சனி, 31 ஜனவரி, 2015

பெண் பேய்கள் !!



ஏதோ திரைப்படம் தலைப்பு போல இருந்தாலும் இதையும் சிலர் சந்தோசத்துடன் படிக்கத் தொடங்குவது உணர முடிகிறது! அதற்குக் காரணம் வேறு ! எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அதே சமயம் இங்குத் திரைப்படம் விமர்சனம் பற்றியும் பேச போவதில்லை .படங்களைப் பார்க்கும் இடத்தில் இருக்கும் ரசிகன் என்பதைத் தவிர வேறு தொழில்நுட்ப சூட்சுமங்கள் தெரியாத அதைப் பற்றிப் பேச நான் லாயக்கு இல்லை .அதர்க்கு ஜாக்கி சேகர் (http://www.jackiesekar.com/) மற்றும் கருந்தேள் கண்ணாயிரம் (http://karundhel.com/) போன அற்புதமான வல்லுனர்கள் இருக்கிறார்கள்.ஆனால் நான் பேச ஆசைப்படுவது சமீபத்திய தமிழ் படக் கதை கர்த்தாக்கள் உட்படப் பலரும் செய்து வரும் ஒரு நல்ல விசயமும் , அதர்க்கு எதிரான விசயமும் ஒன்று ஓசைபடாமல் நடந்து வருகிறது ... 

நல்ல விசயம் ... 



சமீபத்திய மாசாணி காஞ்சனா ,முனி, பீட்சா போன்ற பேய் படங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட அரண்மனை ,‘யாவரும் நலம்,யாமிருக்கப் பயமேன், பிசாசு ,டார்லிங், இன்னும் பல திரைப்படங்கள் பேய் மற்றும் பிசாசுகளைப் பற்றிய பயத்தைத் தரும் படங்கள் என்றாலும் ஒருவகையில் அவைகள் மீதான பயத்தைத் தெளிவாக்கும் ஒரு முயற்சியாக இந்தத் தலைமுறைக்கு உதவுகிறது .இதில் பிசாசு படம் செத்த பிறகும் சவுக்கியம் உண்டாகட்டும் என்று ஊர்வசியின் வசனத்தைப் போலச் செத்த பிறகும் கதாநாயன்கன் நந்தாவை காதலிப்பதாகாவும் அவன் பீர் குடிக்கத் தடை விதிப்பதுவும் உச்சம்தான் . 

            பொதுவாக ஆன்மாக்களின் முக்தி வகைகள் நான்கு என்று புராணங்கள் சொல்லும் சாலோக்கியம், சாயுச்சியம், சாமீப்பியம், சாரூப்பியம் என்பதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு இங்கு நம் திரைப்படங்கள் வசதிக்காகக் கொண்டு வந்து பயமுறுத்தும் பேய்கள் அனேகமாக அகால மரணம் அடைந்தவர்கள் பற்றியதென்பதால் நாம் புராணங்கள் பார்வைக்குப் போக வேண்டாம். 





        
         அதர்க்கு முன் பதிமூன்று வயது வரை நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு ( இன்றைய திண்டுக்கல் ஆர்.என்.காலனி குடியிருப்புகள் ) நேரே பின்னால் சன்னல் திறந்தால் திண்டுக்கல் - பழனி ரயில்வே பாதையில் நடக்கும் தற்கொலைகள்கிராமத்தில் மற்றும் அப்போது நகர எல்லையை விட்டு சுமார் இரண்டு கி.மீ தள்ளி இருந்ததால் பேய் , பிசாசு ,குட்டி சாத்தான் ,குறளி வித்தை ஆவி ,முனி ,கடவுள்களை வாய் கட்டுதல் போன்ற இவைகளின் நம்பிக்கையில் வளர்ந்ததாலும் என் வீட்டிலேயே இருப்பவர்கள் மட்டுமல்ல என் நண்பர்கள் கூட்டத்திலும் பேய் படம் பார்க்க இன்று கூட லாயக்கிலாதவன்  



            நான் மட்டுமே . மிகப் பழைய படங்களான நெஞ்சம் மறப்பதில்லை அதற்க்கு முன் மர்ம யோகி (எம்,ஜி.ஆர் படம்) பேய் பயம் போக்க டெண்ட் கொட்டாகைக்கு அண்ணன்கள் அழைத்துச் சென்றபோது, தாவணி கனவுகள் படத்தில் பாக்கியராஜ் தங்கைகள் சீன் வரும்போதெல்லாம் தரையைப் பார்க்க செய்வது போலக் காதை மூடி கொண்டு, நடுங்கி கொண்டே இருப்பேன் கீழே குனிந்தே படம் பார்ப்பேன் அதனால் காய்ச்சல் கூட வந்து இருக்கிறது .அதன் பிறகு பேய்களிடமிருந்து பிழைத்து போகட்டும் என்று என்னை விட்டு விட்டார்கள். ( கல்யாணம் ஆன பிறகும் இந்தப் பயம் போகவில்லயென்றால் பார்த்து கொள்ளுங்களேன் !) 



            சரி அதர்க்கு அப்புறம் வந்த ‘யார்’, ‘மை டியர் லிஸா', ‘ஜென்மநட்சத்திரம்', ‘13-ம் நம்பர் வீடு' ‘வா அருகில் வா' போன்ற படங்கள் யார் நடித்தார்கள் என்று கூட எனக்குத் தெரியாது .பார்க்க விருப்பம் இருந்தால்தானே ? 



         ஆனால் மிகச் சமீபமாக எடுக்கப்பட்ட படங்கள் பேய் படங்களை நானே பார்க்கிறேன் .அவை பேய் இருப்பதை நிரூபிக்கிறதா அல்லது மர்மக் கதை மன்னனான ஸ்டீஃபன் கிங் சொல்வது போல “நம் நினைவுகள்தான் பேய்கள்” என்று சொல்ல வருகிறார்களா என்பது போன்ற ஆராய்ச்சி விலக்கி விட்டு நானே இவைகளைப் பார்க்கிறேன் (கொஞ்சம் பயத்தோடானாலும் ) 
இன்றைய பேய் படங்களை நம் வரவேற்பு அறைக்குக் கொண்டு வந்து பேய்க்ளை குடும்பத்தோடு ரசிக்கும் அளவுக்கு நடுங்க வைக்காது தந்த நம் பேய் இயக்குனர்களுக்கு மன்னிக்கவும் இயக்குனர்களின் பேய்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் ( முக்கியமாக நான் ) 



ஒரு கெட்ட விசயம் .

  சமீபத்திய படங்கள் இறந்து போன பெண்கள் மட்டும் பேயாக வருவதாகக் காட்டுவது கொஞ்சம் பேய் லாஜிக்கில் இடிக்கிறது .அதென்ன பயமுறுத்துவது பெண் பேய்கள் சொத்தா என்ன ? ஆண் பேய்கள் ஜப்பானில் கல்யாண ராமன் முருங்கை மர (கமல்) பேய் கதைதானா? அங்குப் போயும் வேலைக்கு ஆகாதா ? சந்தோசமா ஆண்கள் சாகக் கூட முடியாதா என்பன போலக் கேள்விகள் கேட்க தொன்றுகிறது .இன்னொரு பக்கம் யோசித்தால் சம்பந்தமில்லாத விளம்பரகளில் கூடப் பெண்கள் நடித்தால் ஒரு கவர்ச்சி இருக்குமே என்ற பெண்கள் பேயாக முன்னிலை படுத்துகிறார்களா என்பதுவும் தெரியவில்லை . சில ஆண்களுக்குப் பெண்கள்தான் பேய்கள் ,என்ற தனது சொந்த அநுபவங்களை யோசித்துப் பார்த்து இம்மாதிரி படங்களை வெற்றி பெற செய்கிறார்களோ ? என்பதுவும் ஒரு கேட்க கூடாத கேள்விதான் ( இந்தப் பதிவை என் மனைவி படிக்க மாட்டார்கள் என்ற தைரியம் இருக்கிறது ) இருந்தாலும் பாவம் பெண்கள் செத்த பிறகும் நிம்மதியா விட மாட்டேன்கிறார்களே என்ற ஆடு நனையுதே என்ற ஒரு பச்சாதாபம் நிலவத்தானே செய்கிறது ! 



  சின்னப் பட்ஜெட்டை இருந்தாலே போதும் என்பதர்க்கு இம்மாதிரி படங்கள் எடுப்பதர்க்கு ஒரு காரணம் என்பதுவும் , அறிவை முன்னிறுத்தாமல் வேண்டிய அளவுக்குத் தனது கற்பனை சக்கரத்தை ஒட்டி கொள்ளலாம் என்ற கலைஞர்களும் செழுத்த வேண்டிய ஒரே கவனம் ஏற்கனவே பெண்கள் இரண்டாம் தர குடிமக்கள் இல்லை விலங்குகளைத் தாங்களே உடைத்துக் கொண்டு முன்னேறிக் கொண்டு இருக்கும் நிலையில், சமூகத்தின் மத்தியில் பெண்கள் மட்டுமே பேய்களாக வருவார்கள் என்ற சித்தரிப்பை பற்றிக் கொஞ்சம் மாற்றி யோசிக்கலாமே.அதற்காகப் பேய் படங்கள் வரட்டும் என்பது எனக்கான எதிர்பார்ப்பு இல்லை.



            அதை தாண்டிகண்ணுக்கு புலப்படாத பல சக்திகள் பல மனித உடலில் , ஆழ்கடலுக்குள் ,இந்த பூமியின் மையங்களை நோக்கி செல்லும்போது  இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் , அதற்கான அடிப்படை அதார புவியீர்ப்பு விசயங்களில் நிறைய விசயங்கள் கொட்டி கிடக்கிறது  .அதில் அறிவியல் கலந்து படையுங்கள் .பேய்களை ரசிக்கச் செய்யும் வல்லமை கொண்ட உங்களால் இன்னும் நிறையச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம்புகிறோம் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக