்டைகள் செய்யும் பாலகிருஷ்ணன்தான் அவளுக்கும் பிடிக்கும் எனவே சூர்தாசரின் 25 ஆயிரம் பாடல்கள் ஓர்அற்புதமான பாடலைத் தேர்வு செய்தாள் .அதற்காகச் சமஸ்தானத்தின் சிறந்த நட்டுவாங்கம், வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகியஇசைககலைஞர்களைத் தன்னுடன் இணைத்துக்கொண்டாள்
நர்தகி அன்று மிகுந்த சந்தோசத்தில் அதிகாலை எழுந்தாள்.அவள் வசிக்கும் வீட்டின் மாடத்தில் இருந்து பார்த்தால் மாலை ஆடவிருக்கும் அரசவையின்ஆடலரங்கம் தெரியும் .அதை இங்கிருந்தே வணங்கிகொண்டாள் .
மாலை அரண்மனையின் ஒரு பகுதியில் மிகுந்த பரவசத்தில் இருந்த நர்தகிக்கு நாட்டியத்திற்காகப் பிரத்யோகமாகத் தைக்கப்பட்டவண்ணப்பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்துகொண்டு தயாராக இருந்தாள்
அப்போது அரண்மனை நிகழ்சியை மேற்பார்வையிடும் ஒரு சேடி வந்தாள் , மன்னர் உன்னைத் தயாராக இருக்கச் சொன்னார்கள் .அந்தக்கல்கத்தாசுவாமிகள் விடைப் பெற்று அவர் ஓய்வறைக்குப் போன பிறகு நீ ஆடலரங்கம் வரலாம் என்று சொல்லி விட்டு அரண்மனைக்குள் போகத்திரும்பினாள் .
நர்தகி மட்டுமல்ல அங்கிருந்த அவளுக்கு அலங்காரம் செய்தச் சேடிகளும் அவள் தாயாரும் அதிர்ந்துப் போனார்கள் .
நர்த்தகியின் தாய் அறிவிப்பைத் தந்த அந்தப் பெண்ணை நோக்கி ஏறக்குறைய ஓடிக் குறுக்கே சென்று தடுத்து , அம்மா  ஒரு நாழிகைப் பொறுங்கள்என்னசொன்னீர்கள் கல்கத்தா சுவாமிகள் ஓய்வரை போகிறாரா ? ஏன் அவர் நாட்டியம் பார்க்க அனுமதியில்லையா? என்றால் மூச்சிரைக்க
அதற்கு அந்தச் சேடிச் சொன்ன பதில் எல்லோரையும் மேலும் நிலைகுலைய வைத்தது விட்டது .
தேவதாசியின் நட னத்தைக் கண்டு களிப்பது ஒரு துறவிக்கு அழகல்ல. அது தர்மத்த்திற்கு விரோதமானதுஎன்று அவர்மன்னரிடம்விடைபெற்றுக்கொண்டார் என்று இடியாய் ஒரு பதிலை இறக்கிவைத்து விட்டாள்
நர்தகி இது நாள் வரை ஒரு தேவதாசிக் குலத்தில் பிறந்தவள் என்பதற்காக வருந்தியதே இல்லை.மன்னனுக்குச் செய்யும் சேவைஇறைவனுக்குச்செய்யும் சேவையாகவே சந்தோசமாக நினைத்து இருந்தாள் ஆனால் இதைக் கேட்டவுடன்தான் தான் ஒரு தேவதாசியாகப்பிறந்ததற்காக வெட்க்கப் பட்டாள்.தன்னுடைய முகத்தை அங்கிருந்த நிலைக்கண்ணாடியில் பார்க்கும் போது அவளுக்கு அருவருப்பாகவும் இருந்தது .
அவள் கண்களிருந்துக் கண்ணிர் ஆறாய்ப் பெருகியது.
தாய் வந்து தேற்றினாள் .அவள் தோளில் சாய்ந்து வாய்விட்டு அழுதாள் நர்தகி
அவள் தாய் இந்த இப்படி ஒரு ஏமாற்றத்தில் தன் மகள் அழுது வருந்துவதைப் பார்த்ததே இல்லை .
நான் போக மாட்டேன் என்னால் ஆட முடியாது என்று அரற்றினாள்.
ஏன் அம்மா என்னைப் பெற்றாய் என்று கதறினாள்?
விதி மகளே நாம் பெற்ற வரம் இது என்று சோல்லிக்கொண்டு தாயும் அழுதாள்.
கூடியிருந்த எல்லோரும் செய்வதறியாதுத் திகைத்தனர்.
நர்தகி ஆடலரங்கம் போகாவிட்டால்  அரசரின் கோபத்திற்கும் தண்டைனைக்கும் தப்ப முடியாது .
அங்கிருந்த பெண் ஒருத்தி இதை  நர்தகியின் தாயின் காதோரம் மெல்லச் சொன்னாள்.
சுதாரித்துக்கொண்ட நர்தகியின் தாயார்  , மகளைத் தேற்றத் தொடங்கினாள்
மகளின் முக ஒப்பனைகள் கண்ணீர் பெருக்கத்தால் கலைந்து கொண்டு இருந்தது.
நம் விதி இதுதான் மகளே ,கடவுள் மேல் பாரத்தைப்போட்டுப் போய் ஆடிவிட்டு வந்து விடு என்றாள் .
மன்னனின் கோபத்திற்கு ஆளானால் என்ன ஆகும் என்று என்பதை நர்தகியும் அறிவாள்.
தன்னால் மற்றவர்ளுக்கு துன்பம் வரக்கூடாது என்பதால் தனது முடிவை மாற்றிக்கொள்ளச் சம்மதித்தாள்
ஆனால் தான் ஏற்கனவே முடிவு செய்து அயராது பயிற்சி செய்த சூர்தாசரின் கீர்த்தனையை பாட விருப்பமில்லாமல் அவரின் வேறு ஒரு கீர்த்தனையை அப்போது தேர்வு செய்தாள் .
ஆடலரங்கம் போகும் முன்  மெல்லச் தனக்குள் சொல்லிக்கொள்வதும் முணுமுணுத்துக் கொள்வதும் ஆடல் மங்கைகளுக்கு வழக்கம்.
ஆனால் தன் மகள் சொல்லிக்கொண்டு இருக்கும் பாடல் வரிகளை உன்னிப்பாக கேட்கும் போது வேறு ஏதோ ஒரு பாடலை தேர்வு செய்து விட்டாள் என்பதை முடிவு செய்துவிட்டாள் என்பதை அவள் தாய் அறிந்தாள் .
இந்தத் திடீர் மாற்றம் முன்னைவிட அவள் தாயிற்குப் ஒரு வகையில் பயத்தைத் தரமால் இல்லை.ஆனால் நிகழ்சி நடக்க வேண்டும் ,தண்டனையிலிருந்து எல்லோரும் தப்பிக்க வேண்டும்  என்பது மட்டும் இப்போதைக்கு அவசியம் என்பதில் உறுதியாக இருந்தாள் .
சரச் சரவெனெப் பட்டுத்துணியின் ஒளியும்  கட்டியிருந்த சலங்கையும் அதிர ஆடலரங்கம் போகத் தயாரானாள் .
நர்தகியின் காற்சலங்கை அன்று மட்டும் அவளைவிடவும் அமைதியற்று இருந்தது
இரண்டு தோழிகள் , ஒரு பட்டுத் துணியால்  நர்தகியைப் போர்த்தி   ஆடலரங்கம் அழைத்துச் சென்றனர் .


