சனி, 30 ஜூலை, 2016

ஆன்மாவுக்கு மனது இருக்கிறதா ? ( ”பேய்” நல்லது தெரியுமா? துரத்தல் -5 )



குழந்தையின் ஆன்மா .

                        போன பதிவில் ,ஒரு குழந்தையின் உடலிருந்து வெளியேறிய ஆன்மா இன்னொரு உடலில் புக காத்து இருக்க வேண்டியதில்லை .அது தாய் அல்லது தந்தை உடலுடன் சேர்ந்துக் கலந்து விடும் என்பதையறிந்தோம் .அப்படியானால் அந்தப் பதிவுகள் அப்படியே மீண்டும் தாய் தந்தைக்கே சொந்தமா ? ஆமாம் .ஆனால் அவனை வளர்த்தக் காலத்தின் அளவுக்குப் பெற்றோரின் வினைப்பதிவுகள் கழிந்து விடும்.அந்த ஆன்மா இவர்களுடன் கலந்து விடுவதால் உடனே அமைதியும் பெறும் .அந்த ஆன்மாவுக்குத் தனிப்பதிவு எதுவும் இல்லை - வேறு ஒரு உடலில் விரிந்த உயிர் மரணத்தால் சுருங்கி விட்டது அவ்வளவுதான் .மீண்டும் குழந்தை நம்மோடு கலந்து விட்டது எங்கும் போகவில்லை. .அந்தக்குழந்தைப் படத்தை வைத்துக் கும்பிடுவது ,நினைவு நாளைக் ஞாபகப்படுத்திக்கொள்வது அவரவர் அன்பின் பிணைப்பே தவிர அதனால் எதுவும் நன்மையில்லை .கண்ணாடி முன் நாமே நின்று கும்பிட்டுக்கொள்வது போலத்தான் அது !


2.இயற்கை மரணம் . 

                              பிறப்பு என்பது ஒவ்வொருவரும்  தான் பெற்ற நன்மைத் தீமைகளைத் தன் வாழ்நாளில் கழிக்க முடியாத போது அதைத் தன்னுடைய சந்ததிகள் மூலம் கழிக்க இயற்கை செய்த வழிதான் ஜனனம் என்ற வரம் .இந்திய ஆண்களின் சராசரி வாழும் ஆண்டு அவரவர் வாழ்க்கைச் சூழ்நிலை ,உணவு ,உழைப்பு ,உடல் பராமரிப்பு ,மன ஆரோக்கியம் இவைகளைச் சார்ந்ததாக இருந்தாலும் பொதுவாக 59.5 வருடமும் பெண்களுக்கு 69.9 வருடமும் என்பதாக World Health Organization (2015) ஆய்வு சொல்கிறது .ஆனால் நமது வீட்டு ஜாதகப்பட்டியலில் ஆயுட் காலம் 120 வயதுவரை பலன் கொடுக்கப்பட்டு இருக்கும் என்பது ஒரு ஆறுதலான விசயம். நாம் ஆண்- பெண் இருவருக்கும் சராசரியாக 65 வயதாக எடுத்துக்கொள்வோம் .இந்த வயதில் மரணமுற நேர்ந்தால் அந்த ஆன்மா எப்படித் தனது பதிவைக் கழித்துக்கொள்ளத் ஆன்மாவாகத் தொடர்கிறது என்று பார்ப்போம் ? அதற்கு முன் இயற்கை மரணம் எப்படி நிகழ்கிறது ?


பிடிக்காதச் சொந்தக்காரன் - முதுமை !

