வெள்ளி, 3 மே, 2013

ஆயுள் இல்லாத காப்பீடு



நீங்கள் அதிருஷ்டசாலியா ?

                சட்டென யாரிடமிருந்தும் இல்லை என்று பதில்வராது .இருந்திருக்கலாமே என்று தசாவதாரம் கமல் மாதிரி பதி சொல்ல ஆசைப்படுவோம் .அதே சமயம் எந்த வித ஜாதகமும் பார்காமல் ,காசு வாங்காமல் நீங்கள்  அதிருஷ்டசாலி என்று யாராவது அதுவும் மொபைல் ஃபோனில் கூப்பிட்டு ,திருப்பூர் டெலிபோன் டைரெக்டரியில் 1000 எண்களை குலுக்கி (?) போட்டதில் 100 அதிருஷ்டசாலி தேர்ந்தெடுத்தோம் அதில் நீங்களும் ஒருத்தர் அதனால் உங்களை எங்கள் செலவில் மூன்று இரவு இரண்டு பகல் தங்கி பார்த்து வர கோவா சுற்றுலா அழைத்துசெல்ல போகிறோம் என்பதாக இந்திய அளவில் ஒரு குறிப்பிட்ட ரேங்கிலும்  உலக வங்கி வரிசையில் ஒரு குறிப்பிட்ட ரேங்கிலும் இருக்கும்  அப்படிபட்ட இடதிலிருந்து வரும்போது எப்படி நான்  அதிருஷ்டசாலி இல்லை என்று நம்பிகொள்ள ? ஆனால் கூடவே அக்கவுடண்ட் புத்தி சந்தேகப்படு என்றது .ஆனால் இயற்கை விதி ..


              வேறு சொந்த வேலை காரணமாக அன்று போக முடியவில்லை . அடுத்த நாள் நான் 60 கி.மீ தொலைவில் இருக்கும் ஊருக்கு போய்இவிட்டேன். போனில் அழைத்த பெண் மீண்டும் அழைக்க அவர்கள் சொன்ன இடத்தை தேடிப்போனோம் ( குடும்பதோடு வரவேண்டும் என்பதாகவும் சொல்லப்பட்டு இருந்தது ).வரவேற்று உள்ளே அழைத்து சென்று ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் இந்தியாவில் அந்த வங்கியின் 13 ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் இப்படி ஒரு அதிருஷ்ட வாய்ப்பை தந்து இருக்கிறோம் என்பதாகவும் , விளம்பரங்களுக்கு கொடுக்கும் அந்த செலவை மக்களுக்கு இந்த மாதிரி சுற்றுலா மூலம் செலவு செய்து எங்கள் விளம்பரதை செய்கிறோம் என்று கூடுதலாக காரணம் சொன்னார்.பிறகு எனது வருமானம்,வங்கி கணக்கு ,வீடு ,குழந்தை , வங்கி சேமிப்பு ,எனது கல்யாணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டதா காதல்கல்யாணமா என்ற கேள்விகூடவ கடைசியாக என்னுடைய காப்பீடு பற்றி கேட்டார்கள் ( அக்கவுடண்ட் புத்தி சந்தேகப்படு என்றது மீண்டும்..ஆனால்..)


                பேசிமுடித்தவுடன் வேறு ஒருவர் உங்களை சந்திப்பார் அவர் சில விசயங்களை பகிர்ந்து கொள்வார் என்று அழைத்துவந்தார் அவர் அந்த குறிப்பிட்ட வங்கியின் சீருடை அணிந்து இருந்தார் .எங்களின் ஃப்ராடக்ட் ஒன்று இருக்கிறது கட்டாயமில்லை. நீங்கள் விரும்பினால், அது பற்றி பேசலாம் இன்று ஒரு நாள்மட்டும் அந்த வாய்ப்பை உங்களுக்கு தருகிறோம் என்றும் நாளை இந்த வாய்ப்பு இல்லை என்றும் கூலாக சொன்னார்கள் .சரி பேசலாம் என்று சொன்னோம் ..கோவா கூட்டிட்டு போறாங்க கேட்டுட்டுதான் போவோமே ....
           

 இது  ஒரு மணி பேக் பாலிஸி .குறிப்பிட்ட வயதுக்கு இவ்வளவு தொகை பிரிமியம் . முதல் ஆண்டு முழு பிரிமியம் 13600/- தொகை செலுத்தவேண்டும். அடுத்த் ஆண்டு அதை பிரித்து முதல் பகுதி தொகை கட்டி விட்டு உங்கள் பாலிஸி தொகையின் மதிப்பில் 80 % எந்தவித கியாரண்டியும் இல்லாமல் லோன் தருவோம். அதை ஆறு வருடத்தில் எப்போது வேண்டுமானலும் செலுத்தலாம் .,நான்கு வருடத்திற்க்கு ஒருமுறை 20 % போனஸ் பதினாறு அல்லது இருபத்தி நான்கு  வருடத்திர்க்கு பிறகு நீங்கள் செலுத்தும் தொகையைவிட இரு மடங்கு பெற்றுக்கொள்ளலாம்.அதர்க்கு பிறகு இந்திய சராசரி ஆயுள் 85 வரை காப்பீடு .ஷேர் மார்க்கெட் முதலீடு இல்லாததும் இதர்க்கு ஏஜெண்ட் என்று யாரும் இல்லை என்பதாலும் முழுமையான உங்கள் தொகை காப்பீடாக மாறுகிறது என்றும் இன்னும் பல ..மேலும்  வருடம் ஒரு முறை இந்தியாவின் ஏதாவது ஒரு முக்கிய நகருக்கு இதே மாதிரி எங்கள் முழு செலவில் பயனம்..  


              அக்கவுடண்ட் புத்தி சந்தேகப்படு என்று ஏனோ சொல்லவில்லை .மனைவியை கேட்டேன்.உங்களால் முடிந்தால் கட்டுங்கள் ( எப்படி ? ) ஆனா எனக்கு பிடித்து இருக்கிறது என்றார்கள் அடஅட (எண்ட அம்மே )  குடும்பதோடு  ஏன் வரவேண்டும் என  சொன்னார்கள் என்பதை மிக சரியாக அப்போது புரிந்துகொண்டேன்.  சரி என்று சொன்னதுமே சில இடங்களில் கையெழுத்து வாங்கி கொண்டு கூடவே எங்களுடன் முதலில் பேசியவர் வீடுவரை வந்து காசோலையை சேகரித்து கொண்டு பறந்தார் .(ஒருவேளை நாங்கள் மனசு மாறிவிட்டால் !)


             காப்பீடு எடுத்து ”பாண்ட் “ ஒருவாரத்தில் ஒழுங்காக வந்தது அதில் ஏஜண்ட் என்பதாக ஒரு பெயர் இருந்தது. ”பாண்ட் “வந்து விட்டதா என உறுதி செய்ய போன் வந்தது .ஆனால் மூன்று மாதம் ஆகியும் சுற்றுலாவிர்க்கான எந்த ஒரு அழைப்போ அதர்க்கான பேச்சோ வரவில்லை .ஆனால் ஒவ்வொரு வாரமும் மறக்காமல் என் மனைவி போன் வந்ததா என கேட்க்கும் போது அடப்பாவிகளா இப்படி ஏமாந்துட்டேனே என்று யாரிடமாவது கத்தணும்போல  ஒரு வேகம் பிறக்கும் ...

3 கருத்துகள்:

  1. ஓஹோ... Relia... வலையில் மாட்டிக் கொண்டீர்களா...?

    அங்கு சுற்றுலா... இங்கு 250 Gift - 50 ரூபாய் கூட தேறாது... (நண்பர்கள் கத்தலில் அறிந்து கொண்டது)

    பதிலளிநீக்கு
  2. இல்லை சார் .இது வேற .ஆனால் மொத்த அந்த லிஸ்டில் இருக்கிறது .

    பதிலளிநீக்கு