ஆடலரங்கம் ஏறும் முன் முதலில் மன்னரையும் அந்தச் சபையினரையும் வணங்கினாள் .மேடையையும் தொட்டு வணங்கினாள்
அவள் கண்கள் அப்போது ஓர் இருக்கையைத் அந்த சபைக்குள் தேடியது .
ஆம் அது அந்த யோகி, இதுவரை அமர்ந்துச் இந்த சபையைச் சிறப்புச் செய்த இருக்கை அது .அதையும் வணங்கினாள் .
அடுத்தக் கணமே அவளையும் அறியாமல் கண்கள் குளமாயின.
மனதுக்குள் இறைவனையும் , குருவையும், சூர்தாசரை உதவுமாறு ஒரு சேர வேண்டிக்கொண்டாள்.தான் உணர்வு வயப்பட்டு, அந்த யோகியை  இந்த கீர்த்தனை மூலம் வருந்த வைக்காதிருக்க உதவிடுமாறும் மனம் உருக வேண்டிக்கொண்டாள்.
எங்கிருந்து அப்படிப் பலம் தனக்குள் வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை ?
இயற்கை தான் கொடுக்க வேண்டிய செய்தியை யார் மூலமாவது எலோருக்கும் தந்து கொண்டே இருக்கும் அன்று அந்த யோகிக்கு நர்த்கி மூலம் அப்போது வெளிப்படத் தொடங்கியது
அந்த யோகியின் ஓய்வறை நோக்கித்திரும்பிய நர்தகி , நட்டுவாங்கம், வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் எதோடும் கலக்காமல், தனது கணீர்க் குரலில் பாடத் தொடங்கினாள் ...
பரமனே! சமபாவம் என்பதையே இயல்பாகக் கொண்ட நீ,
பாவம் செய்தவள் இவள் என்று என்னை ஒதுக்கிட நினைக்கலாமா?
இரும்புத் துண்டு ஒன்று, இறைவனின் பதுமையில் பஞ்ச உலோகங்களில் ஒன்றுமாக அமைகிறது.
பிறிதொரு இரும்புத் துண்டோ பிராணிகளைக் கொல்லும் பாவியின் கைவாளாகப் பாதகம் புரிகிறது.
ஆயினும், இரண்டும் ரஸவாதியின் திறனால் மாசற்றப் பொன்னாய் மாறுவதையும் நீ அறிவாய்!
பாவம் செய்தவள் இவள் என்று என்னை விலக்க நினைக்காதே!
சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ?
காளிந்தி நதியின் புனித நீரும், கழிகாலில் வழிகின்ற இழிநீரும் ஒரு நிலையில் இனிய கங்கையில் இணைகின்றபோது
ஏற்றம் பெறுவதை நீ ஏற்றுக்கொண்டவன் அன்றோ! பாவம் செய்தவள் இவள் என்று என்னை விலக்க நினைக்காதே!
பரமனே, சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ?’
அவள் குரலின் உச்சமும் வார்த்தைகளும் அந்த சபை தாண்டி ,கம்பீரமான அந்த யோகியின் என்று மூடிய ஓய்வறைக்குள் கதிரவனின் கதிர்களைப்போல சீறிப்பாய்ந்தது.
அது பாடலா ஒரு பெண்ணின் கதறலா என்பதை அங்கிருப்பவர் அறிந்து கொள்ளும் முன்   மேடயில்  மயங்கிச் சரிந்தாள்  நர்தகி. அவையினரும் ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டனர்.
ஏற்கனவே நர்தகியின் அடிபட்ட மானின் கதறலாய்  பாடிய கீர்த்தனைகளின் பாதிப்பிலிருந்து மன்னரும் ஏனைய சபையினரும் விலகும் முன்,
யாரும் எதிர்பாராவிதமாக அந்த சபைக்குள் வேறு அதிர்ச்சி சம்பவம் நடந்தது


ஓய்வறையிலிருந்து நர்தகியின் பாடல் வரிகளால் தைக்கப்பட்ட யோகி ,  நேரே சபைக்கே வந்து விட்டார்.
வந்தவர்,  யாரையும் பார்க்கவில்லை. நேராக நாட்டியம் நடைபெற்ற  ஆடலரங்க மேடைக்கு அருகே விரைந்து சென்றார்.
அங்கு ஆடலரங்கத்தில் கண்ணீர் மல்க சரிந்த நர்தகியை நோக்கி தோழிகள்  மேடைக்கு ஓடிக்கொண்டு இருந்தனர்
இயல்பிலேயே ஒளிவீசும் அந்த யோகியின்  கண்கள் கண்ணீரால் பளப் பளத்தது, அங்கு பாடிய நர்தகியை அணங்கை அன்னையைக் காண்பதுபோல் அன்புடன் நோக்கி,
தாயே!நான்குற்றவாளி ஆகிவிட்டேன். இங்கு வராமலே இருந்து, உன்னை அவமதித்த பாவத்துக்கு ஆளாகி இருப்பேன். ஆயினும் தாயேஅதிர்ஷ்டவசமாகஉன் சங்கீதம் என் அறிவை விழிப்புறச் செய்துவிட்டது!உலகில் யாரும் உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை?" என்று கண்ணீர் மல்கக் கூறினார்.
மொத்த சபையும் எழுந்து நின்று அந்த வீரத்துறவியின் செய்கையால் கைகூப்பி வணங்கியது.
இயற்கை அன்று அந்த யோகிக்கு, நர்தகி மூலம் ஓர் அறச்செய்தியை வழங்கியது அன்று !
இதை உருவாக்கியவனின் உள்ளச்சுமை :


நாம் எல்லோரும் அறிந்த  யாரலும் மறக்க முடியாத ஒரு வீரத்துறவிக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவம் இது .ஆனால் ஒரு வரியில் சொன்னால் ஒரு நாட்டிய நங்கையிடமிருந்து  வீரத்துறவிக்கு இயற்கை ஒரு செய்தியை சொல்லிய நிகழ்ச்சி அவ்வளவுதான் .ஆனால் வெகு நாளாய் பெயர் கூட அறியாத ( நர்தகி உண்மை பெயர் இல்லை) அந்த நாட்டிய   மங்கையின் மனதின் உணர்வுகளை மொழி பெயர்க்க ஆசைப்பட்டேன் .அவள் பிறப்பால் எல்லோரும் சமம் என்ற சூர்தாசர் கீர்த்தனை மூலம் என் மனதில் வெகு நாள்  தங்கியிருந்தது.அவளே இதை எழுதுமாறு தூண்டியது போல இருந்தது.( ஒரு வேளை அவளே நானாக பிறந்தேனோ என்ற அதீத கற்பனையா ? தெரியவில்லை. )  அந்தப் பெண் பற்றியப் புனைவால்  அந்த வீரத்துறவிக்கும் அவர் இந்த மாபெரும் இந்திய சமூகதிற்கு செய்த உழைப்புக்கும் எந்த ஒரு பங்கமும் வரக்கூடாது என்பதில் நான் மிக கவனமாக இருந்திருக்கிறேன் .அதை மீறி யாருடைய மனதிலும் இந்த பதிவு நெல்முனையளவும் தவறு என்று நினைத்தால்  உடனே இங்கிருந்து நீக்க சித்தமாக இருக்கிறேன் .)


வியாழன், 7 ஜனவரி, 2016

பாவம் பசங்க !


           

சில வாரங்களாக நான்காம் வகுப்புப் படிக்கும் எனது பையன் பள்ளியிலிருந்து மாலையில் நான் அழைத்து வரும்போது மிகவும் சோர்வாகவோ அல்லது ஒரு வெறுமையுடன் இருப்பதைக் கவனித்தேன். .பள்ளியிலிருந்து வந்த சில மணி நேரங்கள் யார் கூடயேயும் கொடுக்காமல் யார் பேச்சும் கேட்காமல் எதையாவது செய்து கொண்டு இருப்பான்.அப்புறம் சில மணி நேரங்களில் சரியாகி விடுவான் இது நாளடைவில் அதிகம் ஆனது , 
அவன் அமைதியற்ற நடவடிக்கைச் சில சமயத்தில் எங்களுக்கு எரிச்சல் ஊட்டியது .ஏதோ ஒரு மன அழுத்தம் இருக்கும் பெரிய மனிதர்களைப் போல இருந்தது அவன் நடவடிக்கை. 
            
     வீட்டில் ஒருவேளை அவனுக்குச் சில மணிநேர யாருமில்லாமல் தனியாக இருப்பதோ வேறு எதாவது சூழ்நிலையைக் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்ததால் அருகில் உள்ள ஒரு ஆசிரியையிடம் டியுசன் அனுப்பினோம் அங்கு இவன் வீட்டுப் பாடங்களை மட்டுமே செய்வான் .இதிலும் பெரிய மாற்றமில்லை. இப்போது அவனோடு இருக்கும் நேரத்தை அதிகப்படுத்திக் கவனிக்கத்தொடங்கிய போது எவ்விதக் காரணமும் இல்லாமல் கண்களை அதிகம் முறை மூடி முடித்திறப்பது போலச் செய்யத் தொடங்கினான் .இன்னும் கொஞ்சம் சந்தேகம் வலுக்கத்தொடங்கியது .’மேனிக் டிப்ரசன்’ மாதிரி இருக்குமோ ? என்ற சந்தேகம் வரவே அருகில் உள்ள குழந்தை மருத்துவரிடம் சென்ற போது அவர் ஒருவேளை நரம்புத் தளர்ச்சியாக இருக்கலாம் என்று ஒருமாதம் மாத்திரைகள் கொடுத்தார் .அப்படியும் பெரிய முன்னேற்றமும் இல்லை. 

கடந்த வாரம் ஒரு நாள் என்னிடம் அவன் வகுப்பு ஆசிரியை அவனிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் ,அவனைக் கண்டால் பிடிக்கவில்லை என்று சொல்வதாகச் சொன்னான் .அவன் அம்மாவிடம் இது மாதிரிச் சொன்னதாகச் சொன்னேன் . ஆமாம் நான் ஒருமுறை சொன்ன போது என்ன என்னுடைய ”மிஸ்” மாதிரியே நீயும் என்னப்பார்த்தாலே பிடிக்கவில்லை என்று என்னிடம் கூடச் சொன்னான் என்றார் மனைவி . 

எனக்குப் பொறித் தட்டியது. அவன் அந்தப் பள்ளியில் அவன் எல்கேஜி முதல் படித்துக்கொண்டு இருக்கிறான். சரி எந்த ஒரு ஆசிரியைப்பற்றியும் இப்படிச் சொன்னதேயில்லை . நேரில் சென்று அவனுடைய வகுப்பு ஆசிரியைப் பார்க்க முடிவு செய்த போது மனைவி தடுத்தார்.அப்புறம் வேண்டுமென்றே அவனுக்குத் தொந்தரவு கொடுத்தால் அவன் என்ன செய்வான் ? என்ற பெற்றோர்களுக்கே உரிய வழக்கமான பயத்துடன் கேட்டார்.அதற்கேற்றார் போலப் பையனும் வேண்டாம்ப்பா என்றான் பரிதாபமாக ! . 

ஆனால்
 அடுத்தடுத்து அங்கு நடந்த இரு நிகழ்ச்சிகள் என்னை நிர்வாகத்தின் வாசலை கொஞ்சம் வேகமாகச் சென்று மிதிக்க வைத்தது விட்டது ! 

இந்த வாரம் அவன் செய்து கொண்டு சென்ற ”ப்ராஜெக்ட்”கசக்கிக் குப்பையில் வீசப்பட்டது .அடுத்து இன்று மாலை ஒரு வகுப்பு நேரம் முழுவதும் வெளியில் நிறுத்தப்பட்டு இருக்கிறான் .
அடுத்த வகுப்பான ’ஸ்கேட்டிங்’ போக முடியாத அளவுக்கு அது அவனைப் பாதித்து இருகிறது . 

அவனிடமே கேட்டேன் அப்பா பள்ளிக்கு சென்று சண்டைப் போடமாட்டேன் என்ன காரணம் என்று விசாரிக்கிறேன் என்றேன் .அரை மனதாக ஒத்துக்கொண்டான். ஆனால் அன்றுதான் போகிறோம் என்று அவனிடம் சொல்லாமல், மனைவியைப் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து கூட்டிக்கொண்டு பள்ளிக்குப் போனேன் . 
போகும் போது மனைவியும் தயக்கத்துடன் என்ன பேசப் போகிறீர்கள் ? என்றார் . 

யார் மீது தவறு இருக்கிறது என்பதைச் சரி செய்யவே போகிறோம் அங்குப் போய் அவர்கள் பேசுவதைப் பார்த்து முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றேன் . 
பள்ளியின் முதல்வரை காத்து இருக்க வைத்து அனுமதித்தார்கள் அந்தப் பள்ளி நிர்வாகம் ஒரு ஆன்மீக அறக்கட்டளைக்குக் கீழ் செயல்படுகிறது. 

எங்களை விசாரித்த பள்ளியின் பெண் முதல்வர் முதலில் கேட்ட கேள்வி , 
என்ன நடந்தது? 
நான் பேசினேன் , 
எனக்கு உங்கள் பள்ளி நிர்வாகத்தின் மேல் எனக்குப் பிரச்சனை இல்லை .நான் இப்போது இங்கு வந்தது உங்கள் ஆசிரியர் யார் மீது புகார் கொடுப்பதிற்கில்லை.இந்த வகுப்பில் படிக்கும் எங்கள் பையன் சமீபத்தில் சில நாட்களாக வரும் அவனது நடவடிக்கையும் கடந்த சில நாளுக்கும் முன் உச்சகட்டமாக அவன் செய்தித் தாள் மூலம் செய்த “ப்ராஜக்டை”கசங்கி குப்பையில் வீசியதையும்,நேற்றுப் பக்கத்திலிருக்கும் பையனோடு பேசியதால் அந்த வகுப்பு முழுதும் வகுப்புக்கு வெளியே நிறுத்தித் தண்டித்ததையும் சொன்னேன் .குறிப்பாக அவன் வகுப்பு ஆசிரியை அவன் மீது ஏதோ கோபமாக இருப்பதை அறிந்துக் கொள்ளாவே நாங்கள் வந்து இருபதாக அழுத்திச் சொன்னேன் . 
அவர் ஆச்சர்யபட்டார் .இப்படி எங்கள் பள்ளியிலா ? என்னால் நம்பமுடியவில்லை .அது மட்டுமல்ல அப்படி நடந்து இருந்தால் அது தவறு தவறுதான் .குழந்தைகளைக் கண்டிக்கச் சொல்கிறோம் தண்டனைக் கொடுப்பதில் எனக்கும் உடன்பாடில்லை என்றார் . 
மேலும் பேசிய அவர் , 

இது 1044 பெண்களும் ஆண்களும் இணைந்துக் கல்விப் பயிலும் இடம் .அதனால் ஒவ்வொரு நாளும் எல்லாக் குழந்தைகளும் பள்ளியிலிருந்து அனுப்பி வைத்த பின்தான் நிம்மதி அடைகிறோம் .அந்த அளவுக்கு இந்த வருடம் எங்கள் பணியில் நாங்கள் சந்திக்கும் சவால்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருக்கிறது என்றார் 
அதற்கு அவர் எனக்கு என் பிரச்சனையை விடப் பெரிதாய்த் தெரிந்தது .ஒரு பாலசந்தர்ப் படத்தில் சொன்ன மாதிரி ஒரு பெரிய கோட்டை அழிக்க அதற்குப் பக்கதில் அதைப் பெரிய கோடு போட்டு சின்னதாக்குவது போல இருந்தது! 
போன வாரம் என்னுடைய டேபிள் உயரம் கூட வளராத யுகேஜிப் பையன் அவன் வகுப்புப் பிள்ளையைக் காதல் பண்ணுவதாகச் சொன்னதாக ஒரு புகார் வந்தது,நான் அதிர்ந்து போய்விட்டேன் . கூப்பிட்டு எப்படி அவன் காதலைப் என்ன புரிந்து வைத்து இருக்கிறான். என்று விசாரித்து நீ காதல் பண்ண வேண்டியது உன் அம்மா அப்பா நண்பன் எல்லோரயும்தான் என்று சொல்லி அனுப்பினேன் .வேறு என்ன சொல்ல ? என்றார்ச் சிரித்துக்கொண்டே . 
இப்படி அது, இது, எது ? என்பது போலப் பல பிரச்சனையைப் பேசி விட்டுக் கடைசியில் உங்கள் பையன் பிரச்சனையை நான் உடனே கவனிக்கிறேன் .நீங்கள் கவலைப்படாமல் உங்கள் வீட்டுக்குப் போங்கள் என்றார் . 
விடைபெற்றோம் . 

மனைவிக்குச் சமாதானம் ஆகவில்லை என்பதை முகம் சொல்லியது . 
இன்னும் நான் அவர்களை அக்னிப் பரீட்சையில் நாஞ்சில் சம்பத்தைக் கேட்டது போலக் கேட்டு இருக்கலாம் என்று நினைத்தாரோ என்னவோ ? 


அடுத்தச் சில நாளில் எனக்குச் சில வேலைகள் இருந்ததால் பையனை அழைக்க அவன் அம்மா போயிருக்கிறார் . 
அந்த வகுப்பு ஆசிரியைத் தானே என் மனைவியை காத்து இருந்து சந்தித்து ,
நான் இங்குப் பத்து ஆண்களாகப் பணிபுரிந்து கொண்டு இருக்கிறேன் .இப்படி யாரும் என்னைப்பற்றி நேரடியாக நிர்வாகத்தில் சொன்னதே இல்லை .நீங்கள் என்னிடம் கேட்டு இருக்கலாம் என்று ஆதங்கப்பட்டாராம் . 
என மனைவிக்குச் சின்னச் சந்தோசம். 
வெளியே காட்டிக்கொள்ளாமல் பேசி விட்டு வந்து விட்டார்

 பெற்றவர்களுக்குப் பாசம் !