                   நம் உடல் செயல்படப் பர்கர்,பீஸாத் தின்பவர்கள் முதல் பழைய கஞ்சி ,தோசை எந்த உணவு சாப்பிட்டாலும் அவற்றிலிருது ஏழு தாது ( ரசம்,ரத்தம்,தசை,கொழுப்பு,எழும்பு,மஜ்ஜை,வித்து-நாதம்) க்களாகப் பிரித்தும் ,
பிராண வாயுவிலிருந்து ஒரு நிமிடத்திற்கு 8 லிட்டர் வீதம் ஒரு நாளில் சுமார் 12 ஆயிரம் லிட்டர்கள் காற்றை நாம் சுவாசிப்பதன் மூலமும் ,

      வானிலிருந்து உலவும் கோள்களின் அலைக் கதிர்கள் வீசும். சூரியன் ஆரஞ்சு நிறமான காந்த அலைக்கதிர் உடலிலுள்ள எலும்போடும்,புதனுடைய பசுமை நிறமான காந்த அலை நம் உடலோடும் உயிரோடும், சுக்கிரன் வெண்மை நிறமான காந்த அலை நமது உடலில் உள்ள சுக்கிரன் வெண்மை நிறமான காந்த அலைக்கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இக்கதிர்கள் நமது உடலில் உள்ள சுக்கிலத்தோடும்,சந்திரன் வெண்மை நிறமான காந்த அலை உடலிலுள்ள ரத்தத்தோடும்,செவ்வாய் செந்நிறமான காந்த அலை உடலிலுள்ள மஜ்ஜையோடும், குரு பொன்னிறமான காந்த அலை நம் மூளைசெல்களோடும்,சனி சாம்பல் நிறமான காந்த அலை உடலில் உள்ள நரம்புகளோடும், ராகு- கேது கருமை நிறமான காந்த அலைக் கதிர்கள் உடலில் உள்ள ஓஜஸ் என்ற சுத்த சக்தியோடு ம் தொடர்பு கொள்கிறது.

        பூமியின் மத்தியிலிருந்து கனமான அணுக்களின் வெடிப்பின் மூலம் வெளிப்படும் அலைகளிருந்தும் தொடர்ந்து நாம் ஆற்றலைப் பெற்றுக்கொண்டு இருக்கிறோம்.

          தினமும் போதிய அளவில் தண்ணீர் பருகினால், ஆரோக்கியமான உடல், பொலிவானச் சருமம் மற்றும் பட்டுப்போன்ற கூந்தலைப் பெற முடியும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி , சருமத்திற்கு ஒவ்வொரு செல்களும் ஆரோக்கியமாகச் செயல்பட உதவுகிறது.இதில் என்ன ஒரு சிறப்பு என்றால் நம் உடலுக்கு உள்ளே செல்லும் தண்ணீர் மட்டும்தான் எவ்வித மாறுதலும் இல்லாமல் வெளியே வருகிறது .


ஜீன்களே மெஞ்ஞானக் கருமையம் .

              நம் உடல் செல்கள் மேற்படி உணவு ,காற்று ,நீர்,கோள்கள் பூமியின் அணு வெடிப்பிலிருந்தும் உடலின் ஒவ்வொரு செல்லும் உடல்,மனச் செயலுக்கான ஆற்றல் துகள்களைச் சேகரித்து நம் உடலுக்குப் பயன்படுத்துகிறது . தாயின் கருவில் முதலில் உருவாகும் ஒற்றைச்செல் அந்தக் கணத்திலிருந்து ஒரு மனிதனின் 30 வயதுக்குள் சுமார் 50 முறைச் செல் பிரிதல் மைட்டாசிஸ் நடைப் பெற்று 100 டிரில்லியன் செல்களாகப் பெருக்கமடைகிறது . இவற்றில் சில செல்கள் விதிவிலக்கு . செல்லின் செயலை ஏன் இவ்வளவு நீளமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது ? ஒரே வரியில் சொல்லியிருக்கலாம் .ஆனால் இந்த உடல் இத்தனை வருடம் இருக்கலாம் என்ற ரிட்டன் டிக்கேட்டைச் செல்லின் உட்கருவில் உள்ள hTERT டிலோமெரேஸ் ஜீன் முடிவு செய்வதாகவும் அதற்கு onco மற்றொரு ஜீன் ஒவ்வொரு செல்லும் எத்தனை செல் பிரிதல் செய்து கொள்ளலாம் என்பதையும் தீர்மானிப்பதாக அறிகிறோம் .

