வியாழன், 21 பிப்ரவரி, 2013

வாழ்வை நேசிக்காத காதல் அபத்தம் .

காதலில் தோற்ற பிறகு..1
காதல் மட்டுமே வாழ்கை இல்லை. மறுக்கபட்ட காதல் தோற்றுப்போன காதலுக்கு நிகர் இல்லை.அதர்க்கு மரணம் தீர்வும் இல்லை .தன்னுடைய வாழ்கையை நேசிக்க தெரியாதவன் காதலுக்கு லாயக்கில்லாதவன் அதுமட்டுமல்ல காதலை காதலாக பார்க்க தெரியாதவன் நிஜ வாழ்கைக்கு பொருத்தமானவன் இல்லை . )

காதலில் தோற்ற பிறகு..2

                         
 தோல்வி என்பது இருவருக்கும் பொதுதானே!                   
                           இந்த விசயத்தை எழுதும்போது வழக்கம் போல ஒரு கேள்வி வந்தது. காதல் தோல்வி ஆணுக்கு மட்டும்தானா இங்கு பேசிக்கொண்டு இருக்கிறோம்?.இல்லையே .தோல்வி என்பது இருவருக்கும் பொதுதானே!.அந்த வலி எப்படி போகிறது அல்லது போகலாம் என்பது மட்டுமே இங்கு விசயம்.இதில் முக்கியம் என்னவென்றால் காதல் அழகியது என்பதை யாரும் மறுக்கவில்லை.அதை அறிமுகப்படுத்த ஆயிரம் வழிகள் கைகாட்ட காத்து இருக்கிறது .ஆனால் தோல்வி என்ற உணர்வு வந்த பின்னால் நடக்கும் சகல விசயமுமே நமக்கு எதிரே கட்டம் கட்டி நிற்பது போல ஒரு பிரம்மை .எந்த சானல் திருப்பினாலும் சோக பாடலையே பார்ப்பதாக ஒரு கனவு சுழல்கிறது .அந்த சோக சுகமே தனி என்பதை அனுபவித்தவர்கள் உணர்வார்கள் .யானை மாதிரி காதல்.யானை  இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள் .காதல் இருக்குபோதும் சுகம் - பிரிந்த அல்லது தோல்விக்கு பின் வேறு சுகம் 
.
காதல் என்பது உணர்வு
                           கடவுள் கூட காதலிடம் தோற்று போய்விடுகிறார் .ஆமாம் அவர் எழுதிய ஆயுள் ரேகை சில காதல் தோல்விகளில் காதலர்கள் மரணத்தை சந்திக்கும்போது தோற்று போகிறதே ! இங்கு நாம் பேச விரும்புவது வாழ்வை நேசிக்க வைக்கும் காதலை.’என்ன சத்தம் இந்த நேரம்’ என்று கைகோர்த்து தற்கொலைக்கு போகும் பாலசந்தர் பாணி இல்லை .காதல் என்பது உணர்வு .அது நமக்குள் நம்மை காதலிக்க தூண்டும் அற்புதம் .

 ரகசியம் பேசுவதாய் ஒரு பிரம்மை
                          நாம் எழுதிய உரைநடை உடையும்போது அதர்க்கு கவிதை என்று வாதிக்க செய்வது .நம்மை நம் மனதின் மெல்லிய  இசைக்கு சரணம் , பல்லவியை துணைக்கு அழைக்காமல் பார்வை நரம்புக்களை பின்னி தனி ஆவர்த்தனம் பண்ணும் தனி உலகம் .பீத்தோவானின் I Love to Listen To புதிதாய் ஒரு அர்த்தம் சொல்லும் இசை .நீதானே என் பொன்வசந்தம் - சமந்தா பார்வை ஆயிரம் பேர் கூடி படம் பார்க்கும் தியேட்டரில் எனக்கு மட்டுமே ஏதோ ஒரு விசயம் அல்லது ரகசியம் பேசுவதாய் ஒரு பிரம்மை  .இத்தனை இருக்கும் இன்னும்கூட காதல் தோல்வி எனும்போது மட்டும் தவறான அர்த்தம் கொடுத்துவிடுமா?
நான் இன்னும் இருக்கிறேனே ...
                      என்னை எனக்கு சொல்லும் காதல் , என்னை கொல்லும் தன்மையுடையதா ...சே சே .இருக்கவே முடியாது .எப்படியோ தோல்வி வந்துவிட்டது .இப்போ நான் என்ன செய்ய ? இந்த இடத்தில் நாம் நின்றுகொண்டு இருக்கிறோம்..தோல்வியை அல்லது அந்த மனப்பான்மையை எப்படி எதிர்கொள்ள  வேண்டும் .அவர் அல்லது அவள் இல்லை என்றபோது என் வாழ்கை சூன்யமா ? இந்த முறை இந்த தோல்வி என் மொத்த வாழ்வையுமா தீர்மானித்துவிடுகிறது ? இது ஒரு அனுபவம் .அதிலும் என் மனசின் முகவைரியை எனக்கு சொல்லி கொடுத்த அற்புத அனுபவம் .இதை இழக்க கூடாது .அந்த குறிப்பிட்ட நபர் என் வ்ழியிலிருந்து விலகிவிட்டதால் என் பயனம் நின்றுவிடவில்லயே .இதோ நான் இன்னும் இருக்கிறேனே .

 ஏதாவது ஒன்றில்...
                           அடுத்து என்ன என்பதே என் நிலை .சரி என் கனக்கும் மனதை  திருப்பவேண்டுமே .படிக்கலாமா ? அது ஏற்கனவே படிக்கும் பழக்கம் இருந்தால் நல்லது .இல்லாவிட்டால் புத்தகம் மட்டுமே கையில் இருக்கும் நினைவுகள் ஏதோ ஒரு வரி பழைய நினைவுகளை தொட்டு விட்டால் பின்னாலே போய் விட கூடும்.காதல் இல்லாத துப்பறியும் நாவல்கள் நல்லது .அது ஆங்கிலமாக இருந்தாலும் .அதை விட நூலகம் போய் படிப்பது ,புதிதாய் புத்தகம் தேடுவது நல்லது .


பார்வைகள் துரத்துவது போல ..              
                     அல்லது வேறு ஏதேனும் ஊருக்கு போய்விடலாம? இந்த ஊரில் இருந்தால் அவள் மட்டும்தான் பார்க்குபோது அவளாகவோ அல்லது அவனாகவோதெரிவார்கள் ..மத்த எந்த ஊர்போனாலும் பார்ப்பவரெல்லாம் அவளாகவோ அவனாகவோ தெரியலாம் .எங்கிருந்தோ நம்மை சதா சில பார்வைகள் துரத்துவது போல தோன்றும்.அது ஆபத்து .

                              நல்ல திரைப்படம் ? அது கொஞ்சம் வாய்ப்பு இருந்தாலும் அங்கும் புத்தகத்தில் வரும் ஆபத்து இருக்கிறது . 


 இசை...                   
      இசை பற்றி  கேட்கும் பழக்கம் கொஞ்சம் காயா கனியா என்ற இரு நிலை .இசை பற்றி தெரியாமல் அதில் ஆர்வம் என்பதை தாண்டி தேடல் என்பது இருக்கும் பட்சத்தில் இசை ஒரு மருந்து .ஆனால் அந்த லயம் வேறு எதிலும் ஈடுபடவிடாமல் செய்யும் ஆபத்து இருக்கிறது .
                  மேலை நாடுகளில்  குறிப்பாக  ஹெவி மெட்டல் இசையைக் கேட்கும் போது எனது மன அழுத்தம் முற்றிலுமாக வெளியேறிவிடுகிறது' என்ற நம்ப்பிகை இருக்கிறது .  மிகபெரிய விரக்தியும் கோபமும் இந்த இசையோடு சேர்ந்து  கத்துவதன் மூலம் வெளியேறிவிடுகிறது என்றூ நம்புகிறார்கள்.அது நமக்கு அந்த சாத்தியம் இல்லை .


  பார்க்காத நட்பு                   
        வேலையிருப்பவர்கள் அடுத்தவகள் வேலையை சேர்த்து எடுத்து பார்ப்பார்கள்.இது ஆறுதலான விசயம்.ஆனால் வீட்டுக்கு வந்தால் அதே தனிமை துரத்துமே .எனவே தனிமை தவிர்ப்பது மிக முக்கியமான் விசயம்.அது காதலின் தம்பி தங்கை மாதிரி.மீண்டும் குழப்பம் கூடிவிடும்.
நம் இந்த விசயம் தெரியாத நட்புக்களை தேடிப்போவது நல்ல விசயம் .அதிலும் வெகுநாளாய் விட்டு போன பார்க்காத நட்பு மிக நல்லது.முக்கியமாய் நம்மை தவறாக புரிந்து கொண்ட நட்பை மதிப்பது நம்மை நாம் மாற்றி கொண்டு இருக்கும் மனோபாவத்தை உடனே ஏற்படுத்தும்.

 புதிதாய் ஏதேனும்..
.              நாம் உணர்வுகளுக்கு தகுந்தார்போல படம் வரைவது , ஃபோட்டோ எடுப்பது போன்ற சமாசாரங்கள் நல்லது .ஆனால் கவிதை , கதை  - மூச் ,அந்த பக்கம் வேண்டவே ,வேண்டாம் ,புதிதாய் ஏதேனும் மொழியறிவது மிக நல்லது .கம்யூட்டரில் சாஃப்ட் வேர் , ஹார்டுவேர் படிப்பது நல்லது .( ஏற்கனவே தெரியாவிட்டால் ) மேலும் நீச்சல் போன்ற உடலுக்கும் மனதுக்கும் ஏற்ற விசயம் மிகவும் நல்லது


         
                 வீட்டு வளர்ப்பு கிளிகள் ,பறவைகள் ,மீன்கள்,பிராணிகளுடன் பழகுவது , தாவரங்கள் வளர்ப்பது  நல்லது.


            
                   நமது வாகனங்களை அதிகம் பராமரிப்பது சுத்தமாக வைத்து இருப்பது ,அதனுடன் மதித்து உரையாடுவது நல்லது - கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக தெரிகிறதா ? செய்து பாருங்களேன் மாற்றம் தெரியும் .
இது வேண்டாம் .
                        முப்பது வயதிர்க்கு உட்பட்டவர்கள் பக்திக்கு அதிகம் முக்கியத்துவம் தருவது ஆபத்து .அங்கும் மனரீதியாய் தனிமை மீண்டும் விட்ட இடத்திற்க்கு அழைத்து சென்றுவிடும் .அது மட்டுமல்ல கோவில் , பொது இடம் ,நாம் பார்க்க தவிர்க்க விரும்புபவரை முன் நிறுத்தி விடாலாமே .கொஞச நாள் இது வேண்டாம் .

  குடும்பத்துடன்...
                      முக்கியமாக இம்மாதிரி தோல்விகளின் வெளிப்பாடு ஒரு வித விரக்தி மனோபாவத்தை தரும் .ஏதோ நம் தோல்விக்கு ஒரு அங்கீகாரம் ஆறுதலாக அமைய வேண்டும் என்ற மனப்பான்மை கீழ் கண்ட முயற்சி நல்ல பலன் தரும். 
                                குடும்பத்துடன் இருப்பவர்கள் ( பாவமாக நம்மை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் ) தங்கை ,அக்கா ,அண்ணன் , தம்பி அம்மா , அப்பா இவர்களோடு அதிகம் உதவி செய்து  பழகும்போது சட்டெனெ உலகமே மாறிப்போன சந்தோசம் வரும் .இது எல்லாவற்றிலும் நல்லது .கொஞ்சம் நடிப்பதாய் ( நமக்கே )தோணலாம் .ஆனால் அது நல்லது .இன்னும் கூடுதலாய் .வீட்டை பராமரிப்பது , சின்ன வேலைகளை தெடிப்பெறுவது இந்த மாதிரி சின்ன விசயங்கள் ரொம்பவுமே நல்லது .நம் வீட்டு ஆளே நமக்கு புதிதாய் தெரிவார்கள் அப்போது .



தாயை வணங்கும் பழக்கம்..
          நம் தேசத்தில் இப்போதெல்லாம் இந்த அவசியம் இல்லை .மேலை நாடுகளில் பின் பற்றி ஒருகாதல் போனால் இன்னொரு காதல் , அதிக குடி , வன்முறைகள் , கற்பழிப்புகள் ,என நிரம்பி வழிகிறார்கள் நீ பேசும் சைவ வழிமுறைகள் வழக்கொளிந்து போய் விட்டது என சொல்லாம் ஆனால் தாயை வணங்கும் பழக்கம் இந்த தேசத்தில் எப்போது போகுமோ அப்போது வேண்டுமானால் இத விசயம் வழக்கொளிந்து போகலாம் .மேலை நாட்டு பழக்க வழகத்தை கொண்டாடும் அவர்கள் தன்னுடய பிற்காலங்களில் தனக்கு நடக்கும் அத்தனைக்கும் வேறு யாரையாவது குற்றம் சொல்லிக்கொண்டு அலைவார்கள்.

 ஒரு விலாசம் அவ்வளவே !
                           இங்கு நான் இதை ஒரு வழி என்று சொல்லவில்லை . ஒரு விலாசம் அவ்வளவே ! இந்த தேசத்து காதலர்கள் முதல் காதலில் தோற்றவர்கள் அல்லது தொலைத்தவர்களை பற்றி  பேச ஆசைப்பட்டேன் அவ்வளவுதான்  .   

 முதல் பயனம்..
                             காதலை கொண்டாட ஆயிரம் வ்ழிகள் காட்டப்படுகின்றன இங்கு .ஆனால் வலிகளை சுமந்து ,நடமாடும் கோடிக்கணக்கான தாஜ்மகால்களை நேசிக்கும் ஒரு அடையாளாமாக என்னை காட்டி கொள்ள என் முதல் பயனம் இதுவே !

சனி, 16 பிப்ரவரி, 2013

காதலில் தோற்ற பிறகு..


 
 தோற்ற காதலின் மேல் தான் சரித்திரம்...
          இந்த நிலையை விரும்பாவிட்டாலும் நாம் சந்திக்கவோ ,அனுபவிக்கவோ ஒவ்வொருவரும் ஏதோ ஒரு தருணத்தில் இழுத்து செல்லப்பட்டு இருக்கிறோம்.மீண்டு வரும்போது நாம் எப்படி இருக்கிறோம் என்பதுதான் கேள்வி.ஏனென்றால் தோற்ற காதலின் மேல் தான் சரித்திரம் பிரமிப்பாய் வாழ்கிறது.

காதலின் வகை 

         அது ஒருதலை காதலாகட்டும் ,சொல்ல தெரியாத காதலாகட்டும் , தவறாக ( பழகிய சில காலங்களில் ) புரிந்து கொள்ளப்பட்ட காதலாகட்டும்,சூழ்நிலையால் பிரிந்து போனதாகட்டும்,அவசர காதலாகட்டும்,அக்கறையினால் எழுந்ததாகட்டும்,தியாகத்தால் பிரிந்த - ஒருவர் நல்லதிர்க்காக விட்டு கொடுத்த காதலாகட்டும்,வெளிப்படுத்தாத காதலாகட்டும் ,இன்னும்...எல்லாமே ஒரு வகையில் தோல்வி என்ற ஒப்புக்கொள்ளப்பாடாத ஏமாற்றம்தான்.( இதில் வயதுக்கே வராதவர்கள் காதல்அவசர காதல் ,அடுத்தவர் மனைவி மேல் வந்த முந்தய பிந்தய காதல், நம்பிக்கை வைத்து பழக விட்ட நண்பனின் தங்கை மேல் காதல் , உதவியதால் எதிபார்க்கும் கைமாற்று  காதல்  இங்கு வேண்டாம்.) 

 அந்த பெண் மரணத்திர்க்கு முன்..

             பாலகுமாரனின் எழுத்தை தவம் என உணர்ந்து படித்து கொண்டு இருந்தபோது சொந்த தாய் மாமன் மகள் மீது நண்பர் காதல்கொண்டு அவருக்கு தராமல் வேறு ஒருவருக்கு மணப்பேச்சு பேசியபோது தாங்காமல் தூக்கு போட்டு கொண்டு அந்த பெண் இறந்த சோகத்தை என் நண்பருடன் எப்படி பகிர்ந்து கொள்ளுவது என்ற பக்குவம் இல்லாமல் தவித்து,அந்த பெண் மரணத்திர்க்கு முன் ஒரு கடிதம் எழுதினால், எப்படி இருக்கும் என்று நான் எழுதிய கடிதம் படித்து நண்பர்கள் வீடே அழுதபோது ஏதோ கொஞ்சம் காதல் தோல்வியின் வலி புரிந்த மாதிரி இருந்தது .அது எனக்கு எற்படாதவரை...
 
 வேட்டை நுட்பம் தெரிந்தவன் ஆனால்..
      அதர்க்கு சில ஆண்டுகளுக்கு பிறகு திண்டுகல்லுக்கு அருகே மேட்டுர் டேம் காட்டுப்பகுதியில் சுமார் பதினெட்டு வயதுள்ள பையன், வேட்டை நுட்பம் தெரிந்தவன் .கொக்கு,காட்டுப்பூனை,காட்டுப்பன்றி , முயல் ,என மிக பல வேட்டை பறவை மற்றும் மிருகங்களை - அனாயசமாக தனது சொந்த தயாரிப்பான பால்ரஸ் குண்டுகளை நிரப்பி வேட்டை ஆடுவதில் கில்லாடி அவன் .தனது காதல் தோல்வியில் தற்கொலை செய்துகொண்டபோது காதலின் ஆழம் சுத்தமாக புரியவில்லை..அது எனக்கு நடந்த பின்னால் கூட .

 எப்படி இந்த அலங்காரம்?
இதர்க்கு அடுத்து சில ஆண்டுகள் பாண்டிச்சேரியில் தங்கியிருந்தபோது பெண்பார்க்கும் நிகழ்சியில் ஒரு நண்பரின் நண்பன் கலாட்டா செய்து விசாரணைக்கு போனபோது அவள் சம்மதமில்லாமல் எப்படி இது நடக்கிறது என்று அந்த பையன் அங்கு போய் கேட்டானாம் .அப்பா ஏற்பாடு என்று சொன்ன பெண்ணை அப்புறம் எப்படி இந்த அலங்காரம் என்று அடித்து இருக்கிறான் .காதல் குருட்டுத்தனமான தைரியம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.ஆம் அந்த துணிவு பாடம் புகட்டியது.

 வாழ்கையை நேசிக்க தெரியாதவன் !
            காதலை தர சொல்ல முடியாது.அது கிடைக்காதபோது எங்கோ தூக்கி வீசபட்ட உணர்வை த்ந்தாலும் காதல் மட்டுமே வாழ்கை இல்லை. மறுக்கபட்ட காதல் தோற்றுப்போன காதலுக்கு நிகர் இல்லை.அதர்க்கு மரணம் தீர்வும் இல்லை .தன்னுடைய வாழ்கையை நேசிக்க தெரியாதவன் காதலுக்கு லாயக்கில்லாதவன் அதுமட்டுமல்ல காதலை காதலாக பார்க்க தெரியாதவன் நிஜ வாழ்கைக்கு பொருத்தமானவன் இல்லை . 

 அந்த சோகத்தை..
          சிலர் இன்னும் வேடிக்கை செய்வதுண்டு .அந்த சோகத்தை சிகரெட்,தண்ணி,கோபத்தில் கெட்ட சகவாசம் ,என்ற வடிகால் மூலம் தீர்க்கமுயற்சிப்பது..அதாவது தன்னை விரும்பிய காதலை தன்னை அழிப்பதுமூலம் சந்தோசிப்பது...சில நாட்கள் அது சரி..
           ஆனால் அதைவிட சில பேர் தியானம் செய்து தீர்க்க கிளம்பி இருப்பது இன்னும் வேடிக்கை.என்னதான் இமயமலை போனாலும் கண்ணைமூடி உட்கார்ந்தால் உன் சுமை கூடவேதானே வரும்..

 சும்மா டைம்பாஸ்!
 
          அது அந்த காலம் .இப்போல்லாம் சும்மா டைம்பாஸ் அவ்வளவுதான் என்று வாய் சொன்னாலும் மனசின் இடறல் தொடரத்தானே செய்கிறது இந்த நூற்றாண்டிலும் ..ஏதோ குறுகுறுப்பு விடாது துரத்துகிறதே! ஏன்?

 காதல் வலி!
            எதுவுமே விளங்காமல்தான் எழுதுவதுதான் என் நோக்கமா?  இல்லை.காதல் வலி அனுபவிக்க பழகலாம் வாருங்கள் ...

வியாழன், 14 பிப்ரவரி, 2013

காதல் நீண்டகால பயணம்..


காதலர் தினமா ?



THE BIBLICAL MEANING OF LOVE
1 JOHN 4:7-10
Purposeful commitment to sacrificial action for another         
(மற்றொருவருக்காக அர்பணிக்கும் நோக்கமுள்ள செயல் – காதல் )

                மேற்படி வாசகத்தை, எந்த வயதில் எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதை விட என்னதான் சொல்லுகிறார்கள் என்று அறியும் முன் இந்தியாவின் துயரம் – அரசியல் களம் இப்போது இதை வழக்கம்போல் கையில் எடுத்துகொண்டு ஆடுவது  மிக பெரிய துயரம் .( படிக்க முந்தைய செய்தியை...)

       
  திரைப்படங்கள் ஒருபக்கம் , சில புத்தகங்கள் வேறு ஒருபக்கம் , அவசர கால வளர்ச்சி  கண்டபக்கம் ...இதில் காதல் படும்பாடு அரசியலை விட பாவம் .

           நமது காதல் என்ற தேர் - எப்படியோ இப்போது ஆணுக்கும் + பெண்ணுக்கும் ( வயதை இன்னும் தமிழ் சினிமா தீர்மானிக்க வில்லை ) இருவருக்கும் மட்டும் நடக்கும் ஒரு வேடிக்கை விசயமாக ஆக்கி தெருவில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள்.


            காதலை கடவுளிடம் எதிர்பார்த்த ஆண்டாளை மறந்து போனது கூட தவறில்லை .நமது சுஜாதா சொன்னாற் போல அது ஹார்மோன்களின் சாகஸம் என்றோ இன்னும் கொஞ்ச தூரம் போய் இதை ஆராய்ந்து பகர்ந்த திரு செமிர் ஜெகியின் கட்டுரை (http://earthsky.org/human-world/semir-zeki-beauty-is-in-the-brain-of-the-beholder) சொல்வதுபோல அது மூளையில் உள்ள புட்டமன், இன்சுலா ஆகிய பகுதிகள்தான் காதல் உணர்வுகளுக்கு காரணம் என்று கூட சொல்லி சந்தோசப்படலாம். 


             ஆனால் இந்த வார்த்தை எதோ ஒரு வசீகரத்தை தந்து கொண்டு இருப்பதால்தான் அது இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது .அது மட்டுமல்ல அது இன்னும் முழுமையாக படிக்கப்பாடாத புத்தகம் . அதன் அர்த்தம் படிப்பவர்களை பொறுத்து மாறுபடலாம் - காலத்திர்க்கு தகுந்தார்போல . ..


                 ஆம் உலகின் முதல்  கவிதை வடிவிலான காதல் கடிதம் சுமேரிய நாட்டின் உயர்நிலை பாதிரியான இன்னானா என்ற பெண்ணால் தன்  கணவனுக்காக இக்கவிதையை முதல் இரவில் எழுதி இருக்கின்றார். ( http://mristanblue.wordpress.com/first-love-letter-of-the-world-istanbul-archaeological-museum/
  ) கி.மு 2200களில்  எழுதபட்ட அந்த காதல் கவிதை  புரிந்துகொள்ளவே 58 வருடங்கள் ஆனதாம்.

                               

                     எனவே காதல் என்பது ேடல் நிந்த   உண்ணதமான உணர்வு என்பதை  அதன் நீண்டகால பயணம் சொல்கிறது...


புதன், 13 பிப்ரவரி, 2013

அந்த நம்பிக்கை எனக்கும் பிடித்திருந்தது ..

           
சமீபதில் எனது ! ( கம்பெனி ) ஏர்டெல் பயன்பாட்டில் தவறுதலாக ரூ-198 /- பிடிக்கபட்டது.அதர்க்கு புகார் அளித்து இருந்தோம்.அதர்காக அழைத்தார்கள்.அதர்க்கான தொகை ரத்து செய்ததாக சொல்லிவிட்டு அதர்க்கான Message வரும் ,அத்துடன் எங்கள் சேவையை பற்றி .கேட்போம் ,என்று இப்படி கேட்டார்கள்.

."Are you happy with resolution .We provided for your airtel mobile? text YES else NO to 247 "
நான் Yes என்று அனுப்பினேன்.மீண்டும் ,

“ Thank you for your feedback. We would like to know more about your experience .Would you like to response to a few questions? Reply with YES or NO (toll free )"
அடபாவிகளா மீண்டுமா ?

"Q 1of 3:Are you satisfied with the time taken to resolve your query / problem ? Reply with YES or NO."
Yes அனுப்பினேன். அடுத்து ..

“Q2 of 3 .was the Executive  knowledgeable to provide information / resolution that you needed? Reply with YES or NO.? "
Yes அனுப்பினேன்.அடுத்து...

“Q3 of 3 .Are you satisfied with the overall quality of the resolution provided to you ? Reply with YES or NO. "
NO அனுப்பினேன்  ஒரு கடுப்பில் ..

உடனே ஒரு Message " Thank you for your valued feedback .It will assist us to serve you better ." 

முதல் SMS பதிலுக்கு NO போட்டு இருந்தால் இத்தனை துன்பம் இல்லை .என்னதான் Auto Reply Message ஆக இருந்தாலும் இது கொஞ்சம்  ஓவர் இல்லையா 

சில மாதங்களுக்கு முன்னால் ஒருவர் Customer care கூப்பிட்டு தன்னுடய டூ வீலர் ப்ஞ்சர் ஆகிவிட்டது ,வல்கனைசிங் நல்லதா / டூயூப் மாத்திடலமா ? என்று கேட்டாராம் .எங்களிடம் இதைப்போய் ஏன் கேட்கிறீர்கள் என்று காரணம் கேட்டதர்க்கு என்னுடய ஃப்ரண்ட் சொன்னான் எது கேட்டாலும் கரெக்ட்டா ஒரு பதில் சொல்லுவாங்கன்னு . ( எப்படீ? )

அந்த நம்பிக்கை  எனக்கும்  பிடித்திருந்தது ..

சனி, 13 அக்டோபர், 2012

உதவி ஆய்வாளரின்- பணி ஓய்வு


                           சென்ற ஞாயிறு எனக்கு பழக்கமான ஒரு உதவி ஆய்வாளரின் ( Sup Inspector ) அவர்களின் பணி ஓய்வு ( Retirement ) விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றேன் .சுமார் 34 வருடம் பணியிலிருந்து இருக்கிறார் .அவருடன் ஒரு நகை காணமால் போன வழக்கில் திரும்ப பெரும் தேடலில் மூன்று நாட்கள் இருந்திருக்கிறேன் .அந்த பழக்கத்தில் அவரின் பணி  ஒய்வு விழாவுக்கு அழைத்திருந்தார் .



                      அவருடன் இருந்த பழகிய நாட்களில் அவரின் குற்றவாளிகளின் குற்றம் முறைகளை எந்த செக்சனில் பதியலாம் என்பதில் அத்துப்படியனவர் .ஒரு குற்றம் காவல்துறையால் முதல் முறை பதியப்படும்போது தவறான முறையில் பதியப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு எளிதாக எதிர் தரப்பு வாதத்தில் தோற்று போக்கும் அபாயம் இருக்கிறது .எனவே இதில் அவரின் அனுபவம் பல குற்ற முறைகளை சந்தித்த அனுபவத்தில் அறிந்துகொண்டது .தமிழகத்தின் பல இடங்களில் பணிபுரிந்த அனுபவம் இருக்கிறது .அவர் வேலை பார்த்த இடங்களில் உள்ள FIR போடுவது சம்பந்தமாக இன்னும் அவருடன் தொடர்புகொண்டு சந்தேகம் கேட்டுகொண்டே இருக்கிறார்கள் .


                             விழாவுக்கு தலைமை தாங்க வந்தவர் திருப்பூரின் டி .எஸ்.பி. திரு. ராஜாராம் .அவர் பயிற்சியில் சேர்ந்த முதலாக அவரை அறிவதாகவும் திறமையை பாராட்டி பேசினார் .விழா முடிந்தவுடன் கிளம்பாமல் இருந்து மிக சாதாரணமாக கலந்து பேசி உணவருந்திவிட்டு DSP கிளம்பியது ஆச்சர்யாமாக இருந்தது.மிகஎளிமையான மனிதர் .                                                                                                               பலரும் அவருடன் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள் ,பலரின் வேண்டுகோளும் அவரிடம் வைத்தார்கள் .அதாவது இனியும் உங்களிடம் தொடர்புகொள்வோம் எங்களுக்கு உதவ வேண்டும் என்பதை

                             ஆனால் ஒருவராவது அவரின் பணிபுரிய ஆரம்பித்த ஆரம்பம் முதல் அவரின் வேலை பார்த்த இடம் ,அவரின் சிறப்பான அனுபவம் பற்றி எடுத்து பேசவில்லை . அதிலும் எங்கெல்லாம் அவர் பணிபுரிந்தார் என்ற தகவல் கூட சொல்லவில்லை என்பது எனக்கு  ஏன்  என புரியவில்லை .!


                                  .  விழா நாயகர் அவரிடம் அவரின் குடும்பத்திலிருந்து யாரும் வரவில்லையே என கேட்டபோது அவர்களுக்கு என் பணியிலிருக்கும் பக்கம் கூட வரமாட்டார்கள் எனும்போது ,அவரின் ஆதங்கம்  வெளிப்பட்டது .      

  அடுத்து தனது மகனின் திருமணத்திற்க்கு பிறகு ஏதாவது பணியில் சேரவேண்டும் என தெரிவித்தார் .அவரிடம் விடை பெற்று வரும்போது எனக்கு பல கேள்விகள் இருக்கத்தான் செய்தது .

செவ்வாய், 9 அக்டோபர், 2012

Hamara bajaj caliber


                                     எனது 1999 வருட தயாரிப்பான Bajaj Caliber  தோழனை  பிரியும் நேரம் வந்து விட்டது .இனியும் எனக்காக அவன் உழைத்து தேய்ந்தது போதும் என்றும் , இனியும் என்னோடு மாதம் 1600 கி.மீ.ஓடமுடியாத நிலை  அவனுடயதாகிவிட்டது .இனி செலவழித்து பிரோயோசனம் இல்லை என்று மெக்கானிக் கையை  விரிக்க , புதிய வண்டிக்கு மொத்தமும் கட்ட வாய்ப்பு குறைவு .பாதி மனதுடன் Hero Show Room - Exchange  Offer கேட்டதற்க்கு மிக அனாயசமாக சும்மா ஐந்து ரூபாய்க்கு( 5000) எடுத்தக்கலாம் அதிலும் TN 58 வண்டி எடுப்பதில்லை என்று வேண்டா வெறுப்பாய் சொன்னதை கேட்டதும் ,எனக்கு எங்கோ தூக்கி எறிந்தது போல இருந்தது .

                                     சரி Bajai Show Room போனேன் .அங்கும் இதே போல பேச இனி எனக்கு இதுவே போதும் என்று போய்கொண்டு இருந்தபோது , Dream Yuga குறுக்கிட்டது .செய்தி பேப்பரில் பார்த்து நேரில் விலையை விசாரித்தால் எனக்கும் அதற்கும் உள்ள தூரம் பல மைல்  என விலகிவிட்டேன்

                            
   .நண்பர் ஒருவருடன் வேறு வேலையாய் போய்க்கொண்டு இருந்தபோது ,TVS Show Room போனோம் .உங்கள் பழைய  வண்டி என்றார்கள் ,மன்னிக்கவும் அதுபற்றி பேசவேண்டாம் என்றேன் .காரணம் கேட்டார்கள் .நீங்கள் கேட்பது எனக்கு கோபம் வரலாம் என்று சொல்லியும் அந்த பெண் விடுவதாக  இல்லை .வண்டி மதிப்பிடும் ஒருவரை ஓட்டி பார்க்க சொல்லி என்னிடம் வந்து எவ்வளவு தருவீர்கள் என்றார்கள் .எனக்கு அதில் ஒரு நேர்மை இருப்பதாக பட்டது .சொன்னேன் .அதை அப்படியே ஒத்துக்கொண்டார்கள் .எனக்கு ஆச்சர்யம் .

                             என் சாமான்ய புத்தி சில கேள்வி கேட்டது .அப்படியானால் Extra Fittings , Registration Fees ,Insurance என்று வேறுபக்கம் தாக்குவார்களோ ?. கேட்டுவிட்டேன் .இல்லை பயப்படவேண்டாம் . அப்படியேதும் இல்லை என்றார்கள் .சரி  வண்டி  தேர்வு செய்ய போகிறீர்கள் என்றதும் இப்போது புது தொழில்நுட்பத்துடன் களம்  இறங்கி இருக்கும் Sport கேட்டேன் .ஐம்பதாயிரம் வரும் என்றார்கள் .என் பழைய வண்டியின் Original R.C Book கேட்டார்கள்


,கொடுத்துவிட்டு ,அடுத்தநாள் என்னுடை ஆஸ்த்தான  மெக்கானிக்கை அழைத்துக்கொண்டு வண்டி தேர்வு செய்ய போனால் அவர் Sports  வேண்டாம் .உங்கள் வேலைக்கும் ,மிதமான வேகத்திற்க்கும் ,2012 Star City”. TVS Star City
போதும் என்று சொல்லி  அதிலும் CVTI ES தொழில்நுட்பம் அருமையாக   பேசப்படுகிறதே ,என்று முடிவெடுத்தோம் .

                                  கடந்த 28 - 09- 2012 எடுக்க போனோம் . கீழ் தளத்தில் Extra Fittings மாட்டிக்கொண்டு இருக்கும்போது ,Invoice தயாராய் கொண்டுஇருந்தது .அந்த தருணம் வந்தது . இதுநாள்வரை என்னையும் ,என் குடும்பத்தையும் சுமந்து காத்து வந்த Bajaj Caliber இன்று இப்போது என்னை விட்டு போக போகிறது .என்னிடம் அந்த வண்டி வந்து சுமார் ஆறு வருடம் மட்டும்தான் ஆகி இருக்கும் .ஆனால்  வீட்டில் உள்ளவர்கள் நம்மிடம் காட்டும் அக்கறையை விட ஒரு படி மேலே சென்று மற்றவர்களிடம் என்னை காத்துவந்த hamara bajaj caliber என்னை விட்டு போக போகிறது .

                                   இந்த வண்டியை 2006 ல் வாங்கியபோது ,முதல் முறையாக சொந்தருக்கு ஊருககு 125 கி.மீ.தொலைவிலுள்ள திண்டுக்கல் போய்விட்டு` பல்லடம் வழியாக திருப்பூர்  திரும்பும் போது பெட்ரோல் பங்கிற்கு  சுமார் 9 கி.மீ இருக்கும் நிலையில் பெட்ரோல் தீர்ந்து விட்டது .வண்டியை  தள்ளிக்கொண்டு குடும்பமே இருட்டில் நடந்து கொண்டு இருந்த போது அந்த வழியே குடும்பத்துடன் வந்த ஒரு ஆம்னி நின்று ,அவர்கள் அனைவரும் இறங்கிகொண்டு என்னுடன் பெட்ரோல் பங்க வந்து பெட்ரோல் வாங்கி என் வண்டியில் ஊற்றிய பின்னரே கிளம்பி போனார்கள் ,அடுத்தமுறை பல்லடம் - சேட பாளையம் வழியாக மாத பலசரக்கு பொருள் வாங்கி விட்டு குடும்பத்துடன் வரும் வழியில் இரவு 10 மணிக்கு பஞ்சர் .அதுவும் பல கி.மீ தள்ளும் நிலை ஆனால் அங்கிருந்த ஒருவர் தன்னுடைய TVS 50 எடுத்துக்கொண்டு என்னுடன் பல இடம் பஞ்சர் பார்க்க முயற்சி செய்தார் .அதிலும் அவர் இரவு வேலை பார்ப்பவர் .உணவுக்கு -ஹோட்டல் வந்தவர் .முடிவில் அவர் வேலை பார்க்கும் கம்பனியில் பஞ்சர் வண்டியை  விட்டு விட்டு அவர் வண்டியை எடுத்துக்கொண்டு வீடு போனோம் .இன்னும் பல ..சோதனைகளை கடந்து நின்ற அந்த வண்டியை பிரிந்து போக போகிறேன் ..


                     என் மெக்கானிக்கிடம் முன்னரே சொல்லிவிட்டதால் அவர் Show Room விட்டு வெளியே நின்றுகொண்டார் .நான் அழுதுவிடுவேன் என்பது தெரியும் ஆனால் அந்த அளவுக்கு போகும் நிலை வரும் என்று தெரியாது .என்னிடம் அந்த Invice கொடுக்கவந்த பெண் பயந்து போய்விட்டது .என்ன சார் ஆச்சு ? என்ற போது  அப்போதும் என்னிடம் பதிலுக்கு அழுகை கலந்து என் பழைய வண்டி என்றேன் ,அது மட்டுமே  வந்தது.அந்த  பெண் ஒரு மாதிரியாக ஆகிவிட்டது .ஆனாலும் என்னை சமாதானப் படுத்தியது .சார் உங்கள் பழைய வண்டி ஒரு புதுவண்டி தந்துதானே போய்  இருக்கிறது .வருத்தபாடாதிங்க என்றது .

                      நான் எழுந்து ஓரமாக நின்று கொண்டு முடிந்தவரை அழுதேன் .என்னை போல சாதாரண வர்க்கம் வேறு ஏதாவது இருக்க முடியுமா என்று தெரியவில்லை .

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

சொந்த வீட்டிற்கு வழி ...


                              ஏதோ  ஆன்மீக தலைப்பை போல இருந்தாலும் இது ஒரு சுய அவஸ்தை  எனக்கு .பலவருடம் இந்த அவஸ்த்தையை சுமந்தாலும் பாரம் மட்டும் குறையவில்லை .ஒரு சிலருக்கு ஒருமுறை சென்ற வழியை வாழ்நாளில் எப்போது மறுமுறை சென்றாலும் ஞாபகம் வைத்துகொள்ளும் திறமையும் ,தந்திரமும் தெரியும் .நான் அப்படியில்லை .பூஜ்யம் .அது பற்றித்தான் இந்த பகுதி

                           மதுரை  R.I வகுப்பு இரண்டு மாதத்திற்க்கு பத்து  நாட்கள் நடக்கும் போதெல்லாம் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் வரமாட்டார்கள் .இதை முதல் முறை புரிந்து கொண்டு ,பாண்டிச்சேரியில் பணிபுரியும் நண்பரிடம் சொன்னபோது அப்படியானால் முதல் வகுப்புக்கு போ ,வருகை பதிவேடும் எட்டு நாட்களுக்கு ரூபாய் 80 /- கொடுத்துவிட்டு பாண்டிச்சேரிக்கு பஸ் ஏறிவா என்று "நல்ல"அறிவுரை தந்தார் .வருகை பதிவேடு இல்லாவிட்டால் தொழில் பழகுனருக்கான இறுதி தேர்வும் எழுத முடியாது ,நான் தொ.ப.வேலை செய்யும் பழனி ராணிமங்கம்மாள் போக்குவரத்தில் அந்த நாட்களுக்கு உறிய  சம்பளமும் பெற முடியாது ( சம்பளம் மாதம் 750 /-)


                                                    அதன்படி நானும் திண்டுக்கல் -திருச்சி -விழுப்புரம் போனேன் .அங்குள்ள பேருந்து நிலையத்திலிருந்து பாண்டிச்சேரி என்ற பெயரில் வரும் வண்டிக்காக காத்திருந்தேன் .அப்போது செல் வசதி இல்லை என்பதால் நான்குமுறை தொலைபேசியில் காத்திருப்பதாக அவருக்கு சொன்னேன்  .ஒன்றரை மணிநேரம் காத்திருந்து நண்பரிடம் போய்  சேர்ந்ததும் நண்பர் கேட்டார் .நீ போன் செய்தபிறகு மூன்று வண்டி வந்ததே ஏன் வரவில்லை என்றபோதுதான் தெரிந்தது பாண்டி ,புதுவை ,புதுச்சேரி என்ற மேலும் பல பெயர்கள் இருப்பதாக .போச்சா , ஆரம்பமே இப்படியா ?

                                          நண்பரின் வேளைப்படி சில சமயம் காலையில் சென்றுவிட்டால் மாலைதான் திரும்புவார் .அதுவரை நான் இளையராஜாவின் How to Name It ,மற்றும்  Mozart, Beethoven என்று அப்போது சோனி வாக்மேனில் கேட்டுக்கொண்டு சொக்கி கிடப்பேன் .

அதிலும் நண்பர் சிம்பொனி கேட்பதற்கு கண்ணை மூடிக்கொண்டு  உயரமான நீண்ட, பரந்த இடத்தில புல் வெளியில்  நடப்பது போல கற்பனை பண்ணிக்கொள்ளவேண்டும் என்பார் .அதுவும் Breave Heart படத்தில் மெல்கிப்சன் அந்த திமிரான குதிரையில் ஒரு உயர்ந்த புல்வெளிக்கு குதிரையை செலுத்துவதுபோல் காட்சி வரும் ,அதை உதாரணமாக சொல்வார் .என்னால் அப்படி காட்சியுடன் உணர முடியவில்லை கடைசிவரை !( அப்படிதான் ரசிக்கவேண்டும் என்று பலநாள் முட்டாள்தனமாய் நம்பியிருக்கேன் -   என்பது வேறு விசயம் )

                                               ஒருநாள் நண்பர் வெகு காலையில் போனதால் நல்ல பசி .மாலை வீட்டை விட்டு வெளியே வந்தேன் .புதுவைக்குள் -விழுப்புரம் வழியாக நுழையும் போது ,மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின்  சிலைக்கு அடுத்து (கடலூர் சாலை செல்லும் வழியில் ) குண்டு சாலையிலிருந்து மெயின் வந்து காலை  மதியம் இரண்டுக்கும் சேர்த்து உணவு உண்டபின் வரும் வழி தொலைந்து போய்விட்டது .நானும் எந்த இடத்தில திரும்ப வேண்டும் என பலமுறை நடந்தும் ,அந்த வீதி கிடைத்தபாடில்லை .வெறுத்துபோய் மீண்டும் மெயின்  ரோடு வந்த பொது .சுத்தமாக் வெறுத்துப்போன நிலையில் ஒரு யோசனை பளிச்சிட்டது .எப்போதோ வேறு ஒரு நண்பரின் சகோதரர்  அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதாக பேசிக்கொண்டது ஞாபகம் வந்தது .

                                                       நல்லவேளை மெயின் ரோட்டில் இருந்ததால் தயங்கி தயங்கி கண்டுபிடித்துவிட்டேன் .நேரிடையாய் கேட்டால் மானம் போய்விடுமே அதனால் மெல்ல வேறு விசயத்தை பேசிக்கொண்டு நடுவே அவரிடம் நண்பரின் வீட்டுக்கு எது ஈசியா போகலாம் என்று ஏதோ G .K  கேள்விபோல கேட்க்க அவர் வழி  சொல்ல மெல்ல வந்து சேர்ந்தேன் .
இன்றும் ,ஐந்து முறை திருப்பூரில் உள்ள சொந்தகார வீட்டுக்கு - நான் தேடி அலைவது வழக்கம் கடைசியில் செல்லில் அழைத்து கூப்பிட்ட பிறகு அவர்கள் வந்துதான் அழைத்து செல்கிறார்கள்  எப்படி ?தெரிந்து போச்சே !
                                                 
                                         மறதி நோய்  ,ஒருவேளை மட்டும் பல்துலக்குபவர்களுக்கு வருவதாக  http://www.eegarai.net/t88963-3 பதிவில் படித்தேன் .அப்படியானால் சில ஆட்கள் பல்லே  விளக்குவதில்லை  .அவர்கள் மறந்து போய் யார் வீட்டுக்கு போகிறார்கள்  காலையில் யார் வீட்டிளிருந்து வருகிறார்கள் ? யோசிக்கவேண்டும் .