ஆசிரியைக்குக்கு கௌரவப் பிரச்சனை !

பள்ளி நிர்வாகத்திற்கோ பள்ளியின் பெயர் மேல் அக்கறை !

மூவருக்கும் மத்தியில் மாட்டிக்கொண்டு ,பசங்க படும்பாடுதான் பாவம் !! 

சனி, 19 டிசம்பர், 2015

உமாவின் களவு போன காதல் (கடிதம் ) - இரண்டாவது பகுதி

 பெண்களின் பார்வைக்கான அர்த்தம் முழுவதுமாக கண்டுபிடித்து விட்டால் மனிதனின்   உணர்ச்சிகளை அப்படியே வார்த்தைகளால் சொல்ல முடியும் சாத்தியம் அப்போதுதான் வரும் என்பதை அன்று அவள் பார்வையில்லிருந்துதான் நான் உணர்ந்துகொண்டேன் ” 

தேவன்
நாள் குறிப்பு  14-02-1989
.

            தேவன் தனது நாட்குறிப்பிலிருந்து   தனக்கு, உமாவுடனான தன் முதல் சந்திப்பை எழுதிருந்ததை இங்கு தந்து இருக்கிறேன் .சில சமயம் ஒன்று சேர்ந்த காதலை விட பிரிந்த காதலிலே அதிக அனுபவமிக்கதாகவும், ஆழமான செய்திகளை விட்டுச் சென்று இருக்கிறது. தேவனின் காதல் சந்திப்பு ....

             
 மார்கழி இதமான இதமான குளிர் நிறைந்த மாதம் . பூமி  சூரியனிடம் பொய்க் கோபம் கொண்டு வடக்குப்பக்கம் முகம் திருப்பிக்கொண்டு ஊடலுடனே  மிக அருகில் சுற்றிக்கொண்டு இருக்கும் காலம் இது .இந்த மாதிரி ஒரு மார்கழி மாதத்தில்தான் அவளை முதன் முறையாக சந்தித்தேன் . என் இளமை தனது நீண்ட நினைவு பயணத்திற்கு முன்னுரை எழுத  தொடங்கிய காலம் அதுதான் .

              அதிகாலை பனிக்குளிரில் வீட்டுக்கு அருகிலிருக்கும் முருகன் கோவிலின் ஜெயராம் அர்ச்சகருக்கு உதவி புரிந்து கொண்டு இருந்த காலம் அது .அந்த கோவிலின் உள்புறத்தின் கர்ப்ப கிரகத்தில் நின்ற நிலை  முருகனுகனுக்கும் எனக்கும் சில அடிதூரம் வரை என் சேவை இருக்கும் .நான் பிராமணன் இல்லாததால் என் எல்லைக்கோடு அவ்வளவுதான்.அந்த முருகனை நான் எப்போது பார்த்தாலும்  என்னைப் பார்த்து மட்டும் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பதாகவே தோணும்.அங்குதான் உமாவை முதல் முதலில் சந்தித்தேன் அவளுக்கு 11 வயது எனக்கு 14.

                 எத்தனைதான் காதல் விபத்துக்கள்  வாழ்க்கையில் சொல்லி வந்த காதல் அனுபவங்கள்  சொல்லாமல் வந்த காதல் அனுபவங்கள் என்று  இன்று வரை சந்தித்தாலும் முதன் முறையாக என் உடலில் உள்ள  72000 நாடிகளில் எனக்கு காதல் நாடியை அறிமுகப்படுத்தியது அவள்தான் .இத்தனைக்கும் அவளும் நானும் ஒருவரை ஒருவர் அந்த மார்கழி மாதத்திற்கு பிறகு பல முறை அதே கோவில் சந்தித்து கொண்டாலும் சிரித்ததுகூட இல்லை . ஆனால் முதல் முறையாக இருவரும் பேசிக்கொண்டது இப்போதும் நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது .

                 
     மார்கழி மாத கடைசி நாள் பூஜை பெண்கள் அதிகம் மதிப்பு தரும் நாள் .ஆண்டாளுக்கு நாரயணனைப்போல தனக்கும் இஷ்டப்பட்ட முகம் தெரியாத ஒரு காதல் கணவனுக்கு இறைவனிடம் கோரிக்கை வைக்கும் கடைசி நாள்.கோவில் உள் வளாகத்தின் முன் பக்கத்தில்  சுமார் இருபது பெண்கள் மட்டுமே அமர்ந்து பூஜை செய்ய முடியும் .அதனால் மற்ற பெண்கள் கோவிலைச்சுற்றி அமர்ந்தும் வெளியே உள்ள பந்தலில் பூஜை செய்வார்கள் .அதனால் கோவில் முன் பகுதியில் முருகனை தரிசித்துகொண்டே பூஜை செய்யும் அந்த இடத்திற்கு கடைசி நாளில் போட்டி அதிகம்.அன்று கோவிலில் வேலை அதிகம் மண்டகப்படியாளார்கள் அதிகம் வருவார்கள். அன்றைய இலவச பூஜைப்பொருள் இலவசமாக குவிந்து விடும் .மற்றைய நாளில் அவரவர்களே விளக்கு பூஜைக்கான பொருள் கொண்டு வருவார்கள் ஆனால் கடைசி நாளில் .விளக்குக்கு ஊற்றப்படும் எண்ணை முதல் திரி பழம் தாம்பூல பொருள்கள் அனைத்தும் இலவசம் .அன்றைய விளக்கு பூஜைக்கான நல்லலெண்ணை செலவு முழுவதுவும் என் வீட்டில் அம்மா ஏற்றுக்கொள்வார்கள் .

முன்னமே நான் சொன்னது போல அன்று முன் வரிசையில் இடம் பிடிக்க
போட்டா போட்டி இருப்பதால்  பூஜை ஆரம்பிக்கும் அதிகாலை 5 மணிக்கும் முன் கோவிலின் வெளிக்கதவை  பூட்டி வைத்து இருப்போம்.அன்று நான் கோவிலுக்கு 3 மணிக்கே போய்விட்டேன் . நான் மடப்பள்ளியில் பஞ்சாமிர்தம் தயார் செய்ய நாட்டுச்சக்கரையை அண்டாவுக்குள் கொட்டிக்கொண்டு இருந்தேன் . சுமார் 3.30 இருக்கும் யாரோ வெளியேயுள்ள இரும்புக்கதவை கதவை ஆட்டுவது போல சத்தம் கேட்டது கூடவே சாமி ,சாமி என்ற ஒரு பெண்ணுக்குரிய குரலும் கேட்டது.
 அர்ச்சகர் ,கிச்சப்பு ( எனக்கு அவர் வைத்த செல்லப்பெயர் அது ) யார்ன்னு ? பாரு என்றார் .
 அப்போது தெரியாது அப்படி ஒன்று நடக்கப்போகிறது என்று .ஆம் அங்கு அவள் தட்டியது கோவில் வாசல் கதவு இல்லை என் இளமையின் கதவை !
வாசல் பகுதிக்கு வந்தேன். அங்கு உமா நின்று இருந்தாள் .
சாமி இல்லையா ? கேட்டாள்
உள்ள இருக்கார். 
கதவை திறந்து விடுங்கள் எனக்கு முன் பக்கம் கோளம் போட வேண்டும் என்றாள் .
எனக்கு புரிந்து விட்டது .
முன்னுரிமை பெற திருட்டு வழி .’அட்வான்ஸ் ரிசர்வேசன்’.
இல்லை சாமி இப்போது திறக்க கூடாது என்று சொல்லி இருக்கிறார். நாழரைக்கு மேல்தான் திறக்க சொல்லியிருக்கிறார் என்றேன் .
கோவில் வாசல் குழல் விளக்கில் அவள் முகம் ஏமாற்றம் அடைந்ததை என்னால் பார்க்க முடிந்தது.
மீண்டும் அவள்
 சாமி எப்போ வருவார் ? .
குரலில் ஏமாற்றம் சுரத்தை குறைத்து இருந்தது
உள்ளேதான் இருந்தார்.
இல்லை வெளியே போயிருக்கிறார்.
அவர் அப்படிதான் ஏற்கனவே சொல்லச் சொல்லியிருந்தார்.

அவள் எதுவும் சொல்லவில்லை.சட்டெனெ திரும்பி பிடியிறங்கி நடக்க தொடங்கினால்..
அது எனக்கு என்னவோ செய்தது !

ஏனோ தெரியவில்லை என்னை அறியாமல் பூட்டியிருந்த கதவு வழியாய்  பார்த்தேன் . நிலவு ஒளியிலும், சாலையோரத்து தெருவிளக்கின் வெளிச்சத்திலும், முழங்கால் வரை குட்டைப் பாவடை இடமும் வலமும் அசைய அவள் மெல்ல நடந்து போய்க்கொண்டு இருந்தது தெரிந்தது .

அது எனக்கு குமுத்தில் சுஜாதாவின் ’பிரிவோம் சந்தித்தோம்’தொடருக்கு ஜெ... வரைந்த , மதுமிதாவின் ஓவியத்தை ஞாபகப்படுத்தியது !
அவள் திரும்பி பார்ப்பாள் என்று மனது சொல்லியது .
தெரு முனை வரை அவள் போய் திரும்புவது வரை  தொடர்ந்து பார்த்தேன் . அவள் திரும்பி பார்க்கவேயில்லை .
  
நான் திரும்பி மடப்பள்ளியை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

நான் திரும்பி வந்த பின்னும், எனக்கு என்னையே ஒரு புது உணர்வுக்குள் இழுத்தது.

வேலையில் என் கை செயல் பட்டுக்கொண்டு இருந்தாலும் மனம் அந்த குட்டைப்பாவாடையில் தொங்கிக்கொண்டு, நடந்து கொண்டே இருந்துகொண்டு இறங்க மறுத்தது.

அப்போது பளிச்சென்று ஒரு யோசனை தோணியது .உடனேயும் அதைச் செய்து விட்டேன்.

அது ...

மணி நாழரைக்கெல்லாம் கோவில் கதவைத்திறந்து விட்டோம் .அப்போதே ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளே வரக்காத்துக் கொண்டு இருந்தார்கள். அத்தனை பேரிலும் அவளை மட்டும் என் கண் தேடியது 
யாரோ என் தோளைத்தொட்டார்கள் .

தம்பி, இந்த இடத்தில்  யாரோ கோளம் போட்டு உமா என்று எழுதியிருக்கிறார்கள் ,அருவார்களா? 
கேட்டவர் தினமும் கோவிலுக்கு வரும் கோவில் ’ட்ரஸ்டியின்’ மருமகள் .
ஆமா அக்கா ,ஒருத்தங்க வந்து கோலம் போட்டு, சொல்லிட்டு போயிருக்கிறார் என்று பொய் சொன்னேன் .  
நாங்கள் வந்த பின்னால்தானே கதவு திறந்தீர்கள் என்று அவர் கேட்கவில்லை .
ஒரு வேளை இன்னொரு பொய் சொல்ல விடமால் எனக்கு அங்கு இருந்த முருகன் காப்பாற்றி விட்டார் போல ! 

ஒருவேளை அப்படிக் கேட்டு நின்று கொண்டு இருந்தால் அதற்குள் கோவிலுக்கு பின் புறம் இருக்கும் இடமும் பறி போய் ,பிறகு வாசலுக்கு வெளியே வந்து பந்தலுக்கு அடியில் பூஜை செய்ய வேண்டி நிலை வரலாம் என அவர் யோசித்து கேட்காமல் போயிருக்கலாம் !  
எதற்கும் பந்தலுக்கு வெளியே பார்ப்போம் என்று வெளியே வந்தேன்.
இரண்டாவது வரிசையில் பளிச்சென மஞ்சள் பட்டுப்பாவாடையில் உட்கார்ந்து இருந்தாள் . 

எப்படிச் சொல்வது ?
நல்ல வேளை ,அவளுக்கு அருகில் உட்கார்ந்து இருக்கும் சின்னப்பெண் என்னை கவனித்தது.
சைகை செய்து பக்கத்திலிருக்கும் உமாவைக் காட்டிக் கூப்பிடச் சொன்னேன். 
நிமிர்ந்து பார்த்தவள் ,உடனே எழுந்து வந்தாள் . 
உள்ளே முதல் வரிசையில் கோவிலுக்குள் கைகாட்டி உங்களுக்காக இடம் போட்டு வைத்தேன் என்றேன் .
முதலில் அவளுக்கு புரியவில்லை . 
நீங்கதான் 4 மணிக்கே உள்ளே இடம் போட வந்தீர்களே என்று சொல்லி முடிப்பதற்குள் புரிந்து கொண்டாள் .
என் அந்த மிகப்பெரிய சேவைக்கு ஒரு நன்றி சொல்வாள் என்று எதிர்பார்த்தேன் .
ஆனால் அவள் உடனே திரும்பி தன்னிடம் போய் குத்து விளக்கை தூக்கி வந்து நான் சொன்ன இடத்தில் விளக்கை வைத்து விட்டு  உட்கார்ந்தாள் .
அந்த இடத்தில் கோவில் கோலப்பொடியில் சின்னதாய் அவள் பெயரை நான் எழுதிவைத்ததை பார்த்து இருப்பாளா ?
பூஜை முடித்த பின் ஏதாவது சொல்லிவிட்டுப் போவாள் என்று என்னை சமாதானப்படுத்திகொண்டு ,மறந்து போனேன் .  
ஆனால் பூஜை முடிந்த பின்னும் அவளைப் பார்க்க முடியவில்லை .


ட்டு வருடம் கழித்தபின்  ஒரு நாள் ..
என் நண்பரின் தங்கை, எனக்கு ஜூனியர்  . தமிழ் இரண்டாமாண்டு படித்துக்கொண்டு இருந்தார். எனது நூலகத்திலிருந்து அவருக்கு ’ரெஃபரென்ஸ்’  புத்தகம் கேட்டு இருந்தார். வாங்கிப்போக வரும்போது கூடவே ஒரு பெண்ணையும் கூட்டி வந்து எங்கள் காம்பவுண்டுகு வெளியே நிற்க வைத்துவிட்டு வந்து இருந்திருக்கிறார்.என்னிடம் சொல்லவில்லை.

(எனக்குத்தெரிந்து ஒரு பெண் ஒரு ஆணுடன் என்னதான் பழகியிருந்தாலும் தன்னை விட அழகான பெண்ணை தான் பழகிய ஆணுக்கு அறிமுகப்படுத்துவதேயில்லை. இது நம்பிக்கையின் வேறு கோணமா ? சுய பாதுக்காப்பா ? என்பது தெரியவில்லை !)

புத்தகம் வாங்கிவிட்டு நண்பரின் தங்கை  திரும்பி போகும் போது எதேச்சையாக உயரம் குறைவான எங்கள் கம்பவுண்டுக்கு வெளியே நின்ற அந்தப் பெண்ணைப் பார்த்தேன் .ஆனால் என்னைஅவள் பார்க்கவில்லை.
அந்த முகம் …

அந்த முகம் ....
வெகு நாளாய் என் நினைவின் ஆழத்தில் கிடந்த ஏதோ ஒரு  முகத்துடன் ஒத்துப்போவது போல இருந்தது !


மன்னிக்கவும்,
 மீண்டும் தொடர்கிறது.....

செவ்வாய், 1 டிசம்பர், 2015

உமாவின் களவு போன காதல் ( கடிதம் ) !


உலகில் ஆண்களை விடவும் பெண்கள்தான் காதல் கடிதங்கள் எழுதுபவர்களில் மிகப்பெரிய சமர்த்தர்களாக இன்னும் இருக்கிறார்கள் . நேரில் பேசுவதைப்போலத் தன் மன உணர்வுகளை அப்படியே எழுத்தின் மூலம் கொட்டித்தீர்த்து விடுகிறாகள்.இதில் மிகப்படித்த பெண்கள் படிக்காத பெண்கள் என்றெல்லாம் இல்லை எல்லோரும் தட்டி எறிகிறார்கள் .கல்யாணத்திற்கு முன் பெண்களால் எழுத்தப்படும் காதல் கடித்தங்களில்தான் ”ரொமான்ஸ்” அதிகம் வழிந்து ஓடுகிறது இதில் கி.மு 2200 ல் சுமேரிய நாட்டின் உயர்நிலைப் பாதிரியான இன்னானா முதல் இரவின்போது கணவனுக்காகக் கல்லால் செதுக்கப்பட்ட உலகின் முதல் காதல் (கவிதைக்) கடிதம் மட்டும் சேர்த்தியில்லை. 

நமக்கு வந்த காதல் கடிதங்களை விடவும் அடுத்தவர்களுக்கு வரும் காதல் கடிதங்கள்தான் உலகில் அதிகம் பேசப்படுகிறது.அமெரிக்காவின் அபிகெயில் ஆடம்ஸ் (Abigail Adams ) இங்கிலாந்தின் மேரி வோல்ஸ்டோன்க்ராஃப்ட் (Mary Wollstonecraft ) நெப்போலியன் (Napoleon Bonaparte ) முதல் ஜிம்மி ஹென் (Jimi Hendix ) வரை அனைத்துக் காதல் கடிதம் ரசங்களும் மிதக்கும் உணர்ச்சிகள் மிகுந்த வார்த்தைகள் எல்லோருக்கும் பிடிக்கத்தான் செய்கிறது .ஆனால் உங்கள் நண்பருக்கு வந்த காதல் கடிதம் படிக்க மனசு வருமா ? வராது எனக்கும் வரவில்லை.ஆனால் அந்த நண்பர் தேவன் விடவில்லை . 

நண்பர் தேவன் என்னை விடச் சில வயது மூத்தவர்.நிறைய படிப்பவர்.எழுதுபவர். மார்கழி மாத ஆண்டாளைத் தோழிகள் எழுப்புவதை மாற்றி அந்த நாரயணனே எழுப்புவதாகத் தனது காதலிக்காக யோசித்து ”மார்கழிப்பெண்ணே” என்ற கவிதை தொகுப்பை எழுதியவர் . நிறைய யோசிப்பவர்.நாங்கள் படித்த புத்தகம் பார்த்த திரைப்படம் எதிலுமே நாங்கள் பார்க்காத கோணத்தில் தன் பார்வையைப் பதிவு செய்பவர் .அவருக்கும் – உமா என்ற பெண்ணுக்குமானக் காதல் காலத்தில்தான் நான் உடன் இருந்திருக்கிறேன் . 

உமா முதல் இவர்கள் காதல் காலம் தொடங்கிய முதல் வருடத்தில் செமஸ்டர் லீவுக்குத் திண்டுக்கல்லு அருகில் இருக்கும் தனது பெரியப்பா ஊருக்குப் போய் 28 நாள் தங்கியிருந்தார் அப்போது தேவனுக்கு அங்கிருந்து எழுதிய கடிதங்கள் 23 (இது முதல் வருட செமஸ்டர் விடுமுறை மட்டும்தான் அடுத்த வருடம் எத்தனை என்பது எனக்கு ஞாபகம் இல்லை).ஒரு முறை அவர் வீடுக்குப் போனபோது மிகவும் கவனமாக ஒரு கோடு போடாத பேப்பரில் மிகக் கவனமாக ஒவ்வொரு வரியாக அடிக்கோடிட்டுப் படித்துக்கொண்டு இருந்தார்.என்ன என்று கேட்டு விட்டேன் .நான் செய்த மிகப்பபெரிய தவறு அதுதான் .மனிதர் படித்துகாட்டத் தொடங்கிவிட்டார்.. 

இது நாகரீகம் இல்லை அடுத்தவங்கக் குளியறைக்குள் எட்டிப்பார்ப்பது பொல என்று மறுத்த போது தேவன் விடவில்லை .இது என் குளியறைதான் என் நண்பன்தான் என்று சொல்லியிருந்தாக் கூடப் பரவாயில்லை . அவர் சொன்னப் பதில் அந்தப் பெண் உமா அவருக்கு எழுதிய கடித வரிகளை விடவும் ஒரு வித ரொமான்ஸாக இருந்தது. இது உனக்குப் படித்துக்காட்டும் போது எனக்கு ஒரு கவிதையைப் படிப்பது போலச் சுகமாக இருப்பதாக உணர்கிறேன்.இந்த உலகத்தில் எனக்கும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சத்தமாக ஏதோ ஒரு மலை மீது ஏறி கத்துவது போல ஒரு கர்வமாக இருக்கிறது .இதனல் உமா மீது என் காதல் இன்னும் எனக்குள் இறுகுகிறது.என்றார்ப் பதில் சொல்லாமல் அந்தத் தவறை (அடுத்தவர் கடித்தை படிப்பதை ) கேட்டேன் ! 

ஒரு முறை அவருக்குக் கடிதம் தபாலில் வந்தபோது அவருடன் வீட்டிலிருந்தேன் .அப்போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் வேறு மாதிரி இருந்தது.வந்து இருந்த அந்தத் தபால் கவரை பிரிக்காமல்உள்ளங்கயில் வைத்து ஒரு முறை அதன் கனத்தைக் கண்மூடி உள்வாங்கினார்.சில நிமிடம்தான் வேறு எதுவும் யோசிக்காமல் அந்தக் கவரை தனது மேஜை ட்ராயரில் வைத்து மூடி வைத்து விட்டு என்னோடு வெளியே கிளம்பிவிட்டார்.எனக்குப் புரியவில்லை .கேட்டு விட்டேன் .ஒரு வேளை நான் இருப்பதால் படிக்கவில்லையா என்றதும் இல்லை வேறூ காரணம் என்று கண் சிமிட்டினார்.

அவள் என்ன எழுதியிருக்கிறாள் என்பதை என் மனம் தறிகெட்டுத் தவிப்பதோடு படித்தாள் அவள் என்ன சொல்லவந்தாள் என்பது புரியாதுப் போகலாம் .என்னுள் அந்த எதிர்பார்ப்புத் தீர்ந்துப் போன பிறகு ஓவ்வொரு வரியாய்ப் படிக்கும் போது மிகப்பெரிய சுகம் வருகிறது .அது மட்டுமல்ல என்ன எழுதியிருப்பாள் என்று அதைப் படிக்காமல் அந்தச் சுகமான வலியோடு சும்மா இருக்கும் பிடிவாதமாக இருப்பதும் ஒரு விதமான சுகம் என்றார். அது சரி இந்த அனுபவம் நமக்கு ஏற்பட்டால்தானே ? 

ஆனால் எனக்கும் ஒரு காதல் கடிதம் வந்தது நான் சில ஆண்டுகள் புதுவையில் இருந்த போது என் அண்ணியின் ஒன்றுவிட்ட சகோதரி ஒரு காதல் (!) கடிதம் எழுதியிருந்தாள் .அனேகமாக உலகத்தில் எழுதப்பட மிக மோசமான தமிழ் கொலைக்கடிதம் அதுவாகத்தான் இருக்க வேண்டும் ! இன்னானா   கணவனுக்காகச் சுமேரிய மொழியில் எழுதப்பட்ட காதல் ( கவிதை) கடிதத்தை வாசித்து விளங்கிக்கொள்ளவாவது 58 வருடங்கள் சுமேரிய மொழியில் நிபுணர்களான Muazzez Longso, Hatice ஆகியோருக்கு ஆகியிருக்கு.ஆனால் என்னால் அந்தக் கடித்தத்தைக் கடைசிவரைப் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. பொதுவாக நமக்குப் பிடித்தவர்கள் எழுதிய கடிதங்களில் பிழைகள் கண்ணுக்குத் தெரியாது என்பார்கள்.ஆனால் கடிதம் முழுதுமே பிழையாக இருந்தால் என்ன செய்வது ? அப்படியும் முயற்சிப் பண்ணி எழுத்துக்கூட்டிப் படிக்க முயற்சி செய்துகொண்டு இருக்கும் போது வீட்டு சொந்தக்காரர் ( House Owner ) பையன் ஒட்டுக்கேட்டுவிட்டு அவன் அக்காவிடம் சொல்லியிருக்கிறான் (அந்தப் பெண் சுமாராகத்தான் இருக்கும் ) ஒரு முறை நேரில் பார்த்தப் போது அங்கிள் உங்களுக்கு ’தமிள்’ வராதா என்று கேட்டது நக்கலாக .என் தலைவிதியை என்ன சொல்வது? 

சரி நான் அடுத்தவர் காதல் கடிதம் படித்த மோசமான பெருமையைப்பற்றிச் சொல்லவா இந்தப் பதிவுக்குள் வந்தேன் அதுவும் பதிவின் தலைப்புக்கும் நான் சொல்லிக்கொண்டு இருக்கும் விசயத்திற்கும் சம்பந்தமில்லாதது போலப் படுகிறதா ? இல்லை .

நண்பர் தேவனுக்கு உமா எழுதிய அத்தனை கடிதங்களும் ஒரு நாள் திருடு போய் விட்டது .திருடுப் போய் விட்டது என்பதை விடத் தேவனின் நெருங்கிய நண்பரால் திட்டமிட்டுக் களவாடப்பட்டு விட்டது ! 

 அது ஏன் என்பதைச் சொல்ல நேரம் போதவில்லை.அடுத்த பதிவில் தேவனின் அந்த நண்பர் ஏன் களவாடினார் என்பதைச் சொல்ல வருகிறேன் .