      இங்கு ஒரு ரகசியம் உறங்குகிறது .இன விருத்தி செல்களில் மட்டும் டிலோமெரேஸ் செல்களால் உற்பத்தித் தடை பெறாமல் வாழ்கிறது .இது எதற்காக ? மனிதன் தனது பதிவுகளைக் கடத்த ஒரே சாதனமாக இனப்பெறுக்கம் மட்டுமே முழுசாத்தியம். நவீன விஞ்ஞான வார்த்தையில் சொன்னால் ஜீன்களே மெஞ்ஞானக் கருமையம்.இன்னும் சொல்லப்போனால் எப்போது நாம் சந்ததி உற்பத்தி போதும் என்று நினைக்கிறோமோ அன்றே மனித உடலை ஒரு பழைய ஆடையைப்போலக் கழற்றிப்போட செல்லின் கருவில் உள்ள ஜீன்கள் முடிவெடுத்து விடுகின்றன . முதுமை என்ற நமக்குப் பிடிக்காத சொந்தக்காரன் நம் வீட்டுக்கதவைத் திறக்கச் சொல்லித் தட்டத்தொடங்கி விடுகிறான் …

வித்து நாதத்திரவமே உயிர் காப்பீட்டு கழகம் !

   நம் உணவின் ஏழாவது தாதுவான வித்து நாதத்திரவத்தின் அளவைப்பொறுத்துதான்  உயிராற்றல் திணிவு Life force இருக்கிறது .முதல் 40 வயது வரை இருந்த ஆரோக்கியம் மெல்ல நரை,திரை, மூப்பு,நோய் என்ற எதிர் திசைப் பயணத்தைத் தொடங்குகிறது .மெல்ல 60-80 வயதில் வித்து நாத திரவ உற்பத்திக் குறைந்து போகப் போகத்தான் செரிமானம் இல்லாது போவது,உடல் உறுப்புகள் செயலிழப்பது ,உடலுக்கே ஆற்றல் போதாத போது மனதின் மீதும் பலவீனம் என்ற அரக்கன் மெல்ல  ஆதிக்கம் செலுத்துவது தொடங்குகிறது..

             உடலை நடத்த உயிராற்றலுக்கு அடிப்படையான உயிர்த்துகள் முழுவதுமாக உற்பத்தி நிறுத்தம் ஏற்பட்டால் மீதியிருக்கும் உயிர்துகள் பாலுணர்வுச் சுரப்பியில் தேக்கமுறும் சுழன்றோடும் உயிர்துகள் தேக்கத்தாலும் ,மின்குறுக்காலும் பாலுணர்வுச் சுரப்பி வெப்பமுற்று,அதன் நரம்புகள் பாதித்துச் செயலிழந்து ,கட்டுப்பாடை இழந்த வித்துக்களையம் Sexual Gland  உடைந்து உயிராற்றல் விட்டு வெளியேறுகிறது . மரணம் நிகழ்கிறது .மரணமுற்ற உடலைக் குளிப்பாட்டும் பழக்கம் வித்து நாத வெளியேற்றத்தைச் சோதிக்கவே நடத்தப்படுகிறது .ஒருவேளை துளி அளவு கூட வித்து வெளியேற்றம் நடக்கவில்லை என்றால் அந்த மரணத்தில் மர்மம் இருக்கலாம்!


ஆன்மாவுக்கு மனது இருக்கிறதா ? 

      உடலில் இருந்த ஆன்மா மனதோடு இருக்கிறது .தன்னை யாரெல்லாம் வந்து பார்க்கிறார்கள் , அழுகிறார்கள்,தனது கடைசிக் கடமை என்ன ,தனது, மகன், மகள், மனைவி உற்றார் ,உறவினர்கள் ,சொத்து, கடன்,வரவு Tally.ERP 9 Release 5 series அளவுக்கு எல்லாம் யோசிக்கும் அறிவின் படர்கையாற்றலான மனம் முற்றிலுமாகத் தனது செயலை இழக்கிறது .அது எப்படி என்றால் நம் உடலில் உள்ள நரம்பு மண்டலத்தின் வாயிலாகத்தான் மூளைக்கு உணர்வுகள் அடையாளப்படுத்தப்படுகிறது.

    உடல் உள் உறுப்புகளின் செயலை ஜீரணிப்பது தொடங்கிப் பதினோறு மண்டலங்களின் செயல்பாட்டை அதாவது நமக்குத் தெரியாமல் இயக்கும் ’மைய நரம்புத் தொகுதி’ Autonomous nervous system யின் வேலை.அதே சமயம் நம் விருப்பப்படியெல்லாம் பிடித்தவர்களைப் பார்த்துக் கையாட்டுவது ,திருப்பிக் கடிக்காத தெரு நாயை எட்டி உதைப்பது , பெண்கள் வாகனம் ரோட்டில் போனால் சட்டெனெ உரசுவது போலக் கிட்டப் போய் ’கட்’ அடிக்கும் குரூரச் செயல் எல்லாம் இந்த ’மனவிரும்பி நரம்பு மண்டலம்’ Voluntary nervous system or Central nervous system வேலை இப்படி இரண்டு நரம்பு மண்டலத்தின் மூலம் செயல் செய்து கொள்கிறோம் .அழ்ந்தத் தூக்கம் ,கோமா நிலையில் இது வேலை செய்யாது .நம் பிறக்குப் போது Autonomous nervous system முதலில் வேலை செய்யத்தொடங்குகிறது அதற்குப் பிறகே Voluntary nervous system வேலை செய்கிறது ஆனால் இறக்கும் போது முதலில் மனவிரும்பி நரம்பு மண்டலம் Voluntary nervous system இயக்கத்தை நிறுத்திக்கொண்ட பின்னேதான் மைய நரம்புத் தொகுதித் தனது செயல்பாட்டை நிறுத்துகிறது .எதற்கு இவ்வளவு நீளமாக நாட்டாமைப் பொன்னம்பலதிற்குப் பிடிக்காதது போலச் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால் எந்த ஆன்மாவும் தனது பதிவுகளை கழிக்க  உடல் தேடுகிறதே தவிரப் பழிவாங்கும் காஞ்சனா குணமோ, கட்டிப்பிடித்தால் அடித்துப்பிரட்டும் டார்லிங் மனமோ ,மிஸ்கின் பிசாசு போலப் கூலிங் இல்லாத பீர் பாட்டிலை உடைக்கும் தன்மையோ இருக்கவே இருக்காது .இது அதீதச் சினிமாக் கற்பனை .

          ஆனால் அது எதாவது உடலில் தஞ்சமடைந்து விட்டால் தன்னிடமிருந்த குணம்,மனம்,தன்மை எல்லாம் தஞ்சம் அடைந்த உடலைப்பொறுத்து வெளிப்படுத்தும் ! உடல் விட்ட ஆன்மா அன்னிய உடலில் தஞ்சம் அடைந்த பின் அதன் செயலைப் பற்றி வேறு இடத்தில் பார்ப்போம்.


இயற்கை மரண ஆன்மா,யாரிடம் சேர்கிறது ?

      இங்கு ஒரு மிக முக்கியாமான விசயம் .உடலிருந்து வெளியேறிய ஆன்மா இன்னொரு உடலின் கருமையத்திற்குள் தானே நுழைவது இல்லை. காரணம் அதற்கு மனம் என்ற தன்விருப்பம் இயக்கம் கிடையாது .வேறு உடலில் அதை விரும்பி ஏற்கும் ஒத்தப் பதிவுகள் அடங்கிய ரத்த சம்பந்தமாக இருக்க வேண்டும் அல்லது வேறு ஒரு உடல் உயிர்சக்தித் திணிவுக் குறைவாக இருக்க வேண்டும். ஒரு உடலில் உயிர் சக்தியின் அளவு எப்போதெல்லாம் 49 சதவிகிதத்திற்குக் கீழே குறைகிறதோ அப்போது வெளியேயுள்ள அன்னிய ஆன்மாவுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பது போல ஆகிவிடும் .இது எப்போதெல்லாம் நம் ஒவ்வொரு உடலிலும் நிகழ்கிறது ? 1.அதிக உடல் உழைப்பால் உயிர் சக்தி வெளியேறிச் சோர்ந்து போகும் போது .2.இரவு நேரங்களில் மிகுந்த வாசனையுள்ள பூவை அல்லது வாசனைத் திரவியம் பயன்படுத்துவதால் நம் உயிர்சக்தி அந்த நுகர்வுணர்வில் வெளியேறி விடும், 3.இரவில் அகால நேரத்தில் கண்ணாடி முன் நம் உருவத்தை வெகு நேரம் பார்க்கும் போது,4.அதிகப் பாலுணர்வில் திளைத்து உயிர்சக்தி செலாவானப் பின் 5.அகால நேரமான இரவு பண்ணிரெண்டுக்கு மேல் சுவாதிஷ்டானத்தில் போதியக் காப்பு இல்லாமல் நினைவைச் செலுத்துவது 6. திடீர்ப் பயத்தால் .
       இயற்கையாக மரணம் நிகழ்ந்ததால் வெளியேறிய ஆன்மா உயிர்சக்தித் திணிவு குறைவாக இருப்பதால் அது மேற்படி வாய்ப்பை விடத் தனது ரத்த சம்பந்தமான மகன் ,மகள்,சகோதரன்,சகோதரி,பேரன் பேத்தி இவர்களின் உடம்பில் அவர்களும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் மனம் இருந்து முன் வந்தால் மட்டுமே அவர்கள் உடல் சேர்ந்து கொள்வது இயல்பு.தன்னுடைய ரத்த சம்பந்தமுள்ள நபர்களுடனான வினைப்பதிவுகள் ஒத்துப்போவதே இதற்கு முதல் காரணம் .அதிலும் இந்த உயிர் அமைதிப் பெறவும் இதன் வினைபதிவுகள் என்னோடு த்டரவும் நான் அடைக்கலம் தருகிறேன் ,என்னோடு சேரட்டும் என்ற எண்ணத்தோடு ஆங்குச் சடங்குச் சாங்கியம் செய்தால் மட்டுமே அவர்களோடு சேர்ந்து கொள்ளும் .இவ்வாறு ஏற்றுக்கொண்டவர்கள் மனதிலும் உடலிலும் அந்த ஆன்மா தன்னை முறைப்படுத்திக் கொள்ளவும் சரிப்படுத்திக்கொள்ளவும் எடுத்துக்கொள்ளும் கால அளவுதான் 16 நாட்கள் .ஏற்றுக்கொண்டவருக்கு உணவு முறை ஓய்வு ஆகியன சடங்கு வழிமுறைகாளாக ஏற்படுத்தி வைத்து இருக்கிறார்கள் .

சொந்தமில்லாத ஆன்மாவின் நிலை ?


        ஒருவேளை எனக்கு இவர் எதுவும் செய்யவில்லை.சொத்து எழுதவில்லை சின்ன வீட்டுக்கு எழுதி விட்டார் என்று இவரை விரும்பாத இவரின் இனிசியல் மட்டும் போதும் என்று நினைக்கும் ப்ரகஸ்பதிகளாலும் , விநாயகமுருகனின் - ராஜிவ்காந்தி சாலைக் கேரக்டர் போல , ரத்த சம்பந்தமுள்ளவர்கள் வெகு அருகில் இல்லாத போது அந்த ஆன்மாவைக் கூட்டு வழிபாட்டுச் சடங்கின் மூலம் ஏற்க விருப்பமுள்ள நண்பர்கள்,ஒத்தத் தன்மை உள்ளவர்கள் அந்த ஆன்மாவின் வினைப்பதிவைப் பங்கீடு செய்து கொள்ளும் வகையில் இணத்துக்கொள்ளலாம்.ஆனால் இது அந்த உடல் எரிப்பதற்கோ ,புதைப்பதற்கோ முன்னர் மட்டுமே செய்தால் சாத்தியம் ..

  வேதாத்ரிய ஆன்ம சாந்தி தவமுறை இதைத்தான் செய்கிறது .ஆனால் அதற்கு அவர்கள் இறந்தவருக்கு நண்பர்களாக இருக்க வேண்டிய அவசியம் கூட வேண்டியதில்லை.நன்கு துரியாதீதத் தவமியற்றும் ஆறு அருள்நிதிகள் போதும் .

        உறவு ,நட்பு ,ஒத்ததன்மையுள்ளோர் எவரும் இல்லாத இயற்கை மரணத்தினால் அனாதை ஆன்மா ! அதன் திணிவு நிலை மற்றும் தன்மைக்கேற்ப அது வளிமண்டல அலைகளாலும் ,காற்றினாலும் அதிகச் சத்தத்தினாலும் ,வெளிச்சத்தினாலும் அது விலக்கப்படும் .அது தள்ளப்படும் வேகம் ஒளியின் வேகத்தில் இருக்கும்.அது லேசாக இருப்பதால் காற்று மண்டலத்தின் உயர்ந்த இருண்டப் பகுதிக்குக் கொண்டு சேர்க்கப்படும் .இது சுமார் 150 வருடம் அங்கேயே தேங்கி நின்று சிறுகச் சிறுகப் பிரிந்துக் கரைந்து காலத்தினால் அதன் திணிவு நிலைக் குறைந்து கொண்டே வரச்செய்து முற்றிலும் இல்லாமல் போகுமாறு இயற்கையே அதைப் பராமரிக்கிறது ….யாருமில்லாதவர்கள் யாருமில்லை. இயற்கைதான் நாம் இறந்த பிறகும் நம்மைப் பராமரிக்கும் மிகப்பெரிய சொந்தம் !

திடீர் மரணம்.


        இதுவரை குழந்தை மரணம் .இயற்கையாக வயது மற்றும் நோயால் இறந்த உடலிருந்து வெளியேறிய ஆன்மாவின் நிலைகளைப்பற்றிக் கவனித்தோம் .இனி வாழ வேண்டிய வயதில் விபத்தால் , ஏதோ ஒரு அவசரப்புத்தியில் தற்கொலை செய்துகொண்ட, அல்லது ஏதோ ஒரு காரணத்தால் கொலை செய்யப்பட்டுத் திடீரெனெ உடலிருந்து துண்டிக்கப்பட்ட ஆன்மா மரணத்தினால் அதிர்ச்சியடைந்து அந்த அதிர்ச்சியினால் படபடப்பு நிலையில் இருக்கும் .அந்தத் திடீரெனெ உடலிருந்து பிரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. உயிரின் திணிவும் ஆதிகமிருப்பதால் இயற்கையான் ஈர்ப்பு சக்தியால் இன்னொரு உடலை அது அடைந்து விடத் தன் உயிர் விட்ட இடத்தில் காத்து இருக்கும் .

இப்படி அதிர்ச்சியினால் படபடப்பு நிலையில் இணையும் ஆன்மாதான் ,வேறு உடலோடு தங்கும் போது,அந்த உடம்பில் வாழும் கருமையத்தை, அதன் வினைப்பதிவுகளைக் கீழே தள்ளி டம்மியாக்கிவிட்டுத் தன்னுடைய ஆக்கிரமிப்பால் டார்லிங் படத்து அழகிய கல்ராணியைக் கூட அகோரக் ’கொல்ராணி’ - பிசாசு நடத்தைக்கு மாற்றி விடும் .

அடுத்தத் துரத்தலில் அதைப்பற்றி விரிவாகப் பயப்படுவோம்….




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக